மின்சார வயர் உரசி லாரி தீ விபத்து ரூ.5 லட்சம் டயப்பர்கள் எரிந்து நாசம்
பூந்தமல்லி, நவ.13: திருவேற்காட்டில் மின்சார வயர் உரசி கன்டெய்னர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான டயப்பர்கள் எரிந்து நாசம் நாசமாகின. ஹரியானா மாநிலத்தில் இருந்து குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் டயப்பர்கள் ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று திருவேற்காடு நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த கண்டெய்னர் லாரியை டிரைவர் சல்மான் என்பவர் ஓட்டி...
தடகள போட்டி
திருவள்ளூர், நவ.13: திருவள்ளூர் மாவட்ட தடகளப் போட்டிகள் வரும் 28ம்தேதி திருவள்ளூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், 14 வயதுக்கு உட்பட்ட பெண் சிறுமிகள், 21.12.2011 முதல் 20.12.2013 தேதிக்குள்ளாக பிறந்திருக்க வேண்டும், 16 வயதுக்கு உட்பட்ட பெண் சிறுமிகள் 21.12.2009 முதல் 20.12.2011 தேதிக்குள்ளாக பிறந்திருக்க வேண்டும், 14 வயதுக்கு...
நீர் மேலாண்மைக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு இந்தியாவின் சிறந்த ஊராட்சியாக திருவள்ளூர் மாவட்டம் பாலாபுரம் தேர்வு
திருத்தணி, நவ.12: தேசிய அளவில் நீர் மேலாண்மையில் சிறப்பான செயல்பாடுகள் மூலம் சிறந்த ஊராட்சிக்கான தேசிய விருதுக்கு பாலாபுரம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் நீர்வளத்துறை சார்பில், 2024ம் ஆண்டுக்கான மழைநீர் சேகரிப்பு, நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு 6வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்,...
100 பொய் சொல்லவில்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமிக்கு தூக்கம் வராது: திமுக அமைப்பு செயலாளர் பேட்டி
திருவள்ளூர், நவ.12: காலை முதல் மாலைக்குள்ளாக 100 பொய் சொல்லவில்லை என்றால், எடப்பாடி பழனிச்சாமிக்கு தூக்கம் வராது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டு வந்ததை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று திருவள்ளூரில் நடந்தது. திமுக மாவட்ட...
டெல்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் தமிழக-ஆந்திர எல்லையில் வாகன சோதனை தீவிரம்
திருத்தணி, நவ.12: டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, திருத்தணியில் தமிழக -ஆந்திர மாநிலங்களின் எல்லையில் கண்காணிப்பு பணியில் உள்ள போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் நேற்று முன்தினம் இரவு காரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 9 பேர் உடல் சிதறி இறந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில்...
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு ஏற்றிவந்த 300 வாகனங்கள் காத்திருப்பு
திருத்தணி, நவ.11: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு ஏற்றிவந்த 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் காத்திருப்பதால் இடநெருக்கடி ஏற்பட்டு டோக்கன் போட 24 மணி நேரம் வாகனங்களில் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திருவாலங்காட்டில் இயங்கி வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த மாதம் 24ம்தேதி கரும்பு அரவை தொடங்கி நடைபெற்று வருகிறது....
பூண்டி நீர்த்ேதக்கத்திலிருந்து 1000 கன அடியாக குறைத்து உபரி நீர் வெளியேற்றம்: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 300 கன அடி உபரி நீர் திறப்பு
திருவள்ளூர், நவ.11: பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 2000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது 1000 கன அடியாக குறைத்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. குறிப்பாக...
பொக்லைன் டிரைவரை மிரட்டி பணம் பறிப்பு
பள்ளிப்பட்டு, நவ.11: பொதட்டூர்பேட்டை அருகே ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் யாதவேந்திரன்(எ) சின்னா(49), பொக்ைலன் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு அத்திமாஞ்சேரிபேட்டையில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த 3 வாலிபர்கள் கல்லால் தாக்கிவிட்டு ரூ.7,400 பறித்துச் சென்றனர். இதுகுறித்து யாதவேந்திரன் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு...
ஆர்.கே.பேட்டையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முன் சோதனை பயிற்சி வகுப்பு
ஆர்.கே.பேட்டை, நவ.7: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் அறிவிப்பின்படி, ஆர்.கே.பேட்டையில் 2027ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு முன் சோதனை பயிற்சி வகுப்பு அளிக்கப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி பகுதிகளில் 2027ம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன்மாதிரி சோதனை நடத்தப்படும்...