2 யூனிட் மணல் பறிமுதல் கட்டிட கான்ட்ராக்டர் கைது சத்துவாச்சாரியில்

வேலூர், ஆக.21: வேலூர் சத்துவாச்சாரியில் கட்டிடம் கட்டுவதற்காக ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து குவிக்கப்பட்டிருந்த மணல் கைப்பற்றப்பட்டு கட்டிட கான்ட்ராக்டர் கைது செய்யப்பட்டார். வேலூர் சத்துவாச்சாரி வஉசி நகரில் மத வழிபாட்டுத்தலம் கட்டுவதற்கான பணி நடந்து வருகிறது. இப்பணியை வேலூரை சேர்ந்த கட்டிட கான்ட்ராக்டர் முருகன்(52) என்பவர் எடுத்து செய்து வருகிறார். இக்கட்டிட பணிக்காக ஆந்திராவில்...

6 துணை ஆட்சியர்கள் பணியிட மாற்றம் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில்

By Karthik Yash
an hour ago

வேலூர், ஆக.21: வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 6 துணை ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் அமுதா உத்தவிட்டுள்ளார். தமிழகத்தில், பணியாற்றிய வரும் 57 துணை ஆட்சியர்களை நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் அமுதா உத்தவிட்டுள்ளார். இதில், வேலூர் தனித்துணை ஆட்சியர்(நில எடுப்பு) கண்ணப்பன்,...

ராணுவ வீரர் கண்ணெதிரே ரயிலில் சிக்கி தலை துண்டாகி மனைவி பலி காட்பாடியில் வழியனுப்ப வந்தபோது சோகம் ஐடி கார்டு கொடுக்க ஓடிச்சென்று தண்டவாளத்தில் விழுந்தார்

By Karthik Yash
an hour ago

வேலூர், ஆக.21: காட்பாடி ரயில் நிலையத்தில் வழியனுப்ப வந்தபோது, ஐடி கார்டு கொடுக்க ஓடிச்சென்று தண்டவாளத்தில் விழுந்து, ராணுவ வீரர் கண்ணெதிரே ரயிலில் சிக்கி தலை துண்டாகி மனைவி பலியானார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் பொய்கை கிராமம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன்(36), ராணுவ வீரர். இவரது மனைவி...

கழிவறை சுவற்றில் மறைத்து வைத்த செல்போன், பேட்டரி பறிமுதல் ஒரு வாரத்தில் 4 செல்போன்கள் சிக்கியது வேலூர் மத்திய சிறையில்

By Karthik Yash
19 Aug 2025

வேலூர், ஆக.20: வேலூர் மத்திய சிறையில் கழிவறை சுவற்றில் மறைத்து வைத்த செல்போன், பேட்டரியை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரு வாரத்தில் 4 செல்போன்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் கைதிகள் பீடி, சிகரெட், கஞ்சா மற்றும் செல்போன்களை பயன்படுத்துகிறார்களா என சிறை காவலர்கள் அடிக்கடி சோதனை நடத்தி...

வியாபாரியிடம் ரூ.5.31 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் கிடைப்பதாக கூறி

By Karthik Yash
19 Aug 2025

வேலூர், ஆக.20: ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் கிடைப்பதாக கூறி வியாபாரியிடம் ரூ.5.31 லட்சம் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்பாடி, கழிஞ்சூரை சேர்ந்தவர் அருண்குமார் (41). சாலையோரம் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூகவலைதளத்தில் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற...

25 ஆயிரத்து 599 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

By Karthik Yash
19 Aug 2025

வேலூர், ஆக.20: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் 25 ஆயிரத்து 599 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார். வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 20வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. வேந்தரும் கவர்னருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இதில் 187 முனைவர் பட்டமும், 35 இளங்கலை மற்றும் 24 முதுகலை பாடப்பிரிவு...

விவசாய நிலத்தில் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் தென்னை செடிகள் சேதம் பேரணாம்பட்டு அருகே பட்டப்பகலில்

By Karthik Yash
18 Aug 2025

பேரணாம்பட்டு, ஆக.19: பேரணாம்பட்டு அருகே பட்டப்பகலில் விவசாய நிலத்தில் புகுந்து ஒற்றை காட்டுயானை அட்டகாசம் செய்து, தென்னை செடிகளை முறித்து சேதப்படுத்தியது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சாரங்கல், அரவட்லா, கோட்டையூர், எருக்கம்பட்டு, குண்டலப்பல்லி, ரங்காம்பேட்டை, கோக்கலூர், ஜெங்கமூர், முத்துக்கூர், டிடி மோட்டூர், கொண்டமல்லி, பத்தலபல்லி போன்ற கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இங்குள்ள வனவிலங்குகள்...

இந்திய தேர்தல் ஆணைய பதிவில் இருந்து வேலூர் மாவட்ட அரசியல் கட்சி நீக்கம் கலெக்டர் தகவல் 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாததால்

By Karthik Yash
18 Aug 2025

வேலூர், ஆக.19: இந்திய தேர்தல் ஆணைய பதிவில் இருந்து வேலூர் மாவட்டத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட கட்சி நீக்கப்படுவதாக கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணைய பதிவில் இருந்து அரசியல் கட்சி பெயர் நீக்கப்படுவது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் பதிவுகளின்படி 2019ம்...

சிறுமிக்கு பாலியல் தொல்லை டெய்லருக்கு 5ஆண்டு சிறை வேலூர் போக்சோ கோர்ட் தீர்ப்பு விளையாடிக்கொண்டிருந்த

By Karthik Yash
18 Aug 2025

வேலூர், ஆக.19: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ கோர்ட் தீர்ப்பளித்தது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார்(40), டெய்லர். இவர் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி விளையாடி கொண்டிருந்த 12 வயது சிறுமியை அழைத்துச்சென்று பாலியல்...

பைக் சாகசத்தில் ஈடுபட்ட பெங்களூரு மெக்கானிக் போலீசார் வழக்குப்பதிவு

By Arun Kumar
17 Aug 2025

  வாணியம்பாடி, ஆக. 18: வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட பெங்களூரு மெக்கானிக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றுமுன்தினம் வாலிபர் ஒருவர் மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டார். குறிப்பாக பைக்கின் பின் சீட்டில் அமர்ந்தபடியும், படுத்தபடியும் வாகனத்தை ஓட்டினார்....