கல்லூரி மாணவியின் கண்கள் தானம்

பூந்தமல்லி, நவ.7: திருவேற்காட்டில் மன உளைச்சலில் இருந்து வந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதில் இறந்தவரின் கண்களை அவரது பெற்றோர்கள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். திருவேற்காடு, சுந்தர சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ்(42). இவர் ஏ.சி., பிரிட்ஜ், மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுமதி அதே பகுதியில் உள்ள...

திருவள்ளூரில் இயற்கை வேளாண் சந்தை: துணை இயக்குநர் தகவல்

By Karthik Yash
06 Nov 2025

திருவள்ளூர், நவ.7: திருவள்ளூர் உழவர் சந்தை வளாகத்தில், வரும் 9ம்தேதி இயற்கை வேளாண் சந்தை நடைபெறுகிறது என்று துணை இயக்குநர் சசிரேகா தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனை துறை துணை இயக்குநர் சசிரேகா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திருவள்ளூர் உழவர் சந்தையில் மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவின்பேரில், இயற்கை வேளாண்...

சோழவரம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் 5000 நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் வேதனை

By Karthik Yash
05 Nov 2025

புழல், நவ.6: சோழவரம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், 4 நாட்களாக 5000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில்,...

திருவள்ளூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

By Karthik Yash
05 Nov 2025

திருவள்ளூர், நவ.6: திருவள்ளூர், பெரியகுப்பத்தில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று (6ம் தேதி) காலை 11 மணி முதல் 1.30 மணி வரை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமை தாங்கி மின் நுகர்வோர்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெறவுள்ளார். எனவே, திருவள்ளூர் கோட்டத்திற்குட்பட்ட...

பழவேற்காடு அருகே சாலை வசதி இல்லாததால் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய படகில் கொண்டு செல்லும் அவலம்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

By Karthik Yash
05 Nov 2025

பொன்னேரி, நவ.6: பொன்னேரி தொகுதி, பழவேற்காடு அருகே உள்ள கோட்டைக்குப்பம் கிராமத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு சாலையில் வழி இல்லாததால், படகில் சுடுகாட்டுக்கு எடுத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கோட்டைகுப்பம் கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு 100 மீட்டர் அளவிற்கு தார் சாலை...

ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கிருஷ்ணா கால்வாய் சேதம்: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

By Karthik Yash
04 Nov 2025

ஊத்துக்கோட்டை, நவ.5: ஊத்துக்கோட்டை, சிட்ரபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சேதமடைந்த கிருஷ்ணா கால்வாய் கரைகளை அடுத்த தவணை தண்ணீர் திறப்பதற்குள் சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இதில், 3 டிஎம்சி சேதாரம்...

சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

By Karthik Yash
04 Nov 2025

பெரியபாளையம், நவ.5: பெரியபாளையம் அருகே, சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சாமி கோயில் உள்ளது. முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆந்திரா உள்ளிட்ட...

புழல் - செங்குன்றம் இடையே சாலை விரிவாக்க பணி விரைந்து முடிக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

By Karthik Yash
04 Nov 2025

புழல், நவ. 5: புழல் அம்பேத்கர் சிலை - செங்குன்றம் இடையே நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்பில் வாகன ஓட்டிகள் உள்ளனர். சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, புழல் - அம்பத்தூர் சாலை சந்திப்பில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் திசையில், புழல் மத்திய சிறைச்சாலையில்...

சிறுவாபுரி முருகன் கோயிலில் ரூ.81 லட்சம் உண்டியல் காணிக்கை

By Karthik Yash
31 Oct 2025

பெரியபாளையம், நவ.1: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு, 6 வாரங்கள் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதனால், செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுவது வழக்கம். இந்நிலையில், கடந்த 72 நாட்களுக்கு பிறகு பக்தர்கள்...

செங்குன்றம் அடுத்த வடகரை கிரான்ட் லைன் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி 4 வழிச்சாலை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

By Karthik Yash
31 Oct 2025

புழல், நவ.1: செங்குன்றம் அருகே வடகரை கிரான்ட் லைன் பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, 4 வழிச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. செங்குன்றம் அடுத்த வடகரை பைபாஸ் சாலை சிக்னலில் இருந்து பாப்பாரமேடு, வடகரை, கிராண்ட் லைன், வடபெரும்பாக்கம், மாதவரம் வரை செல்லும் மாதவரம் நெடுஞ்சாலை, வடகரை பைபாஸ் சாலையில் இருந்து...