உலக சாரணர் தினத்தை முன்னிட்டு பள்ளிகளில் மரக்கன்று நடும் விழா
திருத்துறைப்பூண்டி, ஆக. 6: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மன்னார்குடி பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பாக மாவட்ட முதன்மை ஆணையரும், மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் ராஜேஸ்வரி மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் சாவித்திரி ஆகியோரது ஆலோசனையின் பேரில் உலக சாரணர் தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் ஒரு பள்ளி ஒரு மரம் என்ற...
திருத்துறைப்பூண்டி அரசுப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்
திருத்துறைப்பூண்டி, ஆக. 6: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. முதுகலை ஆசிரியர் பாஸ்கரன் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் கருணாமூர்த்தி, ஆடின் மெடோனா, உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியை வெற்றிச்செல்வி வரவேற்றார். வட்டசட்ட பணிகள் குழு தன்னார்வலர் கருணாநிதி,...
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் 248 மனுக்கள் பெறப்பட்டன
திருவாரூர், ஆக. 5: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் 248 மனுக்கள் பெறப்பட்டன. திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நேற்று கலெக்டர் மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா...
அறநிலைத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை முத்துப்பேட்டை அருகே நாச்சிகுளம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நல்லொழுக்க பயிற்சி
முத்துப்பேட்டை, ஆக.5: முத்துப்பேட்டை அடுத்த நாச்சிகுளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு நல்லொழுக்க பயிற்சி வகுப்பு கிளை தலைவர் யூசுப்கான் தலைமையில் நடைப்பெற்றது. கிளை பொருளாளர் அலாவுத்தீன், கிளை துணை தலைவர் காதர் மைதீன், கிளை துணை செயலாளர் ஜாபர், மாணவரணி ஜுபைர், தொண்டரணி முஜம்மில்,...
கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கல்
முத்துப்பேட்டை, ஆக.5: கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர், பிரிண்டர், ஸ்கேனர், ஸ்பீக்கர்ஸ் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு தலைவர் பாலச்சந்திரன் தலைமை வகித்தார். முன்னதாக பள்ளி தலைமையாசிரியை வனிதா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக சாசன தலைவர் கிருஷ்ணமூர்த்தி கலந்துக்கொண்டனர்.இதில் முன்னாள்...
திருத்துறைப்பூண்டி புனித லூர்து அன்னை ஆலயத்தில் யூபிலி சிலுவை
திருத்துறைப்பூண்டி, ஆக.4: திருத்துறைப்பூண்டி பங்கு புனித லூர்து அன்னை ஆலயத்தில் உலக கிறிஸ்தவர்கள் கொண்டாடும் யூபிலி ஆண்டு இந்த ஆண்டு போப் ஆண்டவர் அறிவிக்கப்பட்ட எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஆண்டாக கொண்டாடுவதன் அடையாளமாக தஞ்சை மறை மாவட்டத்தில் இருந்து யூபிலி சிலுவையானது மறை மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு பங்கிற்கும் சென்று வருகின்றது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை பள்ளங்கோயில்...
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பெருக்கு விழா
மன்னார்குடி, ஆக. 4:மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பெருமாள் சர்வ அலங்காரத்தில் வலம்வந்தார். மன்னார்குடியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பாமணி ஆற்றங்கரையில் நேற்று காலை முதலே ஏராளமான பெண்கள் திரண்டு கா விரி தாயை வழிபட்டனர். படித் துறைகளில் மஞ்சள், குங்குமம், காதோலை கருகமணி, கண்ணாடி, பழங்கள், மலர்கள் ஆகியவற்றை வைத்து...
குடவாசல் அருகே சேதினிபுரம் தட்டி பாலம் சேதமடைந்ததால் பொதுமக்கள் அவதி
வலங்கைமான், ஆக.4: குடவாசல் ஒன்றியம் சேதினிபுரம் தட்டி பாலம் சேதமடைந்தால் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் குடிதண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் ஆற்றில் வீணாகிறது. இதனையடுத்து உடனடியாக பாலத்தை சீர் செய்தும் குடிநீர் வீணாகுவதை தடுக்க வேண்டும் சிபிஎம் கட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். சேதினிபுரம் ஊராட்சியில் முடிகொண்டான் ஆற்றில் உள்ள...
திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் சர்வதேச சாரணர் தின கொண்டாட்டம்
திருத்துறைப்பூண்டி, ஆக.3: திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச சாரணர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஆசிரியர்கள் பாக்யராஜ், பாஸ்கரன், எழிலரசி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மணிகண்டன் வரவேற்புரையாற்றினார். தலைமை ஆசிரியர் பொறுப்பு பாலமுருகன் தலைமை வகித்து பேசுகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ம் சர்வதேச சாரணர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று சாரணியர் இயக்கமும் சமுதாய வளர்ச்சிக்காகப்...