வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே

பள்ளிகொண்டா, ஆக.8: பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே சாலையோரம் தள்ளுவண்டி கடை வைத்திருந்த வியாபாரியிடம் கத்தி காட்டி கொலை மிரட்டல் விடுத்து ரூ.3000 பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே இருபுறமும் 20க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் உள்ளன. இவர்கள் காலை முதல் இளநீர், கொய்யா, வாழை பழங்கள்...

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது பேரணாம்பட்டு அருகே ஆசைவார்த்தை கூறி

By Karthik Yash
07 Aug 2025

பேரணாம்பட்டு, ஆக.8: பேரணாம்பட்டு அருகே ஆசைவார்த்தை கூறி 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ஒருபகுதியைச் சேர்ந்த ராஜா (40) கூலி தொழிலாளி. இவரது வீட்டின் அருகே உள்ள அவரது நண்பரின் 15 வயது சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தைகள்...

இளம்பெண்ணின் வீட்டுக்கு தீவைத்து கொளுத்தியவர் கைது ஆசைக்கு இணங்க மறுத்ததால்

By Karthik Yash
07 Aug 2025

வேலூர், ஆக.8: காட்பாடி அருகே ஆசைக்கு இளம்பெண்ணின் வீட்டை தீவைத்து கொளுத்தியவரை போலீசார் கைது செய்தனர். காட்பாடியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி, தற்போது கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மாணிக்கம்(25). இவர் இளம்பெண்ணிடம் நட்பு அடிப்படையில் பேசி வந்துள்ளார். இதற்கிடையில் இளம்பெண்ணிடம், மாணிக்கம்...

ஆவின் மேலாளரை தாக்க முயற்சி 2 பேர் கைது

By Karthik Yash
06 Aug 2025

வேலூர், ஆக.7: வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் ஹரி(55). இவர் ஆவின் பால் பதப்படுத்தும் பிரிவு மேலாளராக உள்ளார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி, இரவு தொழிற்சாலையில் பால் வேனில் இருந்து பால் இறக்கும் பணியில் அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த தினேஷ்குமார்(31), ஹரிகிருஷ்ணன், சத்துவாச்சாரி சிஎம்சி காலனியைச் சேர்ந்த பால் சாமுவேல் (25) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு...

கோர்ட் விசாரணைக்கு ஆஜராகாத வாலிபர் கைது

By Karthik Yash
06 Aug 2025

வேலூர், ஆக. 7: வேலூர் வசந்தபுரத்தைச் சேர்ந்தவர் முபாரக் (26). இவர் மீது 2018ம் ஆண்டு தகராறில் ஈடுபட்டது தொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கு வேலூர் ஜேஎம் 4 கோர்ட்டில் வருகிறது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் முபாரக் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரை கைது செய்து கோர்ட்டில்...

காட்பாடியில் லாரி வாங்கித்தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்தவர் கைது

By Karthik Yash
06 Aug 2025

வேலுார், ஆக.7: காட்பாடியில் லாரி வாங்கித்தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். காட்பாடி செங்குட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன் (49). இவர் லாரி உரிமையாளர். இவரிடம் காட்பாடி காந்தி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி (48) மற்றும் ராகவன், பத்மநாபன் ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகி உள்ளனர். அப்போது தாங்கள் லாரி...

மூதாட்டியிடம் 3 சவரன் திருட்டு

By Karthik Yash
05 Aug 2025

பள்ளிகொண்டா, ஆக.6: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டனம், நெடுங்கால் கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மாள்(65). இவர் கடந்த 25ம் தேதி அதேபகுதியை சேர்ந்த 11 பெண்களுடன் மினி பேருந்து மூலம் பள்ளிகொண்டாவில் உள்ள கோயிலில் தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது, மதியம் 12.30 மணியளவில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்து பார்த்தபோது கண்ணம்மாளின் கழுத்தில்...

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் உத்திர காவேரி ஆற்றில்

By Karthik Yash
05 Aug 2025

ஒடுகத்தூர், ஆக.6: ஒடுகத்தூர் பகுதிகளில் உள்ள உத்திரிக்காவேரி ஆற்றில் இரவும், பகலும் மணல் கடத்தல் நடந்து வருவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதன்படி, இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் உத்திரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சேர்பாடி, கெங்கசாணி குப்பம், கொட்டாவூர், கத்தாரிகுப்பம், மடையாப்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் வழியாக செல்லும்...

வீட்டு மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய போர்மென் சஸ்பெண்ட் மின்வாரிய அதிகாரிகள் தகவல் வேலூர் அருகே விரிஞ்சிபுரத்தில்

By Karthik Yash
05 Aug 2025

வேலூர், ஆக. 6: வேலூர் அருகே விரிஞ்சிபுரத்தில் வீட்டு மின்இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய போர்மென் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த செதுவாலை கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தனியார் மருத்துவமனை டிரைவரான இருசப்பன்(67), அதேபகுதியில் புதிதாக கட்டும் வீட்டிற்கு மின்இணைப்பு கேட்டு விரிஞ்சிபுரம் மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். மேலும் வீட்டின்...

திருத்தாளீஸ்வரர் கோயில் திருப்பணியின்போது 4 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு கிராம மக்கள் பரவசம் வேலூர் அடுத்த அன்பூண்டியில் 1000 ஆண்டு பழமையான

By Karthik Yash
04 Aug 2025

வேலூர், ஆக.5: வேலூர் அடுத்த அன்பூண்டியில் ரூ.1.14 கோடியில் துவங்கியுள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருத்தாளீஸ்வரர் கோயில் திருப்பணியின் போது விநாயகர், அம்மன் சிலைகள் உட்பட 4 உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டது கிராம மக்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அடுத்த அன்பூண்டி ஊராட்சியில் 1000 ஆண்டுகள் பழமையான திருத்தாளீஸ்வரர் கோயில் உள்ளது. பிற்கால சோழர்...