சிவகாசியில் விசிக ஆர்ப்பாட்டம்

சிவகாசி, ஆக. 3: ஆணவப் படுகொலையைக் கண்டித்து சிவகாசியில் விசிக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லையில் நடைபெற்ற ஆணவப் படுகொலையைக் கண்டித்து சிவகாசி மாநகர மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகாசி மாநகர மாவட்ட செயலாளர் செல்வின் ஏசுதாஸ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம்...

கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

By MuthuKumar
02 Aug 2025

சிவகாசி, ஆக. 3: சிவகாசி ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் 2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்த சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் மூத்த குடிமகன் சின்னையன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலருமான மீனாட்சி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சமூக தணிக்கையின் நோக்கம் குறித்து...

வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை விழிப்புணர்வு கூட்டம்

By MuthuKumar
02 Aug 2025

விருதுநகர், ஆக. 3: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வணிகவரித்துறை சார்பில் தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை குறித்து சிறு, குறு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் மூலம் சிறு மற்றும் குறு வணிகர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யும் வகையில்...

மூளைச் சாவு அடைந்த ஆட்டோ டிரைவர் உடலுறுப்பு தானம்: 4 பேருக்கு மறுவாழ்வு

By Ranjith
01 Aug 2025

  விருதுநகர், ஆக.2: சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த ஆட்டோ ஓட்டுநரின் உடலுறுப்புகள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டது. இதன் மூலம் 4 பேர் பயனடைந்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சங்கரேஸ்வரன்(46). இவர், கடந்த 29ம் தேதி நடந்த சாலை விபத்தில்...

சாத்தூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

By Ranjith
01 Aug 2025

சாத்தூர், ஆக.2: சாத்தூர் ரயில் நிலையத்தில் காவல் உதவி செயலி குறித்து போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாத்தூர் நகர் காவல்நிலைய எல்லைப்பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கள் அதிகம் கூடும் பஸ்நிலையம், ரயில் நிலையம், மார்க்கெட்,...

அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாட்டம்

By Ranjith
01 Aug 2025

விருதுநகர், ஆக.2: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. ஆக.1 முதல் 7ம் தேதி வரை உலகம் முழுவதும் தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தாய்ப்பால் ஊட்டுவதற்கு முன்னுரிமை அளிப்போம், ஆதரவளிக்க நிலைத்த அமைப்புகளை உருவாக்குவோம் என்ற கருத்துருவின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு மருத்துவக்...

முதல்வர் திறந்து வைத்தார் ரூ.1.32 கோடியில் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு அலுவலகம்

By Ranjith
31 Jul 2025

விருதுநகர், ஆக.1: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.1.32 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன்பின், எஸ்பி கண்ணன் முன்னிலையில் கலெக்டர் சுகபுத்ரா கட்டிடத்தில் குத்து விளகேற்றி மரக்கன்று நட்டு வைத்தார். கலெக்டர் கூறுகையில், விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும்...

அஞ்சலகங்கள் நாளை இயங்காது

By Ranjith
31 Jul 2025

  விருதுநகர், ஆக.1: அட்வான்ஸ் போஸ்டல் டெக்னாலஜி 2.0 எனும் புதிய தொழில்நுட்ப சாப்ட்வேர் அறிமுகப்படுத்த இருப்பதால் அஞ்சலகங்களில் நாளை பரிவர்த்தனை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் அஞ்சல்துறை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சுசிலா தகவல்: அட்வான்ஸ் போஸ்டல் டெக்னாலஜி 2.0 எனும் புதிய தொழில்நுட்ப சாப்ட்வேர் அனைத்து அஞ்லகங்களிலும் அறிமுகப்படுத்த இருப்பதால் வரும் ஆக.4ல்...

காரியாபட்டி பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை பிறந்தது

By Ranjith
31 Jul 2025

விருதுநகர், ஆக.1:காரியாபட்டி ஒன்றியம் கூவர்குளம் கிராமத்தை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் முத்துகருப்பன் மனைவி ஐஸ்வர்யா(23) நேற்று முன்தினம் இரவு பிரசவ வலியால் துடித்துள்ளார். திருச்சுழி அரசு மருத்துவமனையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்று ஐஸ்வர்யாவை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு வரும் வழியில் ஐஸ்வர்யாவிற்கு குழந்தை...

மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரம் சேகரிப்பு பணிக்கு ஒத்துழைக்க வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள்

By Ranjith
30 Jul 2025

  விருதுநகர், ஜூலை 31: வீடு, வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்கள் சேகரிக்கும் பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா வெளியிட்ட தகவல்: மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று சேரும் வகையில் உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில்...