முக்கூடல் அருகே மாமனாரை மிரட்டிய மருமகன் கைது நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஜூலை 8ல் உள்ளூர் விடுமுறை
நெல்லை, ஜூலை 1: நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் தேர் திருவிழா வருகிற 8ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் சுகுமார் கூறியிருப்பதாவது: நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் தேர் திருவிழா வருகிற...
கூடங்குளத்தில் உயர் கோபுர சோலார் மின் விளக்கு சேவை
கூடங்குளம், ஜூலை 1: நெல்லை மாவட்டம் கூடங்குளம் கிழக்கு பஜார், மேற்கு பஜார் பகுதிகளில் தலா ஒரு உயர் கோபுர சோலார் மின்விளக்கு அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட அப்போதைய எம்.பி. ஞானதிரவியம், நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இதற்காக ரூ.15.30 லட்சம்...
வீட்டில் தவறி விழுந்த விவசாயி சாவு
கேடிசி நகர், ஜூன் 28: சங்கரன்கோவிலை அடுத்த கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள வீராணபுரAம் கீழ தெருவை சேர்ந்தவர் சன்னாசி (65). விவசாயியான இவர் சம்பவத்தன்று வீட்டில் கால் வழுக்கி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சன்னாசி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து...
தலையணையில் பழங்குடியினர் நலத்துறை முகாம்
சிவகிரி, ஜூன் 28: தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தலையணையில் பழங்குடியினர் நலத்துறை முகாம் நேற்று தொடங்கியது. முகாமிற்கு சமூகப் பாதுகாப்பு திட்ட தாசில்தார் மைதீன் பட்டாணி தலைமை வகித்தார். குடிமைப் பொருள் தாசில்தார் ராணி முன்னிலை வகித்தார். முகாமில் ஆதார் அட்டை, சாதிச்சான்று, வருமானச் சான்று, குடியிருப்புச் சான்று, கலைஞர் மகளிர்...
குமாரபுரத்தில் கால்நடை மருத்துவ முகாம்
திசையன்விளை,ஜூன் 28: திசையன்விளை கால்நடை மருந்தகம் சார்பில் குமாரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அனிதா பிரின்ஸ் தலைமையில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் திசையன்விளை கால்நடை மருத்துவர் டாக்டர் பிரகாஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் காலநடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். கால்நடைகளுக்கு தடுப்பூசி, ஊட்டச்சத்து ஊசி கிருமி மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் கால்நடை...
நெல்லை எஸ்பி, கமிஷனர் அலுவலகங்களில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
நெல்லை, ஜூன் 27: சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமான நேற்று நெல்லை மாநகர மற்றும் மாவட்ட காவல் துறை அலுவலகங்களில் போதைப் பழக்கத்திற்கு எதிராக போலீசார் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நெல்லை மாநகர போ லீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் அனைத்து காவல் அதிகாரிகளும், அலுவலர்களும்...
நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் விநாயகர், சுப்பிரமணியர் தேருக்கு சட்டம் அமைக்கும் பணி துவங்கியது
நெல்லை, ஜூன் 27: நெல்லையப்பர் கோயில் தேரோட்ட திருவிழாவுக்கு சுப்பிரமணியர் தேருக்கு சட்டங்கள் அமைக்கும் பணி நடந்தது. நெல்லையப்பர் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா வரும் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து ஜூலை 8ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதற்காக கோயிலில் உள்ள சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தேர்கள் தயார்படுத்தும்...
குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர்கள் இருவர் கைது
நெல்லை, ஜூன் 27: நெல் லை தச்சநல்லூர் தேனீர்குளம் தெற்கு நியூ காலனியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் நம்பிராஜன்(32). இவர் மீது கொலை முயற்சி உட்பட வழக்குகள் உள்ளன. இவரை தச்சநல்லூர் போலீசார் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். பாளை திம்மராஜபுரம் வெங்கடேஸ்வரா தெருவைச் சேர்ந்த ராமர் ஆதிநாராயணன்(23). இவர் மீது...
புளியங்குடியில் பைக் மீது பஸ் மோதி விவசாயி படுகாயம்
புளியங்குடி,ஜூன் 26: புளியங்குடி இந்திரா காலனியை சேர்ந்தவர் சமுத்திரபாண்டி (62). விவசாயி. இவருக்கு பவுனுதாய் (55) என்ற மனைவியும், மாரித்துரை என்ற மகனும் உள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு சமுத்திரபாண்டி தனது மகன் மாரித்துரையுடன் பைக்கில் புளியங்குடி பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்து நிலையம் அருகே கோவில்பட்டியில் இருந்து புளியங்குடி வந்த தனியார்...