ரவணசமுத்திரம் ஊராட்சியில் கழிப்பறை தின விழிப்புணர்வு பேரணி
கடையம், டிச.2: கடையம் அருகே ரவணசமுத்திரம் ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன் தலைமையில் வட்டார ஒருங்கிணைப்பாளர் தர்மராஜ் முன்னிலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமலட்சுமி, ஊராட்சி செயலர் மூக்காண்டி, சுகாதார ஊக்குநர் செல்வபட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள்...
இடைவிடாத ஸ்கேட்டிங் போட்டி ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் சாதனை
செங்கோட்டை, டிச.2: வெஸ்டர்ன் காட் இந்தியன் அகாடமி, பிபிபி ஸ்கேட்டிங் க்ளப் மற்றும் தென்காசி மாவட்ட ஸ்கேட்டிங் அசோசியேஷன் இணைந்து 30 நிமிட இடைவிடாத ஸ்கேட்டிங் நிகழ்வு நடைபெற்றது. இதில் செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் அஸ்ரித், கரிஸித் சங்கர், ஆதில் மீரான், ஆதர்ஷ் நாத், முகம்மது அர்ஷத், முகம்மது ரியாஸ், ஆதில் ஆகியோர்...
வேலாயுதபுரத்தில் ரூ.13 லட்சத்தில் நவீன உடற்பயிற்சி கூடம்
கடையநல்லூர், டிச.2: கடையநல்லூர் தெற்கு ஒன்றியம், வேலாயுதபுரத்தில் இளைஞர்களின் உடல்வலிமையை மெருகேற்றும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13 லட்சம் செலவில் கட்டப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடத்தின் திறப்புவிழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்எல்ஏ, நவீன உடற்பயிற்சிக்கூடத்தை...
தென்காசி அருகே தனியார் பேருந்துகள் மோதிய விபத்தில் உயிரிழந்தஅரசு பெண் ஊழியரின்
சங்கரன்கோவில்,டிச.1: தென்காசி அருகே தனியார் பேருந்துகள் மோதியதில் உயிரிழந்த அரசு பெண் ஊழியரின் இரண்டு மகள்கள் நிற்கதியாய் தவிக்கின்றனர். தந்தை இல்லாத சூழலில் விபத்தில் தாயை பறிகொடுத்ததால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பினை உறுதி செய்ய கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்...
ெதாழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
நெல்லை, டிச.1: நெல்லை புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் நாங்குநேரியை சேர்ந்த பெருமாள் மகன் மகேந்திரன் (27) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்த ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக ஒரு கும்பல் நேற்று வந்தது. அப்போது அவர்கள் மகேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து அங்கிருந்தவர்கள் கும்பலை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ...
நெல்லை, தென்காசி மாவட்ட மலையடிவார பகுதியில்விளைநிலங்களுக்குள் அடிக்கடியானைகள் புகுவதால் விவசாயிகள் அச்சம்
நெல்லை,டிச.1: நெல்லை, தென்காசி மாவட்ட மலையடிவாரத்தில் உள்ள விளைநிலங்களுக்குள் அடிக்கடி யானைகள் புகுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மலையடிவாரத்தில் முகாமிட்டுள்ள யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முடியாமல் வனத்துறை தடுமாறுவதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பஃபர் ஜோனில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வனத்துறையினரை பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நெல்லை, தென்காசி மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலையடிவார கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளில்...
அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் நியமனம்
வி.கே.புரம், நவ. 29: நெல்லை புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளராக மகேஷ் பாண்டியன் நியமிக்கப்பட்டு உள்ளார். நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இசக்கி சுப்பையா எம்எல்ஏ பரிந்துரையின்படி வி.கே.புரத்தை சேர்ந்த மகேஷ் பாண்டியன், நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக அண்ணா தொழிற்சங்க இணை செயலாளராக நியமனம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி...
தொழிலாளர் நலச்சட்டங்களை கண்டித்து தென்காசியில் தொமுச ஆர்ப்பாட்டம்
தென்காசி, நவ.29: தென்காசியில் ஒன்றியஅரசு நிறைவேற்றியுள்ள தொழிலாளர்கள் விரோத 4 தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தொ.மு.ச. பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. பேரவை சார்பில் நுகர்வோர் வாணிப கழக மண்டல செயலாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். தொமுச செயலாளர்...
சேரன்மகாதேவி பகுதியில் மழைக்கால மின் பராமரிப்பு பணிகள் தீவிரம்
வீரவநல்லூர்,நவ.29: சேரன்மகாதேவியில் மழைக்கால மின் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சேரன்மகாதேவி மின்வாரிய அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் சேரன்மகாதேவி, பத்தமடை, கங்காணாங்குளம் பகுதியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளது. 30 கி.மீட்டர் சுற்றளவு கொண்ட இப்பகுதியில் 215 டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் மூலம் பொதுமக்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு...