வேலூர் சிறையில் 15 சிறைவாசிகள் பரோல் கேட்டு விண்ணப்பம் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாட
வேலூர், அக்.11: தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட வேலூர் மத்திய சிறையில் 15 சிறைவாசிகள் இதுவரை பரோலுக்கு விண்ணப்பித்துள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களிலும், பிற முக்கிய குடும்ப நிகழ்வுகளிலும் குடும்பத்துடன் கலந்து கொள்ள சிறைவாசிகளுக்கு பரோல் வழங்கப்படுகிறது. சிறைவாசிகளின் நல்லொழுக்கத்தின் அடிப்படையில் தற்காலிக விடுப்பு எனப்படும் பரோல் வழங்கப்படுகிறது....
வாலிபரிடம் ரூ.7.52 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் வழக்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக கூறி
வேலூர், அக்.11: பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக கூறி வாலிபரிடம் ரூ.7.52 லட்சம் மோடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியாத்தம் அடுத்த செட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு, அவரது டெலிகிராம் எண்ணிற்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என...
கர்ப்பிணியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் சேற்றில் சிக்கியது * கயிறு கட்டி மீட்ட கிராம மக்கள் * ஆம்புலன்சிலேயே குழந்தை பிறந்தது ஒடுகத்தூர் அருகே மலைச்சாலையில்
ஒடுகத்தூர், அக்.10: ஒடுகத்தூர் அருகே மலைச்சாலையில் நள்ளிரவில் கர்ப்பிணியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் சேற்றில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்சிலேயே குழந்தை பிறந்தது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட குடிகம் மலை கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பிரேம்குமார்(34). இவரது மனைவி ரோஜா(30). தம்பதிக்கு 4...
களஆய்வுகளில் 939 மனுக்களில் 271 மனுக்களுக்கு உடனடி தீர்வு ஆணைய தலைவர் தகவல் வேலூர் மாவட்டத்தில் இதுவரை மேற்கொண்ட
வேலூர், அக்.10: வேலூர் மாவட்டத்தில் இதுவரை மேற்கொண்ட களஆய்வுகளில் 939 மனுக்களில் 271 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளதாக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் சிறுபான்மையினருக்கான கலந்தாய்வு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஆணைய தலைவர் அருண் தலைமை தாங்கினார். கலெக்டர் சுப்புலட்சுமி, எஸ்பி...
நிரம்பி கோடி போன நாராயணபுரம் ஏரி பூக்கள் தூவி மக்கள் வரவேற்பு அணைக்கட்டு அருகே தொடர் மழையால்
அணைக்கட்டு, அக்.10: அணைக்கட்டு அருகே தொடர் மழையால் நாராயணபுரம் ஏரி நேற்று நிரம்பி கோடி போனது. அணைக்கட்டு அடுத்த ஊனை வாணியம்பாடி ஊராட்சியில் உள்ள நாராயணபுரம் ஏரி 286 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி நிரம்பினால் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. இதனால் ஆண்டுதோறும் ஏரியின் நீர்வரத்து கால்வாகளை...
பத்திரப்பதிவில் அடுத்த மாதம் 3.0 அமல் காட்பாடியில் அமைச்சர் மூர்த்தி தகவல்
வேலூர், அக்.8: தமிழகத்தில் பத்திரப்பதிவில் அடுத்த மாதத்தில் 3.0 அமல்படுத்தப்படும் என்று காட்பாடி அமைச்சர் மூர்த்தி கூறினார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் சார்பதிவாளர் அலுவலகத்தை பத்தரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் செயல்படுத்தப்படும் 2.0 வர்ஷனில், பத்திரத்தின் பதிவெண்ணை பதியக்கூடிய எண்ணிக்கை அதிகரித்துள்ளது....
ஓவியம், கட்டுரை போட்டிகளில் 500 மாணவ, மாணவிகள் பங்கேற்பு வன உயிரின வாரவிழாவையொட்டி
வேலூர், அக்.8: வன உயிரின வாரவிழாவையொட்டி ஓவியம், கட்டுரை போட்டிகளில் 500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசு வழங்கப்படுகிறது. வன உயிரின வார விழா கொண்டாடுவதற்கு, அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பது, பல்லுயிர் பெருக்கத்தைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மற்றும் வன உயிரினங்களுக்கு ஏற்பட்டு வரும் ஆபத்துகளான காடழிப்பு,...
ஓடும் பஸ்சில் 4 சவரன் நகை திருட்டு
வேலூர், அக்.8: வேலூரில் ஓடும் பஸ்சில் 4 சவரன் நகை திருட்டு போனது. வேலூர் விருபாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் முனிசாமி மனைவி மணியரசி(73). இவர் வேலூர் அண்ணா சாலையில் உள்ள நகை கடை ஒன்றில் நகை சேமிப்புத்திட்டத்தில் சேர்ந்துள்ளார். முதிர்வு காலம் முடிந்ததும், கடந்த 3ம் தேதி மாலை 5 மணியளவில், அதற்கான பணத்திற்கு 4 சவரன்...
குளிக்க சென்ற மாற்றுத்திறனாளி மூழ்கி பலி உறவினர்கள் சாலை மறியல் கே.வி.குப்பம் அருகே பாலாற்று தடுப்பணையில்
கே.வி.குப்பம்,அக்.7: பாலாற்று தடுப்பணையில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி மாற்றுத்திறனாளி பரிதாபமாக பலியானார். தீயணைப்பு துறையினரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கே.வி.குப்பம் அடுத்த கவசம்பட்டு ஊராட்சி கீழுர் பகுதியை சேர்ந்தவர்கள் சாமுண்டி, மாரிமுத்து. இத்தம்பதி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டனர். இவர்களுக்கு மெய்யழகன் (60),...