திருமணமாகாத விரக்தியில் கடிதம் எழுதி வைத்துவிட்டு நில அளவையர் தற்கொலை: தண்டவாளத்தில் உடல் மீட்பு

  திருவள்ளூர், ஜூலை 31: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், புதுமாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ராவணன் (35). இவர் திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவையாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே ராவணன் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி...

ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை இடையே ரூ.32 கோடியில் தொடங்கப்பட்ட சாலைப்பணி பாதியில் நிறுத்தம்: விபத்தில் சிக்கி பொதுமக்கள் அவதி

By Karthik Yash
29 Jul 2025

ஊத்துக்கோட்டை, ஜூலை 30: ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை இடையே ரூ.32 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட சாலைப்பணி பாதியில் நிறுத்தப்பட்டதையடுத்து மீண்டும் தொடங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஜனப்பன்சத்திரம் முதல் பெரியபாளையம் வழியாக ஊத்துக்கோட்டை வரை தார்ச்சாலை போடப்பட்டது. இந்த. சாலையில் சென்னையில்...

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அசாம் வாலிபருக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்: வழக்கறிஞர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு

By Karthik Yash
29 Jul 2025

திருவள்ளூர், ஜூலை 30: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் கடந்த 12ம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியை மர்ம நபர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கடந்த 25ம் தேதி அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா (35) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் புழல் மத்திய...

பூந்தமல்லியில் காரில் கடத்திய ரூ.5 லட்சம் மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல்: ஒருவர் கைது

By Karthik Yash
29 Jul 2025

பூந்தமல்லி, ஜூலை 30: பூந்தமல்லியில் காரில் கடத்திய ரூ.5 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்தனர். பூந்தமல்லி அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், பூந்தமல்லி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சந்திரமவுலி தலைமையில் தலைமைக் காவலர்கள் ஜேம்ஸ், செல்வம், கிருஷ்ணமூர்த்தி, ராமு மற்றும் போக்குவரத்து போலீசார்...

ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருத்தணி கோயிலில் அலகு குத்தி, காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

By Karthik Yash
28 Jul 2025

திருத்தணி, ஜூலை 29: திருத்தணி முருகன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பாலாபிஷேகம் மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு...

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் ஆவடி மாநகர போலீசாருக்கு 10 பதக்கங்கள், 2 கோப்பைகள்

By Karthik Yash
28 Jul 2025

ஆவடி, ஜூலை 29: தமிழ்நாடு காவல் துறை சார்பில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் ஆவடி மாநகர போலீசார் 10 பதக்கங்கள், 2 கோப்பைகள் வென்றனர். தமிழ்நாடு காவல் துறையின் 2025ம் ஆண்டிற்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அதிதீவிரப்படை பயிற்சி பள்ளியின் துப்பாக்கி...

ஆவடி மாநகராட்சி கூட்டத்தில் 163 தீர்மானங்கள் நிறைவேற்றம்

By Karthik Yash
28 Jul 2025

ஆவடி, ஜூலை 29: ஆவடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடந்தது. மேயர் உதயகுமார் தலைமை தாங்கினார். கமிஷனர் சரண்யா முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் குறித்து நடந்த விவாதங்களில் கவுன்சிலர்கள் பேசியதாவது: மேகலா னிவாசன் (காங்.): விவேகானந்தா தெருவில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு 9 மாதங்களாக பழுதாகி உள்ளது. அதை சீரமைக்க வேண்டும்....

புதிதாக தொடங்கிய கட்சியில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பதவியேற்றார்

By Ranjith
27 Jul 2025

  ஆவடி: புதிதாக தொடங்கிய தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பதவியேற்றார். முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவரது மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி ஆம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவு...

மீனவர் வலையில் சிக்கிய 3 ராட்சத சுறா மீன்கள்: கேரள வியாபாரி வாங்கி சென்றார்

By Ranjith
27 Jul 2025

  திருவொற்றியூர்: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் விசைப்படகில் ஜனார்த்தனன், சரண் உள்ளிட்ட சில மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். பின்னர், மீன் பிடித்துக்கொண்டு நேற்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் விசைப்படையில் 3 ராட்சத சுறா மீன்கள் பிடித்து வரப்பட்டது. ஒவ்வொரு மீனும் 400 கிலோ...

சோழவரம் அருகே அடுத்தடுத்து மர்மமாக இறந்த தெரு நாய்கள்: விஷம் வைத்து கொன்றதாக புகார்

By Ranjith
27 Jul 2025

  புழல்: சோழவரம் அருகே தெரு நாய்கள் அடுத்தடுத்து மர்மமாக இறந்ததையடுத்து அவை விஷம் வைத்து கொல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர பகுதிகளில் நாளுக்குநாள் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் சாலைகளில் நடமாடும் பொதுமக்களை நாய்கள் கடித்து குதறி, அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தெரு...