கிணற்றில் தவறி விழுந்து பொறியியல் பட்டதாரி பலி

சின்னசேலம், நவ. 6: சின்னசேலம் அருகே வாசுதேவனூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருணாகரன்(56). விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது மனைவி ஜெயந்தி(46). இவர்களுக்கு வசந்த்(26), நர்மதா(23) ஆகிய இரு பிள்ளைகள் இருந்தனர். வசந்த் பொறியியல் படித்து பட்டம் பெற்றுள்ளார். மேலும் தற்போது விவசாய வேலையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் வசந்த் கடந்த 4ந்தேதி இரவு...

கேரள வாலிபரிடம் செல்போன் பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை வேலூர் கோர்ட் தீர்ப்பு

By Karthik Yash
04 Nov 2025

வேலூர், நவ.5: கேளர வாலிபரிடம் செல்போன் பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து வேலூர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கேரளா மாவட்டம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆன்சிவர்கீஸ்(24). இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் தங்கி நர்சிங் படித்து வந்தார். கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி ஆற்காடு சாலையில்...

மலைப்பாதை வழியாக காரில் கஞ்சா கடத்திய இருவர் கைது கார் பறிமுதல் ஆந்திராவில் இருந்து அரவட்லா

By Karthik Yash
04 Nov 2025

பேரணாம்பட்டு,நவ.5: ஆந்திராவில் இருந்து அரவட்லா மலைப்பாதை வழியாக காரில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா மலைப்பகுதி ஏழு வளைவுகள் கொண்டு அமைந்துள்ளது. இந்த மலைப்பாதையின் வழியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து காரில் கஞ்சா கடத்துவதாக குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது....

பொய்கை மாட்டுச்சந்தையில் ரூ.75 லட்சத்துக்கு வர்த்தகம்

By Karthik Yash
04 Nov 2025

வேலூர், நவ.5: பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று ஒட்டுமொத்தமாக ரூ.75 லட்சத்துக்கு நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த பொய்கையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாட்டுச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணா மலை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன....

ரயிலில் கடத்த முயன்ற 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

By Karthik Yash
31 Oct 2025

வேலூர், நவ.1: காட்பாடி வழியாக பெங்களூரு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்த முயன்ற 450 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை ரயில்வே போலீசார் கைப்பற்றினர். பீகார் மாநிலம் தன்பூரில் இருந்து சென்னை பெரம்பூர், காட்பாட வழியாக பெங்களூரு வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காட்பாடி ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது....

வனப்பகுதிக்குள் அனுமதியின்றி சாலை அமைத்த விவசாயி கைது ரூ.1 லட்சம் அபராதம்; வனத்துறை அதிரடி குடியாத்தம் அருகே விவசாய நிலத்திற்கு செல்ல

By Karthik Yash
31 Oct 2025

குடியாத்தம், நவ.1: குடியாத்தம் அருகே விவசாய நிலத்திற்கு செல்ல வனப்பகுதிக்குள் அனுமதியின்றி மண் சாலை அமைத்த விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. வேலூர் மாவட்ட வனஅலுவலர் அசோக்குமார் உத்தரவின்பேரில் குடியாத்தம் வனச்சரகர் சுப்பிரமணியன் தலைமையில் வனத்துறையினர் சைனகுண்டா காப்புக்காடு பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தனிநபர்...

போக்சோ வழக்கில் 4 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம்

By Karthik Yash
31 Oct 2025

வேலூர், நவ.1: போக்சோ வழக்கில் 4 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் மட்டும் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வேலூர் மாநகரில் இயங்கி வரும் குழந்தைகள் நல காப்பகத்தில் தங்கி பயின்று வந்த சில சிறுமிகளுக்கு கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் அதே காப்பகத்தில் வேன் டிரைவராக வேலை செய்து வந்த ஜெபமணி(55) என்பவர்...

வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கியதில் ரூ.5.25 கோடி வருவாய் அதிகாரிகள் தகவல் தீபாவளி பண்டிகையையொட்டி

By Karthik Yash
30 Oct 2025

வேலூர், அக்.31: தீபாவளி பண்டிகையையொட்டி வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கியதில் ரூ.5.25 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் கடந்த 20ம் தேதி தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் வெளியூர்களில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகள்,...

3,360 கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள், புகையிலை பொருட்கள் பறிமுதல் * 2 பேர் அதிரடி கைது * சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார் பேரணாம்பட்டு வழியாக கார்களில் கடத்தி வந்த

By Karthik Yash
30 Oct 2025

பேரணாம்பட்டு, அக்.31: பேரணாம்பட்டு வழியாக கார்களில் கடத்தி வந்த 3,360 கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர எல்லையை ஒட்டி அமைந்துள்ள பத்தலப்பல்லி சோதனைச்சாவடியில் பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது,...

2.98 லட்சம் மாணவர்கள் அடிப்படை கற்றல் திறன் பெற்றுள்ளனர் வேலூர் மாவட்டத்தில் 28 சதவீதம் பேர் 6 முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திறன் இயக்கம் மூலம்

By Karthik Yash
30 Oct 2025

வேலூர், அக்.31: 6 முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திறன் இயக்கம் மூலம் 2.98 லட்சம் மாணவர்கள் அடிப்படை கற்றல் திறன் பெற்றுள்ளனர். அவர்களில் வேலூர் மாவட்டத்தில் 28 சதவீதம் பேர் கற்றல் திறன் பெற்றுள்ளனர். மாநில திட்டக்குழு கடந்த பிப்ரவரி மாதம், மாநில அடைவு ஆய்வு மேற்கொண்டது. அதன் அடிப்படையில் 6ம் வகுப்பு...