செல்போன் பறித்த 4 பேர் கைது வேலூரில்

வேலூர், ஜூலை 31: வேலூர் விருதம்பட்டை சேர்ந்தவர் பாஸ்கர்(40). இவர் நேற்று வேலூர் பாலாற்றங்கரை சுடுகாடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென வழிமறித்த 4 பேர் அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில், வேலூர் வடக்கு போலீசார், வழிப்பறி நடந்த இடத்தில்...

ரயிலில் கடத்திய 9 கிலோ கஞ்சா பறிமுதல் காட்பாடியில் ரயில்வே போலீசார் சோதனை

By Karthik Yash
30 Jul 2025

வேலூர், ஜூலை 31: காட்பாடி வழியாக வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 9 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் கைப்பற்றி போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். காட்பாடி ரயில்வே சந்திப்பு பிளாட்பாரம் 1ல் நேற்று காலை 9.40 மணிக்கு வந்து நின்ற பிலாஸ்பூர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் காட்பாடி ரயில்வே எஸ்ஐக்கள் பத்மராஜா,...

தனியார் நிறுவன மேலாளர் மனைவியிடம் ரூ.20.91 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை காட்பாடியில் அதிக லாபம் ஆசைக்காட்டி

By Karthik Yash
30 Jul 2025

வேலூர், ஜூலை 31: காட்பாடியில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசைக்காட்டி தனியார் நிறுவன மேலாளரின் மனைவியிடம் ஆன்லைனில் ரூ.20.91 லட்சம் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேலூர் பழைய காட்பாடியை சேர்ந்தவர் தனியார் நிறுவன மேலாளரின் மனைவி. இவரது வாட்ஸ்அப்பிற்கு ஷேர் மார்க்கெட்டில் முதலீடு...

மேஸ்திரி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை வேலூர் கோர்ட் தீர்ப்பு இளம்பெண்ணிடம் பேசிய தகராறு

By Karthik Yash
29 Jul 2025

வேலூர், ஜூலை 30: இளம்பெண்ணிடம் பேசிய தகராறில் கட்டிட மேஸ்திரி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது. வேலூர் சைதாப்பேட்டை செரிப் அலி சுபேதார் தெருவை சேர்ந்தவர் குமார்(26). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ராஜி என்கிற ராஜேஷ்(35). இருவரும் கட்டிட...

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை வேலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

By Karthik Yash
29 Jul 2025

வேலூர், ஜூலை 30: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வேலூர் மக்கானை சேர்ந்தவர் கிண்டி(எ) இளங்கோவன்(49), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2021ம் ஆண்டு வேலூைர சேர்ந்த 15 வயது சிறுமியை அழைத்து ஆபாச சைகை காண்பித்து, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது....

ஊசி போட்டு தொழிலாளியை கொன்ற ஜார்க்கண்ட் வாலிபருக்கு ஆயுள் தண்டனை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வேலூருக்கு வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்தபோது

By Karthik Yash
29 Jul 2025

வேலூர், ஜூலை 30: வேலூருக்கு வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்தபோது, வந்து தொழிலாளியை ஊசி போட்டு கொலை செய்த ஜார்க்கண்ட் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கோர்ட் தீர்ப்பளித்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் அமிர்தம்பா(35). இவர் அதே மாநிலத்தைச் சேர்ந்த பாடோ ஓரன், நிக்கமல், அக்கீல்சர்மா, சுனில்குமார் ஆகிய 4 பேருக்கு வேலை...

இலங்கை தமிழர்களில் 120 தம்பதிகளின் திருமணங்கள் பதிவு அதிகாரிகள் தகவல் வேலூரில் நடந்த முகாமில்

By Karthik Yash
28 Jul 2025

வேலூர், ஜூலை 29: வேலூர் பதிவு மண்டலத்தில் நடந்த சிறப்பு முகாமில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த 120 தம்பதிகளின் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் நடைபெறும் திருமணங்கள் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, 2018 டிசம்பர் 10ம் தேதி முதல் திருமணம்...

கல்லூரி மாணவனின் 2 லேப்டாப்கள் திருட்டு வேலூர் புதிய பஸ் நிலையத்தில்

By Karthik Yash
28 Jul 2025

வேலூர், ஜூலை 29: வேலூர் புதிய பஸ்நிலையத்தில் கல்லூரி மாணவனின் 2 லேப்டாப்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் வேலப்பாடியை சேர்ந்தவர் விக்னேஷ்(19). காட்பாடியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் அவருடன் படிக்கும் மாணவி ஒருவரும் நேற்று முன்தினம் மாலை சென்னைக்கு செல்ல வேலூர் புதிய பஸ் நிலையம் வந்தனர்....

கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தையில் வியாபாரம் சூடு பிடித்தது ஆடி திருவிழாக்கள் முன்னிட்டு

By Karthik Yash
28 Jul 2025

கே.வி.குப்பம், ஜூலை 29: ஆடி திருவிழாக்கள் முன்னிட்டு கே.வி.குப்பம் ஆட்டுச் சந்தையில் வியாபாரம் சூடு பிடித்தது. இதில் ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடப்பது வழக்கம். இந்நிலையில் திங்கட்கிழமையான நேற்று வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா,...

வனத்துறை அலுவலகம் உள்ளே அறுந்து கிடந்த பட்டம் நூலில் காகம் சிக்கியது: பறவைகள் பாசப்போராட்டம், தீயணைப்பு துறையினர் மீட்டனர்

By Ranjith
27 Jul 2025

  ஒடுகத்தூர், ஜூலை 28: ஒடுகத்தூர் வனத்துறை அலுவலகம் எதிரே உள்ள மரக்கிளையில் அறுந்து கிடந்த பட்டம் நூலில் சிக்கி தவித்து கொண்டிருந்த காகத்தை தீயணைப்பு துறையினர் நேற்று போராடி மீட்டனர். ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு அண்ணா நகர் வனத்துறை அலுவலகத்தின் உள்ளே ஒரு மரக்கிளையில் அறுந்து கிடந்த பட்டம் நூலில் காகம்...