உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தில் கோடைகால இயற்கை முகாம்

  முத்துப்பேட்டை, ஜூலை 31: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வனச்சரகம் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தில் திருவாரூர் வனக்கோட்டத்தின் சார்பாக அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு கோடைகால இயற்கை முகாம் நடந்தது. மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். முன்னதாக வனச்சரக அலுவலர் சதீஷ் கண்ணன் வரவேற்றார். ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ், ஏவிசி கல்லூரி...

முத்துப்பேட்டையில் பொது இடங்களில் விளம்பர போர்டுகளை அகற்ற வேண்டும்

By Ranjith
29 Jul 2025

  முத்துப்பேட்டை, ஜூலை 30: முத்துப்பேட்டையில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றபேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பில் வெளிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: முத்துப்பேட்டை பகுதி பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையின் அறிவிப்பு. முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் மற்றும் அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களுக்கும்...

வங்கநகர் அரசுப்பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினம்

By Ranjith
29 Jul 2025

முத்துப்பேட்டை, ஜூலை 30: முத்துப்பேட்டை அருகே வங்கநகர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியர் மகாதேவன் ஆசிரியர் ஜெயச்சந்திரன் மற்றும் மாணவர்கள் அப்துல் கலாம் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். பலரும்...

முத்துப்பேட்டை அரசு மருத்துவமனை சார்பில் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்

By Ranjith
29 Jul 2025

  முத்துப்பேட்டை, ஜூலை 30: முத்துப்பேட்டை அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு சார்பில், கோவிலூர் அருள்மிகு பெரியநாயகி அம்பாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை வனிதா தலைமை வகித்தார். இதில் அரசு சித்த மருத்துவர் டாக்டர் பிரியதர்ஷினி கலந்துக்கொண்டு மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். மேலும்...

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் மோகனசந்திரன் தகவல்

By Neethimaan
28 Jul 2025

திருவாரூர், ஜுலை 29: திருவாரூர் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மாதாந்திர உதவிதொகை பெற தங்களது பகுதிகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மிகவும் எளிய நிலையில் உள்ள குடும்பங்களில் தங்கள் 2 பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில்...

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் 249 மனு பெறப்பட்டன

By Neethimaan
28 Jul 2025

திருவாரூர், ஜுலை 29: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் 249 மனுக்கள் பெறப்பட்டன. திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது கலெக்டர் மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட...

ராஜகோபால சுவாமி கோயில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா தேரோட்டம்

By Neethimaan
28 Jul 2025

மன்னார்குடி, ஜுலை 29 : மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ பெருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா. கோபாலா என கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். மன்னார்குடி பிரசித்தி பெற்ற வைணவத் தலமான ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் 10 நாட்கள் ஆடிப்பூர பிரம்மோற்சவ...

மேலநம்மகுறிச்சியில் 1,100 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

By Ranjith
27 Jul 2025

  முத்துப்பேட்டை, ஜூலை 28: முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் மேலநம்மகுறிச்சி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் டாக்டர் ரிச்சட்ராஜ் மற்றும் கோமாரி தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் டாக்டர் விஜயகுமார் துணை இயக்குனர், உதவி இயக்குனர் டாக்டர் ஆறுமுகம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி கோமாரி...

முத்துப்பேட்டையில் அப்துல் கலாம் படத்திற்கு அஞ்சலி

By Ranjith
27 Jul 2025

  முத்துப்பேட்டை, ஜூலை 28: முத்துப்பேட்டையில் கலாம் கனவு இயக்கம் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தின நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மூத்த மருத்துவர் டாக்டர் மீரா உசேன் அப்துல் கலாம் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கலாம் கனவு இயக்க திட்ட இயக்குநர் சாகுல்...

திருவாரூரில் வரும் 31ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

By Ranjith
27 Jul 2025

  திருவாரூர், ஜுலை 28: திருவாரூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 31ம் தேதி நடைபெறவுள்ளதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டமானது ஒவ்வொரு மாதமும் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலும், இதேபோல் கோட்ட அளவில் ஆர்.டி.ஒக்கள் தலைமையில் திருவாரூர்...