அதிக மாத்திரைகள் தின்ற கட்டிட தொழிலாளி சாவு
கேடிசி நகர், ஜூலை 18: வள்ளியூர் பூங்கா நகர் பகுதியில் அதிக அளவில் மாத்திரைகளை தின்றதால் மயங்கி விழுந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கட்டிடத் தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். வி.கே.புரம் பகுதியைச் சேர்ந்த அக்பர் பாதுஷாவின் மகன் சேக் முகமது (35). கட்டிடத் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வள்ளியூர் பூங்காநகர்...
காட்டுப் பன்றிகளை சுடுவதே நிரந்தரத் தீர்வு; களக்காடு குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
களக்காடு,ஜூலை 18: களக்காடு புலிகள் காப்பக வனத்துறை அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடந்தது. திருக்குறுங்குடி வனசரகர் யோகேஸ்வரன் தலைமை வகித்தார். வனவர் மதன் குமார் வரவேற்றார். கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாநில துணை தலைவர் பெரும் படையார் பேசுகையில் ‘‘இந்த கூட்டமானது வெறுமளவில் கண் துடைப்புக்காக நடத்தப்படுவது போல்...
‘ஸ்மார்ட் சிட்டி குழு' அமைக்காமல் ரூ.1000 கோடி எப்படி செலவு செய்தீர்கள்? மாநகராட்சிக்கு ராபர்ட் புரூஸ் எம்பி கேள்வி, கலெக்டர் கடும் 'டோஸ்'
நெல்லை, ஜூலை 18:நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு குழு அமைக்காமல் ரூ.1000 கோடி எப்படி செலவு செய்தீர்கள் என கண்காணிப்புக் குழு கூட்டத்தில் ராபர்ட் புரூஸ் எம்பி கேள்வி எழுப்பினார். பாதாள சாக்கடை பணிகளை நீட்டித்துக் கொண்டே போகிறீர்கள் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் கடும் டோஸ் விட்டார். நெல்லை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு...
சங்கரன்கோவிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் தர்ணா
சங்கரன்கோவில், ஜூலை 16: சங்கரன்கோவிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஊதிய குழுவின் பரிந்துரைகளில் இருந்து ஓய்வூதியர்களை நீக்கி வைக்கும் நிதி மசோதாவை ரத்து...
நெல்லை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள்
நெல்லை, ஜூலை 16: நெல்லை மாவட்டத்தில் 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை நெல்லையில் நடந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு நேற்று துவக்கி வைத்தார். பொதுமக்களின் குறைகளை அவர்கள் இருப்பிட பகுதிக்கே சென்ற தீர்வு காணும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடுமுதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில்...
சங்கரன்கோவில் வீரசிகாமணியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சங்கரன்கோவில், ஜூலை 16: தமிழ்நாடு முதலமைச்சர் ‘‘உங்களுடன் ஸ்டாலின்'' முகாமினை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணியில் நடைபெற்ற முகாமில் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், எம்எல்ஏக்கள் ராஜா, சதன் திருமலைக்குமார் ஆகியோர் திட்ட முகாம், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பதிவேற்றம் செய்யப்படுவதை பார்வையிட்டனர்....
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
தென்காசி, ஜூலை 14: தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.செங்கோட்டை எஸ்ஆர்எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இருவருக்கு வழங்கப்பட்ட நிர்வாக மாறுதலை கண்டித்தும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாணவிகளின் மாற்றுச்சான்றிதழ் வழங்குவதற்கு பணம் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் முன்னாள் தலைமையாசிரியை...
வாசுதேவநல்லூர் அருகே தொழுவத்தில் தீப்பிடித்து ஆடு, கோழி, நாய் கருகின
சிவகிரி, ஜூலை 14: வாசுதேவநல்லூர் அருகே தொழுவத்தில் தீ பிடித்ததில் அங்கிருந்த ஆடு, கோழி, நாய் தீயில் கருகி இறந்தன. மின் கசிவு காரணமாக தீப்பிடித்து இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள கோட்டையூர் ஊராட்சி ஆத்துவழி பகுதியில் உள்ள தலையணையில் மாரியப்பன் மகன் பிள்ளையார்(63) வசித்து...
பிறந்தநாள் கொண்டாட்டத்தை கண்டித்ததால் ஆத்திரம் முன்னாள் எல்ஐசி அதிகாரி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 4 வாலிபர்கள் கைது
அம்பை, ஜூலை 14: அம்பையில் நள்ளிரவில் நடுத்தெருவில் வைத்து பிறந்தநாள் கொண்டாடியதை கண்டித்த முன்னாள் எல்ஐசி அதிகாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.அம்பாசமுத்திரம் முடப்பாலம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (65). எல்ஐசியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் வசிக்கும் தெருவில் நேற்று முன்தினம் நள்ளிரவு...