போலி பதிவெண் கொண்ட ஆம்னி பஸ் பறிமுதல் காட்பாடி அருகே சோதனை சாவடியில் அதிரடி ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கிய
வேலூர், செப்.14: ஆந்திராவில் இருந்து தினமும் திருவண்ணாமலைக்கு இயங்கிய தமிழ்நாடு போலி பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்சை காட்பாடி சோதனை சாவடியில் போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் அண்டை மாநில ஆம்னி பஸ்களில் போலியாக தமிழ்நாடு பதிவெண் பயன்படுத்தி ஏராளமான பஸ்கள் இயக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தது. புகாரின்பேரில் போக்குவரத்து ஆணையர் கெஜலட்சுமி, மற்றும் துணை...
காட்பாடிக்கு ரயிலில் வந்த 1,250 டன் ரேஷன் அரிசி கும்பகோணத்தில் இருந்து
வேலூர், செப்.14: கும்பகோணத்தில் இருந்து காட்பாடிக்கு ரயில் மூலம் 1,250 டன் ரேஷன் அரிசி வந்தது. இதை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல்...
ரூ.28 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை வியாபாரிகள் மகிழ்ச்சி ஒடுகத்தூர் வாரச்சந்தையில்
ஒடுகத்தூர், செப்.13: ஒடுகத்தூர் வாரச்சந்தையில் நேற்று ஆடுகளின் வரத்து அதிகரித்து ரூ.28 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை நடந்தது. வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடந்து வருகிறது. இங்கு சுற்றுவட்டார கிராமங்கள், வேலூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதனால் வாரந்தோறும் ரூ.20 லட்சம்...
அதிமுக பிரமுகர், தொழிலதிபர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் 9 மணி நேரம் சோதனை விசாரணைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு காட்பாடி, வாலாஜாவில் இரிடியம் விற்பனை விவகாரம்
வேலூர், செப்.13: அதிமுக பிரமுகர், தொழிலதிபர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் இரிடியம் விற்பனை விவகாரம் தொடர்பாக 9 மணி நேரம் சோதனை நடத்தினர். மேலும் அவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் இரிடியம், ஹவாலா பணம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிசிஐடி போலீசார் நேற்று...
தற்கொலை எண்ணம் தடுக்க ‘வாயிற் காப்பான்’ திட்டம் துவக்கம்
* பிளாக் வாரியாக தூதுவர்கள் நியமனம் * சீர்திருத்தும் பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை தமிழக சிறைகளில் புதிதாக வரும் கைதிகளுக்கு வேலூர், செப்.13: தமிழகத்தில் சிறைகளுக்கு புதிதாக வரும் கைதிகளுக்கு தற்கொலை எண்ணத்தை தடுக்க ‘வாயிற் காப்பான்’ திட்டம் துவங்கப்பட்டுள்ளது. மேலும், பிளாக் வாரியாக தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறையை, சீர்திருத்தும் பள்ளிகளாக மாற்ற அரசு நடவடிக்கை...
காட்பாடிக்கு ரயில் மூலம் 2,500 டன் ரேஷன் அரிசி வருகை வேலூர், திருப்பத்தூருக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைப்பு திருவாரூர் மாவட்டத்தில் இருந்து
வேலூர், செப்.12: திருவாரூர் மாவட்டத்தில் இருந்து காட்பாடிக்கு ரயில் மூலம் 2,500 டன் ரேஷன் அரிசி வந்தது. இதை வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை...
அவர்கள் வீட்டுக்குள் நடக்கிற விஷயம் நமக்கு எதுக்கு வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்
வேலூர், செப்.12: அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம் என்பது அவர்கள் வீட்டுக்குள் நடக்கிற விஷயம். அது நமக்கு எதுக்கு என்று வேலூரில் அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலூர் சேண்பாக்கத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு மனு அளித்த பயனாளிகளுக்கு அதற்கான ஆணையை வழங்கினார். பின்னர் அமைச்சர் துரைமுருகன்...
விபத்தில் பலியான மணி. போதை மாத்திரைகளை விற்ற 15 பேர் கைது கார், மாத்திரைகள் பறிமுதல் குடியாத்தத்தில்
குடியாத்தம், செப். 12: குடியாத்தத்தில் போதை மாத்திரைகள் விற்ற 15 பேரை போலீசார் கைது செய்து, கார், ேபாதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் ருக்மாநாதன், சப் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் நேற்று குடியாத்தத்தில் இருந்து பெரும்பாடி செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு...
கோயில் பூட்டு உடைத்து அம்மன் தாலி திருட்டு குடியாத்தம் அருகே
குடியாத்தம், செப்.11: குடியாத்தம் அருகே கோயில் பூட்டு உடைத்து அம்மன் தாலியை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம் அடுத்த ஒலக்காசி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே காளியம்மன் கோயில் உள்ளது. இதில் ஆறுமுகம் என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தார். பின்னர்...