ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 11பேர் கைது வேலூரில்
வேலூர் ஆக.15: வேலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர். தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை விடுக்க கோரியும், அனைத்து தூய்மை பணியாளர்களையும்...
சிறுமியிடம் தாயின் காதலன் சில்மிஷம் போக்சோ வழக்குப்பதிவு
வேலூர், ஆக.14: வேலூர் அருகே ஒரு பகுதியை சேர்ந்த 40 வயது பெண், தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவரது 14 வயது மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த சிறுமியின் தாய், வேலூர் மேல்மொணவூரை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே...
வீட்டில் டாஸ்மாக் மது பதுக்கியவர் கைது கள்ளச்சந்தையில் விற்க
வேலூர், ஆக.14: கள்ளச்சந்தையில் விற்பதற்காக 55 டாஸ்மாக் மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர். பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விருபாட்சிபுரம் என்.கே.நகரில் ஒரு வீட்டில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் பதுக்கி விற்கப்படுவதாக பாகாயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்ற பாகாயம் போலீசார், அங்கு குட்டி(எ)தனசேகர் என்பவரது வீட்டில்...
திருத்தணிக்கு இன்று முதல் 155 சிறப்பு பஸ்கள் இயக்கம் பொதுமேலாளர் தகவல் வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து
வேலூர், ஆக.14: ஆடி கிருத்திகையையொட்டி வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து திருத்தணிக்கு 155 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக பொதுமேலாளர் தெரிவித்தார். ஆடி கிருத்திகை விழாவின்போது தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், முருகனின் அறுபடை வீடு உள்பட பல்வேறு முருகன் கோயில்களுக்கு காவடி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தி, சுவாமி...
பிளஸ் 1 பொதுத்தேர்வில் தவறியவர்களுக்கு தேர்வு உண்டு கல்வித்துறை அதிகாரிகள் தகவல் கடந்த கல்வி ஆண்டுகளில்
வேலூர், ஆக.13: கடந்த கல்வியாண்டுகளில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாநில கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது பொருந்தாது என்றும், அவர்கள் தேர்ச்சி பெறும் வரை அவர்களுக்கு தனியாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த 2017-18ம் கல்வி ஆண்டுக்கு முன்பு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு மட்டுமே பொதுத்தேர்வுகள்...
பாலாற்றை மாசுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி
வேலூர், ஆக.13: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி பாலாற்றை மாசுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் எச்சரித்துள்ளார். முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அதிமுகவினர் ஊருக்கு ஒரு ஏரியையாவது தூர்...
போலி வாகன பதிவு எண்ணுடன் மினிவேனில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தல் சேர்க்காடு ஆர்டிஓ சோதனைச்சாவடியில் சிக்கியது தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு படம் அதர்சில் உள்ளது
வேலூர், ஆக.13: தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு போலி வாகன பதிவு எண்ணுடன் 1 டன் ரேஷன் அரிசி கடத்திய மினிவேனை சேரக்காடு ஆர்டிஓ சோதனைச்சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளரின் சோதனையில் சிக்கியது. வேலூர் போக்குவரத்து மண்டல துணை ஆணையர் பாட்டப்பசாமி உத்தரவின்பேரில் வேலூர் ஆர்டிஓ சுந்தரராஜன் அறிவுறுத்தலில், மோட்டார் வாகன ஆய்வாளர் சுமேஷ் தலைமையிலான குழுவினர்...
ஆட்டுச்சந்தையில் விற்பனை மந்தம் கே.வி.குப்பத்தில் நடந்த
கே.வி.குப்பம், ஆக.12: கே.வி.குப்பத்தில் நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில் விற்பனை மந்தமாக இருந்தது. கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை நடந்து வருகிறது. இங்கு பல்வேறு இன ஆடுகள் திரட்சியான உடல் அமைப்புடன் கிடைப்பது மட்டுமில்லாமல் விற்போருக்கும் கணிசமான லாபம் கிடைக்கும் என்பதால் ஆடு வியாபாரிகள் அதிகளவில் கூடுகிறார்கள். கடந்த மாதங்களில் நடந்த சந்தைகளில் எதிர்பார்த்த...
மளிகை கடைக்காரரின் குடும்பத்திற்கு ரூ.25.86 லட்சம் இழப்பீடு வேலூர் கோர்ட் தீர்ப்பு விபத்தில் உயிரிழந்த
வேலூர், ஆக.12: விபத்தில் உயிரிழந்த மளிகை கடைக்காாரின் குடும்பத்திற்கு ரூ.25.86 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வேலூர் கோர்ட் தீர்ப்பளித்தது. காட்பாடி அடுத்த பெரியபுதூரைச் சேர்ந்தவர் சசிகுமார்(20) மளிகை கடை நடத்தி வந்தார். இவர், கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி காட்பாடி-சித்தூர் சாலையில் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றார். பைக்கை அவரது...