சேர்ந்தமரம் அருகே பைக் மீது வாகனம் மோதி தொழிலாளி சாவு

கே.டி.சி.நகர், ஜூன் 24: சேர்ந்தமரம் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். தென்காசி மாவட்டம் சேர்ந்தமரத்தை அடுத்த வீரசிகாமணி அருகே உள்ள பாறைக்குளம் கிருஷ்ணன்கோவில் தெருவை சேர்ந்தவர் சொரிமுத்து மகன் லிங்கராஜ் (50). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவியும், நர்சிங் படித்து வரும் மகள் மற்றும்...

கோபாலசமுத்திரம் பகுதியிலேயே புதிய வீடுகளை கட்டி தரவேண்டும்

By MuthuKumar
23 Jun 2025

நெல்லை,ஜூன் 24: கோபால சமுத்திரத்திலேயே வீடுகளை கட்டி தரக்கோரி இலங்கை தமிழர் மறுவாழ்வு மக்கள் நேற்று நெல்லை கலெக்டரிடம் மனு அளித்தனர். நெல்லை அருகே கோபாலசமுத்திரம், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர்கள் நெல்லை கலெக்டரிடம் அளித்த மனு: கோபாலசமுத்திரம் முகாமில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட நபர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலாக...

பாளையில் தகராறை தட்டிக்கேட்ட போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு

By MuthuKumar
23 Jun 2025

நெல்லை, ஜூன் 23: பாளையங்கோட்டை வஉசி விளையாட்டு மைதானத்தில் 4 பேர் கொண்ட கும்பல் தகராறில் ஈடுபட்ட போது தட்டிக்கேட்ட மணிமுத்தாறு பட்டாலியன் போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலப்பாளையத்தை சேர்ந்தவர் முகம்மதுஅப்துல்லா (26). இவர் மணிமுத்தாறு பட்டயாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 நாட்கள்...

வண்ணார்பேட்டையில் சொந்த இடம் இருந்தும் வாடகை கட்டிடத்தில் இயங்கும் தபால் நிலையம்

By MuthuKumar
23 Jun 2025

நெல்லை,ஜூன் 23: நெல்லை வண்ணார்பேட்டை தபால் நிலையத்திற்கு சொந்த இடம் இருந்தும், அதில் கட்டிடம் கட்டாமல் வாடகை கட்டிடத்தில் இயங்குவதால் அப்பகுதி மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். விரைவில் அங்கு புதிய கட்டிடம் கட்டி பொதுமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளின் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லை வண்ணாரபேட்டை தபால் அலுவலகமானது, அங்குள்ள சாலை தெரு...

நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டத்துக்காக சுவாமி, அம்பாள் தேர்கள் சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

By MuthuKumar
23 Jun 2025

நெல்லை,ஜூன்23: நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டத்துக்காக சுவாமி, அம்பாள் தேர்களை தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீச்சியடித்து சுத்தப்படுத்தும் பணியை மேயர் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தொடர்ந்து தேர்கள் சுத்தப்படுத்தப்பட்டன. தென் மாவட்டத்தில் நெல்லை டவுனில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரை மாதம் முதல்...

வாலிபரை வாளால் தாக்கி கொல்ல முயற்சி

By Karthik Yash
19 Jun 2025

சாத்தான்குளம், ஜூன் 20: சாத்தான்குளம் அடுத்த பெரியதாழை முத்தம்மாள்புரத்தை சேர்ந்த குமார் மகன் செல்வசூர்யா (23). திசையன்விளையில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து வீட்டிற்கு அரசூர் பனைவிளை வழியாக பைக்கில் சென்றார். அப்போது பின்னால் ஒரே பைக்கில் வந்த மூவர், அதிசயபுரத்தில் அவரை வழிமறித்து பைக் சாவியை...

பெண்ணை தாக்கிய உறவினர் கைது

By Karthik Yash
19 Jun 2025

நெல்லை, ஜூன் 20: நெல்லை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே பெண்ணை தாக்கி மிரட்டல் விடுத்த உறவினரை போலீசார் கைது செய்தனர். நெல்லை அடுத்த முன்னீர்பள்ளம் அருகேயுள்ள அடைமிதிப்பான்குளம் வேதகோயில் தெருவைச் சேர்ந்தவர் புஷ்பம் (50). இவர், உறவினரான அதே ஊரைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற ராஜ் (46) என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரூ.4...

செங்கோட்டை நகராட்சி அதிகாரி பணியிடை நீக்கம்

By Karthik Yash
19 Jun 2025

செங்கோட்டை, ஜூன் 20: செங்கோட்டை நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளது. இப்பகுதியில் உள்ள வீடுகளில் நேற்று முன்தினம் வரி வசூல் செய்வதற்காக நகராட்சி வரி வசூல் மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்கள் சிலர் செங்கோட்டை மேலூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றனர். அப்போது, வரி வசூல் மேற்பார்வையாளர் அனந்தராமன் அநாகரீகமாக நடந்து கொண்டதாக நகராட்சி ஆணையர்...

இன்று நடக்கிறது நெல்லை கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்

By Karthik Yash
18 Jun 2025

நெல்லை, ஜூன் 19: நெல்லை கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று 19ம்தேதி நடப்பதாக கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் அறிக்கையில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை குறித்து மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் இன்று (19ம் தேதி) காலை 9.30 மணிக்கு...

திருக்குறுங்குடி அருகே பைக்குகள் மோதி 3 பேர் படுகாயம்

By Karthik Yash
18 Jun 2025

களக்காடு, ஜூன் 19: திருக்குறுங்குடி அருகே பைக்குகள் மோதியதில் 3 பேர் படுகாயமபைந்தனர். களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (53). விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது பைக்கில் வள்ளியூர் சென்று விட்டு, திருக்குறுங்குடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். ராஜபுதூர் அருகேயுள்ள பாலத்தின் அருகில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வள்ளியூர், சமத்துவபுரத்தை சேர்ந்த...