காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்: எம்.பி, கலெக்டர், எஸ்.பி, எம்எல்ஏ அஞ்சலி
திருத்தணி, டிச.7: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்த திருத்தணி பகுதியைச் சேர்ந்த இளம் ராணுவ வீரர் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, சத்திரஞ்ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்த கன்னிவேல் என்பவரின் மகன் சக்திவேல்(30). இந்திய ராணுவத்தில் 2018ம் ஆண்டு பணியில்...
பூந்தமல்லி அருகே பாரிவாக்கத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த ஏரி உபரிநீர்: பொதுமக்கள் கடும் அவதி
பூந்தமல்லி, டிச.6: பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட பாரிவாக்கத்தில் ஏரி உள்ளது. தற்போது பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த ஏரி, ஒரு காலத்தில் மிகப்பெரிய ஏரியாக இருந்த நிலை மாறி தற்போது சுருங்கிப் போய் குளம் போல காட்சியளிக்கிறது. பாரிவாக்கம், கண்ணபாளையம், மேட்டுப்பாளையம், பிடாரிதாங்கல், பாணவேடு தோட்டம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக பாரிவாக்கம்...
பழவேற்காட்டில் வழி தவறி வந்த புள்ளிமான் வனத்துறையிடம் ஒப்படைப்பு
பொன்னேரி, டிச.6: பழவேற்காட்டில் வழித்தவறி வந்த புள்ளிமான் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, பழவேற்காட்டில், ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி தளம் அமைந்துள்ள வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த புள்ளிமான் ஒன்று, ஆந்திர-தமிழ்நாடு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஜமிலாபாத் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்றது. இதுகுறித்து, வீட்டின் உரிமையாளர்...
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: பட்டதாரி வாலிபர் கைது
போரூர், டிச.6: சென்னை விருகம்பாக்கம் சாய் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (27). பட்டதாரியான இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர், தனது வீட்டின் அருகே வசிக்கும் 8ம் வகுப்பு மாணவியுடன் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பழகி வந்துள்ளார். அப்போது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம்...
புழல் அருகே தொடர் மழை காரணமாக குளமாக மாறிய அரசு அலுவலகங்கள்: உடனடியாக அகற்ற கோரிக்கை
புழல், டிச.5: தொடர் மழை காரணமாக, மாதவரம் வட்டாட்சியர் அலுவலகம், வடசென்னை கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான புழல், செங்குன்றம், தீர்த்தங்கரையம்பட்டு, குமரன் நகர், விளாங்காடுப்பாக்கம்,...
பாடியநல்லூர் ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் அகற்றும் பணி: கலெக்டர் பிரதாப் ஆய்வு
புழல், டிச.5: செங்குன்றம் அடுத்து பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மகா மேரு பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்த மழையால், தாழ்வான பகுதிகளிலும், தெருக்களிலும் மழைநீர் தேங்கி குளம்போல் இருந்ததால், அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், பாடியநல்லூர் ஊராட்சி சார்பில், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மின்...
திருத்தணியில் அகல் விளக்கு சரிந்து விழுந்ததில் ரூ.1 லட்சம் மின் சாதன பொருட்கள் எரிந்து நாசம்
திருத்தணி, டிச.5: திருத்தணியில் மின் சாதன பொருட்கள் பழுது நீக்கும் கடையில் அகல் விளக்கு சரிந்து விழுந்ததில் ரூ.லட்சம் மின் சாதன பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, திருத்தணி நகரம் முழுவதும் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் நேற்று மாலை தீபம் ஏற்றி வைத்து கொண்டாடப்பட்டது. இதில், இந்திரா நகரை...
நீர்வரத்து அதிகமாக வருவதால் புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு 2500 கன அடியாக அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
புழல், டிச.4: தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் புழல் ஏரியிலிருந்து 2500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, மாவட்ட கலெக்டர் பிரதாப் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட...
பூண்டியில் 500 கன அடி வெளியேற்றம்
திருவள்ளூர், டிச.4: வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. குறிப்பாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்தேக்கங்களும் வேகமாக நிரம்பியது. இந்நிலையில், டிட்வா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்ததை அடுத்து, அதிக கனமழை பெய்யும்...