வேலூரில் இருந்து 250 போலீசார் ராமநாதபுரம் பயணம் தேவர் குரு பூஜையையொட்டி

வேலூர், அக்.28: தேவர் குரு பூஜையையொட்டி பாதுகாப்பிற்காக வேலூரில் இருந்து 250 போலீசார் ராமநாதபுரத்திற்கு பயணம் மேற்கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் இன்று முதல் 30ம் தேதி வரை முத்துராமலிங்கதேவரின் 63வது குருபூஜை விழா மற்றும் 118வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அதன்படி இன்று யாகசாலை பூஜையுடன் விழா தொடங்குகிறது....

கருவை கலைக்கும்படி காதல் கணவர் துன்புறுத்தல் எஸ்பி அலுவலகத்தில் இளம்பெண் புகார்

By Karthik Yash
27 Oct 2025

வேலூர், அக்.28: கருவை கலைக்கும்படி துன்புறுத்தும் காதல் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம்பெண் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தார். வேலூர் வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள். இவர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் வசந்தபுரம் பகுதியில் வசித்து வருகிறேன். பாகாயம் பகுதியை சேர்ந்த ராஜா மகன் அருணாசலம் என்பவரை...

தண்டவாளத்தை கடக்க முயன்ற தந்தை, மகன் ரயிலில் சிக்கி உடல் நசுங்கி பலி திருவாரூரை சேர்ந்தவர்கள் காட்பாடி அருகே

By Karthik Yash
27 Oct 2025

வேலூர், அக்.28: காட்பாடி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற திருவாரூரை சேர்ந்த தந்தை, மகன் ரயிலில் சிக்கி உடல்நசுங்கி உயிரிழந்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ்(40). இவரது மனைவி சாந்தி. தம்பதிகளுக்கு கிஷோர்(18) உட்பட 4 குழந்தைகள். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக வேலூர் மாவட்டம்...

2 பெட்டிக்கடைகளிலும் கைவரிசை: ஒடுகத்தூர் அருகே நள்ளிரவில் துணிகரம்

By Suresh
25 Oct 2025

ஒடுகத்தூர், அக்.26: ஒடுகத்தூர் அருகே நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும், 2 பெட்டி கடைகளிலும் பணத்தை திருடி சென்றுள்ளனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர்‌ அடுத்த வரதலம்பட்டு பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக வனப்பகுதியை ஒட்டியவாறு அணைக்கட்டு செல்லும் சாலையோரம் அரசு டாஸ்மாக் கடை...

கோர்ட்டில் ஆஜராகாத போக்சோ குற்றவாளி கைது: மைனர் பெண்ணிடம் காதல் டார்ச்சர்

By Suresh
25 Oct 2025

வேலூர், அக்.26:போக்சோ வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார்.வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்தவர் சிவரிஷி(20). இந்த ஆண்டு துவக்கத்தில் மைனர் பெண்ணிடம் காதல் டார்ச்சர் செய்ததாக வந்த புகாரின் பேரில், அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிவரிஷி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.தொடர்ந்து கோர்ட் வழக்கு விசாரணையில் ஆஜராகி...

பல்வேறு வீடுகளில் 37 சவரன் திருடிய வழக்கில் அடகு கடை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது

By Suresh
25 Oct 2025

பேரணாம்பட்டு, அக்.26: பேரணாம்பட்டு பகுதியில் பல்வேறு வீடுகளில் நகை திருடிய வழக்கில் அடகு கடை உரிமையாளர் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக வீடுகளில் ஆட்கள் இல்லாத நேரம் பார்த்து மர்ம நபர்கள் வீடுகளில் புகுந்து நகைகள், பணம் ஆகியவைகளை கொள்ளையடித்து சென்று வருவது வழக்கமாக...

காரில் கடத்திய 110 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் கைது காட்பாடியில்

By Karthik Yash
24 Oct 2025

வேலூர், அக்.25: காட்பாடியில் காரில் 110 கிலோ குட்கா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தை போதை இல்லாத மாவட்டமாக மாற்ற எஸ்பி மயில்வாகனன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து வேலூருக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் வடுகன்குட்டை...

இன்ஜினியரிங் சீட் வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது காட்பாடி தனியார் கல்லூரியில்

By Karthik Yash
24 Oct 2025

வேலுார், அக்.25: காட்பாடி தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் சீட் வாங்கி தருவதாக மோசடி செய்தவரை போலீசார் நேற்று கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த ஒருவரின் மகளுக்கு, காட்பாடி தனியார் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பொய்கையை சேர்ந்த இருவர் வேலூருக்கு அழைத்து வந்துள்ளனர். மேலும் அதற்கு 10 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் கூறியுள்ளனர்....

மோர்தானா அணையில் இருந்து 2,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம் எம்எல்ஏக்கள் மலர் தூவி வரவேற்பு கவுண்டன்யா மகாநதி வழியாக

By Karthik Yash
24 Oct 2025

குடியாத்தம், அக்.25: மோர்தானா அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி உபரிநீர் கவுண்டன்யா மகாநதி வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. எம்எல்ஏக்கள் மலர் தூவி வரவேற்றனர். ஆந்திர- தமிழக எல்லையோரம் அமைந்துள்ள மோர்தானா அணை வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாகும். ஆந்திரா வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி மோர்தானா அணை...

3 ஆறுகள் ஒன்று சேர்ந்து தண்ணீர் கொட்டும் நீர் வீழ்ச்சி ரம்மியமாக காட்சியளிக்கிறது ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை மலை கிராமத்தில்

By Karthik Yash
23 Oct 2025

ஒடுகத்தூர், அக்.24: ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை மலை கிராமத்தில் 3 ஆறுகள் ஒன்று சேர்ந்து தண்ணீர் கொட்டும் நீர்வீழ்ச்சி ரம்மியமாக காட்சியளிக்கிறது. வேலூர் மாவட்டத்தில் குளிர்ச்சியாகவும், இயற்கை எழில் கொஞ்சும் மலை கிராமங்களில் ஒன்று ஜவ்வாதுமலை தொடரில் அமைந்துள்ள பீஞ்சமந்தை மலை கிராமம். இந்த மலை கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட கானாறுகள், 30க்கும் மேற்பட்ட ஓடைகள்...