டிட்வா புயல் எதிரொலி: 6 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

முத்துப்பேட்டை, நவ. 29: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் டிட்வா புயல் எதிரொலியாக கனமழை பெய்து வருவதால் 6 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வங்கக்கடலில் இலங்கை அருகே டிட்வா புயல் உருவாகி உள்ளதாகவும் இது புதுவை ஆந்திரா இடையே வரும் 30ந்தேதி கரையை கடக்கிறது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் அதிக...

பேரிடர் மீட்பு பணிகளை மேற்கொள்ள உபகரணங்களுடன் தயார் நிலையில் போலீசார்

By Ranjith
29 Nov 2025

திருவாரூர், நவ.29: திருவாரூர் மாவட்டத்தில் பேரிடர் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு உரிய உபகரணங்களுடன் 80 போலீசார் தயார் நிலையில் இருந்து வருவதாக எஸ்.பி தெரிவித்துள்ளார். இதுகுறித்துஎஸ்.பி கருண்கரட் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு வெள்ள நீர் விரைவில் வடிவதற்காக வடிகால் சீரமைப்பு உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பேரிடர் மீட்பு...

திருவாரூரில் பைக் மீது லாரி மோதி முதியவர் பலி

By MuthuKumar
27 Nov 2025

திருவாரூர்,நவ.28: திருவாரூரில் லாரி மோதிய சம்பவத்தில் பைக்கில் சென்ற முதியவர் பலியானார். நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகா கொளப்பாடு அருகே உள்ள சென்னியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகநாதம் (72). இவர் நேற்று மாலை தனது பைக் மூலம் சொந்த வேலையாக திருவாரூர் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது திருவாரூர் ரயில்வே மேம்பாலம்...

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

By MuthuKumar
27 Nov 2025

திருவாரூர்,நவ.28: திருவாரூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையினையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வங்ககடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளாதால் அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுமக்கள் தாங்கள்...

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக பேருந்துகளில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு பேனர் ஒட்டும் பணி

By MuthuKumar
27 Nov 2025

திருவாரூர்,நவ.28: திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்காளர்ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் விளம்பர பேனர் ஒட்டும் பணியினை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மோகனசந்திரன் ஆய்வு செய்தார். திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக வாக்காளர்ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் விளம்பர பேனர் ஒட்டும்...

கன மழை வரப்போகுது, பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் அரசு அலுவலர்கள் தயாராக இருக்க வேண்டும்: ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு

By MuthuKumar
26 Nov 2025

திருவாரூர், நவ. 27: திருவாரூர் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனைத்து துறை அரசு அலுவலர்களும் தயார் நிலையில் தலைமையிடத்தில் இருந்து பணியாற்றிட வேண்டும் என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் அவ்வப்போது...

வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் கோவில்வெண்ணியில் செயல் விளக்க முகாம்

By MuthuKumar
26 Nov 2025

நீடாமங்கலம், நவ. 27: நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் கோவில்வெண்ணி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயோபொட்டாஷ் உரம் நன்மை குறித்த செயல் விளக்கம் முகாம் நடைபெற்றது. பயிருக்கு 16 வகையான ஊட்டச் சத்துக்கள் தேவைப்படுகிறது. இதில் சாம்பல் சத்து விளைச்சலைப் பெருக்கவும், பூச்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது. சாம்பல் சத்துக்காக...

வளவனாற்றில் ஆகாயத்தாமரை மண்டி கிடப்பதால் 2 ஆயிரம் ஏக்கர் வயலில் தேங்கி நிற்கும் மழைநீர்

By MuthuKumar
26 Nov 2025

திருத்துறைப்பூண்டி, நவ. 27: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2000 ஏக்கருக்கும் மேலான விளை நிலங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையினால், சம்பா - தாளடி சாகுடி செய்யப்பட்ட இளம் பயிர்கள் மழை...

நீடாமங்கலம் அருகே பழுதடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

By MuthuKumar
25 Nov 2025

நீடாமங்கலம், நவ. 26: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் ரிசியூர் ஊராட்சியில் உள்ளது வரதராஜ பெருமாள் கட்டளை, கட்டையடி. இந்த 2 ஊர்களுக்கு இடையில் சாலை மிகவும் குண்டும் குழியுமாக பழுதடைந்துள்ளது. இந்த சாலை வழியாக வரதராஜ பெருமாள் கட்டளை-காரிச்சிங்குடி இடையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் வழியாக காரிச்சாங்குடி, மடப்புரம், சமுதாயக்கரை, மேலாளவந்தச்சேரி, கீழாளவந்துச்சேரி, தேவங்குடி...

திருவாரூர் நகர்மன்றத்திற்கு மாற்றுதிறனாளி உறுப்பினர் பதவியேற்பு

By MuthuKumar
25 Nov 2025

திருவாரூர், நவ. 26: திருவாரூர் நகர்மன்றத்திற்கு மாற்றுதிறனாளி உறுப்பினராக அரசு மூலம் தேர்வு செய்யப்பட்டவருக்கு நேற்று பதவி பிரமானம் செய்துவைக்கப்பட்டது. தமிழகத்தில் 3ம் பாலினத்தவர் என்று அழைக்கப்பட்டு வந்தவர்களுக்கு திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் என்றும், ஊனமுற்றோர் என்று அழைக்கப்பட்டு வந்தவர்களை மாற்றுதிறனாளிகள் என்றும் பெயர் சூட்டி மறைந்த முதல்வர் கருணாநிதி அழகு பார்த்தார். அவரது வழியில்...