தனலட்சுமி பள்ளி மாணவர்கள் களப்பயணம்
கடையநல்லூர், அக்.26: புன்னையாபுரம் தனலட்சுமி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் உணவின் அவசியம் குறித்து தெரிந்து கொள்வதற்காக களப்பயணம் மேற்கொண்டனர். புன்னையாபுரம் தனலட்சுமி இண்டர்நேஷனல் பள்ளியின் நிர்வாகம் சார்பில் புளியங்குடி சிந்தாமணியில் உள்ள ஒரு வயல்வெளிக்கு மாணவர்களை அழைத்து சென்றனர். அங்குள்ள விவசாயி ஒருவர், மாணவர்களுக்கு விவசாயத்தைப் பற்றியும், ஆரோக்கியமான விவசாயம் செய்ய வேண்டும் என்பது பற்றி...
பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வன பாதுகாவலர் கைது
அம்பை, அக்.26: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை பகுதிகளில் ஒப்பந்த கால அடிப்படையில் இயங்கி வந்த தனியார் தேயிலை தோட்ட நிறுவனம் கடந்த ஆண்டு மூடப்பட்டது. இதனால் அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் மறுவாழ்வுக்கான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் அவர்களை கீழே இறக்கவும்...
சேரன்மகாதேவி அருகே பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி முகாம்
வீரவநல்லூர்,அக்.25: சேரன்மகாதேவி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் சேரன்மகாதேவி அருகே திருவிருத்தான்புள்ளி கிராமத்தில் மல்பெரி சாகுபடி மற்றும் வெண்பட்டுப்புழு வளர்ப்பு தொழில்நுட்பங்கள் தொடர்பான பயிற்சி முகாம் நடந்தது. இதில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) மணி தலைமை வகித்து வேளாண்மை திட்டங்கள், நடப்பு...
பத்தமடையில் எஸ்டிபிஐ செயற்குழு கூட்டம்
வீரவநல்லூர்,அக்.25: பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் பீர் மஸ்தான் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சிராஜ் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் மீராசா, அமைப்பு பொதுச் செயலாளர் மஜீத் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தொடர் மழையின் காரணமாக புறநகர் மாவட்டம் முழுவதும் சிதிலமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க...
களக்காட்டில் பழுதடைந்த சாலை தற்காலிகமாக சீரமைப்பு
களக்காடு,அக்.25: களக்காட்டில் பழுதடைந்த சாலை தற்காலிக சீரமைப்பு பணிகள் தொடங்கியதால், இன்று நடைபெறவிருந்த நாற்று நடும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. சேரன்மகாதேவி-பணகுடி சாலையில் களக்காடு பழைய பஸ் நிறுத்தம் மற்றும் நாகன்குளம் பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்கான தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படவில்லை. தற்போது பெய்து வரும் பருவ மழையினால் பள்ளங்களில் நீர் தேங்கி சாலை...
மாவட்ட சிலம்ப போட்டி சண்முகபுரம் அரசு பள்ளி மாணவன் முதலிடம்
திசையன்விளை, அக். 24: நெல்லை மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள், நாங்குநேரி அருகே உள்ள வாகைக்குளம் ஏபிஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சண்முகபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவன் ரீகன், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் முதலிடம் பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை...
திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்
பாவூர்சத்திரம், அக். 24: கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம், மகிழ்வண்ணநாதபுரத்தில் நடைபெற்றது. ஒன்றிய பொறுப்பாளர் பொன்செல்வன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் கலந்து கொண்டு வாக்குச் சாவடிகளுக்கு பாக முகவர் குறிப்பேடு புத்தகத்தை வழங்கி பேசினார். கூட்டத்தில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட...
திருவள்ளுவர் படிப்பக நிர்வாகிகள் தேர்வு
களக்காடு, அக். 24: களக்காடு அருகே உள்ள சவளைக்காரன்குளம், திருவள்ளுவர் படிப்பக புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக அசுவதி, கவுரவ ஆலோசகராக சிதம்பரநாதன், வாசகர் வட்ட தலைவராக ஷீலா உதயபாரதி, வளர்ச்சி குழு செயலாளர்களாக தர், செல்வராணி, ஒருங்கிணைப்பாளர்களாக பாலசுப்பிரமணியன், சங்கரி, புரவலர்களாக நாராயணன், டாக்டர் ஜெஸ்லின், அசுவதி, கோகிலா, அனுஷ், ரவீந்திரன், சுமதி...
கார் கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது
விகேபுரம், அக்.23: விகேபுரம் அருகே முன் விரோதம் காரணமாக கார் கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். விகேபுரம் அருகே திருப்பதியாபுரத்தை சேர்ந்தவர் மாடசாமி மகன் ரவிசங்கர் (43). விவசாயியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (19) என்பவருக்கு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த சக்திவல் தீபாவளி...