புளியங்குடி நகராட்சி பகுதியில் புதிய குடிநீர் பைப்புகள் அமைப்பு
புளியங்குடி, டிச. 6:புளியங்குடி - டி.என்.புதுக்குடி சிவராமு நாடார் தெரு விரிவுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பல வருடங்களாக குடிநீர் இணைப்பு இல்லாமல் இருந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டி நகராட்சிக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து சுமார் ரூ.60 லட்சம் செலவில் புதிய குடிநீர் இணைப்பிற்காக பைப்...
இ-பைலிங் முறையை கண்டித்து சாத்தான்குளம் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
சாத்தான்குளம், டிச. 5:நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதை கண்டித்து சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் நீதிமன்றங்களில் உள் கட்டமைப்பு இல்லாமல் இ-பைலிங் முறை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளதை கண்டித்து சாத்தான்குளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் சங்க...
கோவில்பட்டியில் விசிக ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டி, டிச. 5: தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கோவில்பட்டியில் நடைபெற்றது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்பி, வரும் 28ம் தேதி கோவில்பட்டிக்கு வருகை தருகிறார். இதையொட்டி நேற்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட அலுவலகத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட...
பொத்தகாலன்விளையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
சாத்தான்குளம், டிச. 5: பொத்தகாலன்விளையில் சடையநேரி கால்வாய் கரையில் பனை விதைகள் நடும் பணி நடந்தது. சாத்தான்குளம் யூனியன் சாஸ்தாவிநல்லூர் அடுத்த பொத்தகாலன்விளையில் உள்ள சடையநேரி கால்வாய் கரை மற்றும் வைரவம்தருவை குளக் கரைகளில் 2500 பனை விதை நடும் பணி நடந்தது. சாத்தான்குளம் தாசில்தார் ராஜேஸ்வரி தலைமை வகித்து பனை விதை நடும் பணியை...
வீட்டை விட்டு வெளியேறிய நாங்குநேரி சிறுவன் நெல்லை ரயில் நிலையத்தில் மீட்பு
விகேபுரம், ஜன.4: வீட்டை விட்டு வெளியேறிய நாங்குநேரி சிறுவன் நெல்லை ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.நாங்குநேரி பாரதிநகர் இலங்குளம் பகுதியை சேர்ந்த அரிச்சந்திரன் மகன் சதீஷ் (16) என்பவன் நேற்று முன்தினம் பெற்றோரிடம் கோபித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளான். இதையடுத்து காணாமல் போன தனது மகனை மீட்டு தரக்கோரி அவனது பெற்றோர் விஜயநாராயணம் போலீசில்...
மாநில அளவிலான கட்டுரை போட்டியில் நெடுவயல் பள்ளி மாணவி இரண்டாமிடம்
கடையநல்லூர்,ஜன.4: திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு நடந்த மாநில அளவிலான கட்டுரை போட்டியில் இரண்டாமிடம் பெற்ற நெடுவயல் சிவசைலநாத நடுலைப்பள்ளி மாணவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி பரிசு வழங்கினார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவி 25வது ஆண்டு வெள்ளி விழா நிறைவை முன்னிட்டு மாநில அளவிலான கட்டுரை போட்டிகள் நடந்தது. இதில் மாநிலத்தின்...
நெல்லை மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
தியாகராஜநகர், ஜன.4: மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நெல்லை மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்களை கோட்ட செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நெல்லை மாவட்டம், வள்ளியூர் மின்கோட்ட செயற்பொறியாளர் வளனரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோட்டைகருங்குளம் மற்றும் பணகுடி துணை மின்நிலையங்களில் இன்று 4ம்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக...
குழந்தையை தத்து எடுத்து தருவதாக கூறி ரூ.1.50 லட்சம் மோசடி
செய்த வாலிபர் கைது பேட்டை, டிச.3: நெல்லை பேட்டை கோடீஸ்வரன்நகர், வேதாத்திரிநகரை சேர்ந்தவர் சுப்பையா மகன் பாண்டி (45). இவருக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லாததால் குழந்தையை தத்து எடுத்து வளர்க்க விரும்பியுள்ளார். இதனையடுத்து பாண்டி, மாயன்மான்குறிச்சியை அடுத்த குருவன்கோட்டை ஜவகர்தெருவை சேர்ந்த சங்கர் மகன் சக்திவேல் (26) என்பவரை அணுகியுள்ளார். அப்போது...
பைக் விபத்தில் காயமடைந்தவர் பரிதாப சாவு
கேடிசி நகர், டிச.3: சுரண்டை அடுத்த சேர்ந்தமரம் அருகேயுள்ள கடையாலுருட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (52). கூலித்தொழிலாளியான இவர், சம்பவத்தன்று பைக்கில் சென்றபோது தவறிவிழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். விபத்துகுறித்து சேர்ந்தமரம்...