மோசடி வழக்கில் மூதாட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை நாங்குநேரி கோர்ட் தீர்ப்பு

நெல்லை, அக்.31: களக்காடு அருகே மோசடியில் ஈடுபட்ட மூதாட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நாங்குநேரி கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. இவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2015ம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த செல்லம்மாள்(69) என்பவர் கூறியுள்ளார். காளிமுத்துவை நம்ப வைத்து பணம் வாங்கி...

பஞ். தலைவி ஜாதி குறித்து அவதூறாக பேசிய கோழிப்பண்ணை உரிமையாளர் வன்கொடுமை சட்டத்தில் கைது

By Karthik Yash
29 Oct 2025

மானூர்,அக்.30: விளைநிலத்தில் பயிர்களை சேதப்படுத்தியதை தட்டி கேட்ட பஞ்சாயத்து தலைவியை ஜாதி குறித்து அவதூறாக பேசிய கோழிப்பண்ணை உரிமையாளரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மானூர் அருகேயுள்ள கட்டாரங்குளத்தைச்சேர்ந்தவர் சிவகுமார் மனைவி சுதா (35). பஞ்சாயத்து தலைவியாக உள்ள இவர் அதே ஊரை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது நிலத்தை குத்தகை மூலம்...

இஸ்ரோவின் மாநில கட்டுரைப் போட்டி எஸ்எம்ஏ நேஷனல் பள்ளி மாணவி 2ம் இடம்

By Karthik Yash
29 Oct 2025

நெல்லை, அக்.30: உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு இஸ்ரோவின் மகேந்திரகிரி மையம் நடத்திய மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவி 2ம் பரிசு வென்றார். உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு ‘விண்வெளி வாழ்வின் சவால்கள் - ஈர்ப்பின்றி ஒரு உலகம் என்ற தலைப்பில் 7,8,9ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான...

காரியாண்டி அரசு பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி

By Karthik Yash
29 Oct 2025

தியாகராஜநகர், அக்.30: காரியாண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை தலைமையாசிரியர் ஜான்சி துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக வானவில் மன்ற பணியாளர் சுமதி கலந்து கொண்டார். கண்காட்சியில் தண்ணீரின் அடர்த்தியை கண்டறியும் எளிய செயல்முறை விளக்கம், ஊட்டசத்து காய்கறிகள், தானியங்கள் மற்றும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சத்து பானங்கள், உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன....

பள்ளி மாணவர்களுக்கான தொழில்நுட்ப கண்காட்சி

By Karthik Yash
28 Oct 2025

வீரவநல்லூர், அக். 29: சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான தொழில்நுட்ப கண்காட்சி நடந்தது. சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் அப்துல் கலாம் விருது வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் அறிவியல் சிந்தனை மற்றும் புதுமை திறன்களை...

தொடர் மழையால் தாமரைகுளம் நிரம்பியது

By Karthik Yash
28 Oct 2025

களக்காடு, அக். 29: களக்காடு வட்டாரத்தில் பெய்த தொடர் மழையால் நிரம்பிய தாமரைகுளம் கடல் போல் காட்சியளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. அதுபோல களக்காடு பகுதியிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் ஆறு, கால்வாய்களில்...

எஸ்எம்ஏ நேஷனல் பள்ளி மாணவி 2ம் இடம்

By Karthik Yash
28 Oct 2025

நெல்லை, அக். 29: உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு இஸ்ரோவின் மகேந்திரகிரி மையம் நடத்திய மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவி 2ம் பரிசு வென்று சாதனை படைத்தார். உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு ‘விண்வெளி வாழ்வின் சவால்கள் - ஈர்ப்பின்றி ஒரு உலகம் என்ற தலைப்பில் 7,...

முக்காணி அரசு பள்ளி ஆண்டு விழா

By Karthik Yash
27 Oct 2025

ஆறுமுகநேரி,அக்.28: முக்காணி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு முதன்மை கல்வி அலுவலர் சிதம்பரநாதன் தலைமை வகித்தார். கோவில்பட்டி தனியார் கல்லூரி முதல்வர் சுப்புலட்சுமி, திருச்செந்தூர் கல்லூரி முதல்வர் சசிப்ரியா, டிசிடபிள்யூ நிறுவன உதவித்தலைவர் சுரேஷ், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சங்கரநாராயணன், துணைத்தலைவர் பரமசிவன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்...

நாசரேத் அருகே அகப்பைகுளம் ஆலயத்தில் அசன விழா

By Karthik Yash
27 Oct 2025

நாசரேத், அக்.28: நாசரேத் அருகே உள்ள அகப்பைகுளம் தூய அந்திரேயா ஆலய 119வது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசன விருந்து நிகழ்ச்சி நடந்தது. சேகர தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் நாசரேத், வாழையடி, அகப்பைகுளம், மாதாவனம், வகுத்தான்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளானோர்...

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கழுகுமலை கோயிலில் அன்னதானம் வழங்கல்

By Karthik Yash
27 Oct 2025

கழுகுமலை,அக்.28: கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோயிலில் வைத்து பெரியவன் பத்திர எழுத்தகம் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான நிகழ்ச்சியை கழுகுமலை பேரூராட்சி மன்ற துணைத்தலைவரும் கயத்தார் ஒன்றிய திமுக செயலாளருமான சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ராகவேந்திரா அறக்கட்டளை தலைவர் ஜெயக்கொடி, திமுக கழுகுமலை நகரச்செயலாளர் கிருஷ்ணகுமார், முக்குலத்தோர் புலிப்படை...