கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
திருவொற்றியூர், ஆக. 6: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் குளத்தில் மீன்கள் இறந்து கிடப்பதைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருவெற்றியூர் சன்னதி தெருவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோயில் உள்ளது. பூலோக கயிலாயம் என்ற வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலின் உள்புறத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் மீன்கள், மற்றும்...
ஊத்துக்கோட்டை அருகே பயங்கரம் மாந்தோப்பில் காவலாளி வெட்டிக் கொலை: கள்ளத்தொடர்பா? போலீசார் விசாரணை
ஊத்துக்கோட்டை, ஆக.6: ஊத்துக்கோட்டை அருகே மாந்தோப்பில் காவலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊத்துக்கோட்டை அருகே அதிலவாக்கம் கிராமத்தில் நாகேஷ்வரராவ் என்பவருக்குச் சொந்தமான மாந்தோப்பில் கட்டிலில் படுத்தபடி ரத்த காயங்களுடன் காவலாளி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக நேற்று முன்தினம் பென்னாலூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு...
பேருந்து அடியில் தூங்கியபோது டயரில் சிக்கி பெண் படுகாயம்
போரூர், ஆக.5: அமைந்தகரை பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (41), தனியார் பேருந்து டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு, ஷெனாய் நகரில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையோரம் பேருந்தை நிறுத்திவிட்டு, மறுநாள் காலை அந்த பேருந்தை எடுக்க வந்துள்ளார். பேருந்தை பின்னோக்கி இயக்கியபோது திடீரென பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதால், கீழே...
10 ஆண்டாக பேசாததால் ஆத்திரம் மனைவி வாயில் ஆசிட் ஊற்றிய கணவர் கைது
மாதவரம், ஆக.5: அயனாவரம் நாராயணன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (44), பெயின்டர். இவரது மனைவி டெய்சி ராணி (39). இவர்களுக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். சீனிவாசனுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், ஒரே வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக...
காக்கவாக்கம் கிராமத்தில் ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளி கட்டக்கோரி கலெக்டரிடம் மனு
திருவள்ளூர், ஆக.5: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், எல்லாபுரம் ஒன்றியம், காக்கவாக்கம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்தப்பள்ளி மிகவும் பழுதடைந்து விட்டதால், அதனை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில், இந்த பள்ளி கட்டிடம் 2 ஆண்களுக்கு முன்பு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்நிலையில், பள்ளி...
ஆதிதிராவிடர், பழங்குடியினர்களுக்கு ஜெர்மன் தேர்வுக்கான பயிற்சி
திருவள்ளூர், ஆக. 4: தழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழிதேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கு பிஎஸ்சி நர்சிங், பொதுநர்சிங் மற்றும் மருத்துவத்தில் டிப்ளமோ ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 21 முதல் 35 வயதிற்குள்ளும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு...
ஆர்.கே.பேட்டையில் ரூ.6.69 கோடியில் தார்சாலை: எம்எல்ஏ தொடங்கிவைத்தார்
ஆர்.கே.பேட்டை, ஆக. 4: ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சமத்துவபுரம் கிராமத்தில் இருந்து கொண்டாபுரம் கிராமம் வரை 4 கிமீ சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் திருத்தணி எம்எல்ஏ...
6 வழிச்சாலை பணிக்கு வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான இரும்பு பொருள் திருட்டு: வாலிபர் கைது
திருவள்ளூர், ஆக. 4: திருவள்ளூர் அடுத்த கல்யாணகுப்பம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 6 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை எல் அன்ட் டி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதில் திட்ட மேலாளராக மோகன் (40) என்பவர் பணி புரிந்து வருகி றார். இந்நிலையில் அந்தப் பகுதிக்கு ஷேர்...
நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்
ஆவடி, ஆக. 3: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், ”நலம் காக்கும் ஸ்டாலின்” என்னும் முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டு நேற்று முதல் நடைமுறையில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் ஊரக வட்டாரங்களில் 14, வட்டாரங்களிலும் 42 மற்றும் ஆவடி மாநகராட்சியில் 3 முகாம்கள் நடைபெற உள்ளது. அதன்படி...