ரூ.423.13 கோடியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள்: குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் சபாநாயகர் அப்பாவு ஆலோசனை
திசையன்விளை, ஜூலை 23: திசையன்விளை பேரூராட்சி அலுவலகத்தில் கலெக்டர் சுகுமார் தலைமையில் ரூ.423.13 கோடியில் நடந்து வரும் களக்காடு நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளுக்கான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளின் குறித்து சபாநாயகர் அப்பாவு, பேரூராட்சி தலைவர்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், நெல்லை மாவட்டத்திலுள்ள நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட...
மானூர் அரசு கல்லூரி புதிய கட்டிடத்தை திறக்க வேண்டும்
நெல்லை, ஜூலை 22: இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி அருள்ராஜ் தலைமையில் மாணவ மாணவிகள் திரண்டு வந்து கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மானூர் தாலுகாவில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க 2021ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு தொடங்கப்பட்டது. கிராமப்புற மாணவர்கள் அதிகம் படிக்கிற இந்த அரசு கல்லூரியில் 350க்கும் மேற்பட்ட மாணவ...
திருக்குறுங்குடியில் பட்டப்பகலில் வீடு புகுந்து பொருட்கள் திருட முயற்சி
களக்காடு,ஜூலை 22: திருக்குறுங்குடியில் பட்டப்பகலில் வீடு புகுந்து பொருட்களை திருட முயற்சி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர். களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி, மகிழடி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. விவசாயி. சம்பவத்தன்று மதியம் இவரது மனைவி லெட்சுமி (25) வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பூஜை அறையில் இருந்து பொருட்கள் சிதறி...
குடிநீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்த பெண்கள்
நெல்லை, ஜூலை 22: பாப்பாக்குடி அருகே சிவகாமிபுரம் அருந்ததியர் சமுதாய மக்கள், தங்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, வாறுகால் மற்றும் கழிவுநீர் ஓடை வசதிகள் கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலி குடங்களோடு வந்து மனு அளித்தனர். இதுகுறித்து சிவகாமிபுரம் மக்கள் கலெக்டர் அலுவலத்தில் நேற்று அளித்த மனு விபரம்: சிவகாமிபுரம் அருந்ததியர் சமுதாய...
களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
களக்காடு, ஜூலை 21: களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆற்றில் உற்சாகத்துடன் குளித்தனர். களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. வனத்துறையினரால் சுற்றுசூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி, அதிக குளிர்ச்சியுடன் ஓடி வருவது சிறப்பு மிக்கதாகும். தலையணையில் குளிக்க உள்ளூர் மட்டுமின்றி...
குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடக்கம்
தென்காசி,ஜூலை 21: குற்றாலத்தில் சாரல் திரு விழாவை நேற்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். குற்றாலத்தில் சாரல் திருவிழா துவக்க விழா மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விழாவை துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன்...
சிவகிரியில் கூடாரபாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை
சிவகிரி,ஜூலை 21: சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணி சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்டத்தில் சிவகிரி கூடாரப்பாறை எனும் ஊரில் உள்ள மலை மீது பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் ஆடி கிருத்திகையையொட்டி மீனாட்சி அம்மன்...
பாவூர்சத்திரத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா
பாவூர்சத்திரம், ஜூலை 19: முன்னாள் முதல்வர் காமராஜரின் 123வது பிறந்தநாளை முன்னிட்டு பாவூர்சத்திரத்தில் உள்ள அவரது சிலைக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காவேரி சீனித்துரை, ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, ரமேஷ், கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற...
தென்காசி அருகே புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றம்
தென்காசி,ஜூலை 19: தென்காசி அருகே மேலமெஞ்ஞானபுரம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை மறை மாவட்ட அதிபர் பண்டாரக்குளம் அந்தோணிசாமி தலைமையில் ஆரோக்கிய மாதா கெபியிலிருந்து கொடியேந்தி பவனியாக சந்தியாகப்பர் ஆலயம் வந்தடைந்தனர். தொடர்ந்து நவநாள் ஜெபமும், திருக்கொடி மந்திரிக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதில் பங்கு பணியாளர் அல்போன்ஸ், பாவூர்சத்திரம் பங்கு...