நாய் கடித்து 4 பேர் காயம்

வத்திராயிருப்பு, டிச. 4: வத்திராயிருப்பு மேல தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் மகாராஜபுரம் பகுதிக்கு சென்ற போது அங்கிருந்த நாய் கடித்துள்ளது. இதேபோன்று மகாராஜபுரத்தை சேர்ந்த ராமராஜ்(67), தம்பிபட்டியை சேர்ந்த சம்பத்கிரி(46), வத்திராயிருப்பு மேலப்பாளையத்தில் கருப்பசாமி(27) ஆகியோரையும் நாய்கள் கடித்தன. இவர்கள் 4 பேரும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்பு வீட்டிற்கு சென்றனர்....

பட்டாசு தொழிலாளி மீது வழக்கு

By Karthik Yash
03 Dec 2025

சிவகாசி, டிச.4: சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி முத்தையா. இவருக்கும் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் முத்தையாவும் அந்த சிறுமியும் அதே பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சிறுமி...

கோயில் காவலாளிகள் கொலை வழக்கு 2 பேரை குண்டாசில் கைது செய்ய உத்தரவு

By Karthik Yash
03 Dec 2025

விருதுநகர், டிச. 4: ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்து அருளிய சுவாமி கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சுகபுத்ரா நேற்று உத்தரவிட்டார். ராஜபாளையம் நச்சாடை தவிர்த்து அருளிய சுவாமி கோயிலில் கடந்த நவம்பர் 11ம் தேதி இரவு நேர காவலாளிகளான பேச்சிமுத்து,...

கார்த்திகை விளக்கு விற்பனை ஜோர்

By Arun Kumar
02 Dec 2025

  திருப்புத்தூர், டிச.3: கார்த்திகையை முன்னிட்டு திருப்புத்தூர் காந்தி சிலை அருகில் மற்றும் அனுமார் கோவில் சந்து, மதுரை ரோடு, அண்ணா சிலை, நான்கு ரோடு உள்ளிட்ட பல இடங்களில் மண்களால் செய்யப்பட்ட பலவிதமான கார்த்திகை தீப விளக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று கார்த்திகை திருநாளை முன்னிட்டு நேற்று பெண்கள் ஆர்வமுடன் விளக்குகளை வாங்கி...

சிவகாசியில் அதிகமாக 88 மிமீ மழை பதிவு

By Arun Kumar
02 Dec 2025

  விருதுநகர், டிச.3: விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியில் அதிகபட்சமாக 88 மிமீ மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நவ.16ல் துவங்கி பெய்து வரும் நிலையில், கடந்த 4 நாட்களாக டிட்வா புயல் காரணமாக பெரும்பான்மையான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மேல் சிவகாசி, வில்லிபுத்தூர்,...

வீட்டில் பட்டாசு பதுக்கியவர் கைது

By Arun Kumar
02 Dec 2025

சிவகாசி, டிச. 3: சிவகாசி அருகே திருத்தங்கல் சுக்கிரவார்பட்டி ரோட்டில் திருத்தங்கல் எஸ்ஐ பாண்டியராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் கருப்பசாமி (48) என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு பட்டாசுகளை தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் மற்றும் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால்...

எச்ஐவி தடுப்பு பணிகளில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலம் கலெக்டர் தகவல்

By Arun Kumar
01 Dec 2025

  விருதுநகர், டிச.2: தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட எச்.ஐ.வி., எய்ட்ஸ் தடுப்பு பணிகளில் முன்மாதிரி மாநிலமாக உள்ளது என, கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்தார். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு அலகு இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சியுடன்...

வாலிபரை வெட்டி கொன்றவர் கைது

By Arun Kumar
01 Dec 2025

  மானாமதுரை, டிச. 2: மானாமதுரையில் நேற்று முன்தினம் முன்விரோதம் காரணமாக நடந்த கொலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே மொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவர் மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்கார் நகர் மேட்டுத்தெருவில் வசித்து வருகிறார்.  இவரது மகன் சதீஸ்குமார் என்ற பாண்டி (26) நேற்று முன்தினம்...

பைக்கில் புகுந்த கட்டுவிரியன்

By Arun Kumar
01 Dec 2025

  திருச்சுழி, டிச.2: திருச்சுழியில் பைக்கில் கட்டுவிரியன் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சுழி அருகே நாடாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி பாண்டியன். இவர் தனது வீட்டிற்கு முன்பாக பைக்கை நிறுத்துவது வழக்கம். நேற்று திருச்சுழிக்கு பலசரக்கு வாங்குவதற்காக பைக்கில் சென்றார். பொருட்கள் வாங்கிய பின்பு பைக்கில் பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக திருச்சுழி...

விருதுநகர் அருகே சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க மக்கள் கோரிக்கை

By MuthuKumar
30 Nov 2025

விருதுநகர், டிச.1: விருதுநகர் அருகே மேல சின்னையாபுரம் ஊராட்சியில் உள்ள சிறிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் அருகே மேல சின்னையாபுரம் ஊராட்சியில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் பெரும்பாலானோர், விவசாயம்...