குடிநீர் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் பணி தீவிரம் திருவலம் பேரூராட்சியில்

திருவலம், டிச.5: திருவலம் பேரூராட்சியில் குடிநீர் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா திருவலம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து கழிவுநீர் கால்வாய் மூலம் வெளியேற்றுகின்றனர். அதேபோல் குப்பைகளை பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் நாள்தோறும் அகற்றி...

வேலூர் மாவட்டத்தில் தினமும் 30 புகார்கள் பதிவு; ஆன்லைன் வேலை, பேஸ்புக் மார்பிங் போட்டோ அனுப்பி மோசடி விழிப்புணர்வுடன் இருக்க சைபர் கிரைம் எச்சரிக்கை

By Suresh
03 Dec 2025

வேலூர், டிச.4: தமிழ்நாடு முழுவதும் சைபர் கிரைம் அதிகளவில் அரங்கேற தொடங்கிவிட்டது. இதனால் மாவட்டங்கள் தோறும் அந்தந்த எஸ்பி அலுவலகங்களில் சைபர் கிரைம் பிரிவு தனியாக தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் சைபர் கிரைம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஆன்லைன் மோசடிகளில் 30 பேர் வரையில் பாதிக்கப்பட்டதாக...

விபத்தில் இறந்த நெசவுத்தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் நிவாரணம்: அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

By Suresh
03 Dec 2025

வேலூர், டிச.4: சோளிங்கர் அருகே பஸ் மோதி இறந்த நெசவுத்தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் இழப்பீடு வழங்க வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(54). நெசவுத்தொழிலாளி. இவர் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இருந்து அரக்கோணம் நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். சோளிங்கர்...

திருவண்ணாமலைக்கு 230 அரசு சிறப்பு பஸ்கள் நாளை வரை இயக்கப்படுகிறது வேலூர் மண்டலத்தில் இருந்து

By Karthik Yash
02 Dec 2025

வேலூர், டிச.3: திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் வேலூர் மண்டலம் சார்பில் 230 சிறப்பு பஸ்கள் நாளை வரை இயக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக அரசு போக்குவரத்துக்கழகம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. இந்தநிலையில் இன்று(3ம் தேதி) திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்...

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவர்கள் உதவி தொகை பெற தகுதி தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வில்

By Karthik Yash
02 Dec 2025

வேலூர், டிச.3: தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவர்கள் உதவி தொகை பெற தகுதி பெற்றுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு தேர்வுகள் துறை மூலமாக தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளில் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு கடந்த அக்டோபர் 11ம் தேதி நடைபெறும் என...

வேலூர் சிறை அருகே பறந்த டிரோன் பறக்க விட்டது யார்? போலீசார் விசாரணை

By Karthik Yash
02 Dec 2025

வேலூர், டிச.3: வேலூர் சிறை அருகே பறந்த டிரோன் குறித்து போலீசார் யார் பறக்க விட்டது என்று விசாரித்து வருகின்றனர். வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் 800க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி சிறை வளாகத்திலும், அதன் அருகே டிரோன் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் சிறை சுற்றுச்சுவரின்...

டெய்லரின் வங்கிக் கணக்கில் ரூ.57 ஆயிரம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

By Karthik Yash
01 Dec 2025

வேலூர், டிச.2: டெய்லரின் வங்கிக் கணக்கில் ரூ.57 ஆயிரம் மோசடி தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் விசாரித்து வருகின்றனர். குடியாத்தம் பரதராமியை சேர்ந்தவர் தையல் தொழிலாளி. இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம ஆசாமி, தன்னை வங்கி அதிகாரி என்று அறிமுகப்படுத்தி, உங்களது வங்கி...

கால் தவறி விழுந்துதான் யானை இறந்தது உடற்கூறு ஆய்வில் கால்நடை மருத்துவர்கள் தகவல் பேரணாம்பட்டு அருகே காப்புகாட்டு ஓடையில்

By Karthik Yash
01 Dec 2025

பேரணாம்பட்டு, டிச.2: பேரணாம்பட்டு அருகே காப்புகாட்டு ஓடையில் யானை கால் தவறி விழுந்துதான் இறந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட குண்டலபல்லி காப்பு காடு அமைந்துள்ளது. இந்த காப்புக்காடுக்கு உட்பட்ட டி.டி.மோட்டூர் அடுத்த சிந்தகனவாய் பகுதியை ஒட்டிய வனப்பகுதியின் உள்ளே தண்ணீர் ஓடை செல்கிறது....

சாலையில் மனித மண்டை ஓடுகள் கண்டெடுப்பு பொதுமக்கள் அதிர்ச்சி ேபரணாம்பட்டு அருகே சிறுவர் பூங்கா செல்லும்

By Karthik Yash
01 Dec 2025

பேரணாம்பட்டு, டிச.2: பேரணாம்பட்டு அருகே சிறுவர் பூங்கா செல்லும் சாலையில் மனித மண்டை ஓடுகள் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த காமராஜர் நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் சிறுவர்களுக்கான பூங்கா அமைக்கப்பட்டு அப்பூங்காவில் சிறுவர்கள் காலை மற்றும் மாலை வேளையில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு...

ஜோலார்பேட்டை அருகே மொபட்டில் துப்பட்டா சிக்கி தாய் பலி ; மகள் படுகாயம்

By Arun Kumar
30 Nov 2025

  ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரி ஊராட்சி வாத்தியார் வட்டம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம், பத்மா (65) தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். தம்பதி இருவரும் பீடித்தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் பத்மாவுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த 25ம் தேதி திரியாலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மகள் ரீத்தாவுடன் மொபட்டில்...