ஊத்துக்கோட்டையில் தயார் நிலையில் மழைக்கால தடுப்பு உபகரணங்கள்: பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு
ஊத்துக்கோட்டை, நவ.29: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மழைகால முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் இருந்த மழை கால தடுப்பு பொருட்களை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு செய்தனார். திருவள்ளுர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் டிட்வா புயல் மழை காரணமாக முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட...
பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் படிவத்தினை நாளைக்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர், கிராம அலுவலரிடம் ஒப்படைக்காலம்: கலெக்டர் பிரதாப் தகவல்
திருவள்ளூர், நவ.29: திருவள்ளூரில், வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலர், கிராம நிர்வாக அலுவலரிடம் நாளைக்குள் ஒப்படைக்காலம் என்று கலெக்டர் பிரதாப் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி, திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்தில் உள்ள 1.கும்மிடிப்பூண்டி, 2.பொன்னேரி,...
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியில் இருந்து மீண்டும் 100 கன அடி உபரி நீர் திறப்பு
புழல், நவ.28: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியிலிருந்து மீண்டும் 100 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 2823 மில்லியன் கனஅடி நீர் உள்ளது....
கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில் ஒன்றிய அரசு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி இயக்குநர் ஆய்வு
கும்மிடிப்பூண்டி, நவ.28: கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில் ஒன்றிய அரசு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட காட்டுகொள்ளை தெரு பகுதியில் சுமார் 30 ஏக்கரில் தாமரை ஏரி உள்ளது. இந்த தாமரை ஏரியானது கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு நீர் ஆதாரமாக...
அடுத்தவரின் கடையை வாடகைக்கு விட்டு ரூ.7 லட்சம் நூதன மோசடி : பெண்ணுக்கு வலை
ஆவடி, நவ.28: ஓ.எல்.எக்ஸ் மூலம் வேறு ஒருவருக்கு சொந்தமான கடையை வாடகைக்கு விட்டு ரூ.7 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண் மீது வாலிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (32). ஆவடியில் பிரியாணி கடை நடத்துவதற்காக ஓ.எல்.எக்ஸ் மூலம் மாத வாடகைக்கு கடை தேடி வந்தார். அப்போது, சென்னை அண்ணாநகர்...
பெரியபாளையம் அருகே லாரி மீது பேருந்து மோதி விபத்து
ஊத்துக்கோட்டை, நவ.27: ஊத்துக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனைக்கு சொந்தமான அரசு பேருந்து செங்குன்றத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பெரியபாளையம் வழியாக ஊத்துக்கோட்டை நோக்கி சென்றது. அப்போது, பெரியபாளையம் அடுத்த, கன்னிகைப்பேர் அருகே தானாகுளம் என்ற பகுதியில் சென்றபோது முன்னாள் கற்கள் ஏற்றி சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால், அரசு பேருந்து லாரியின் பின்னால் மோதியது....
சிஏ தேர்வில் ஒரு மார்க் குறைவாக வந்ததால் பட்டதாரி வாலிபர் தற்கொலை
புழல், நவ.27: புழலில் சிஏ தேர்வில் ஒரு மார்க் குறைவாக வந்ததால், மனவேதனையில் பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். புழல் அடுத்து லட்சுமிபுரம், மகாலட்சுமி நகர், பச்சையப்பன் காலனியை சேர்ந்தவர் சுந்தர் (34). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். படிப்பின்மேல் அதிக ஆர்வம் கொண்ட இவர், கடந்த சில நாட்களுக்கு...
கிராம உதவியாளர் தேர்வு ஒத்திவைப்பு
திருவள்ளூர், நவ.27: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலகில், கிராம உதவியாளர் நிலையில் 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 151 பணியிடங்களை நிரப்பிட மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுதும் திறனுக்கான தேர்வு 29ம் தேதி (நாளை மறுநாள்) காலை 11 மணி...
சிறுமி ஹாசினி பாலியல் கொலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு
சென்னை, நவ. 26: கடந்த 2017ம் ஆண்டு சென்னை போரூர் அருகே 6 வயது சிறுமி ஹாசினியை தஷ்வந்த் என்ற நபர் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமினில் வெளிவந்தார். அவ்வாறு ஜாமினில் வந்த தஷ்வந்த செலவுக்கு பணம் கொடுக்க மறுத்த அவரது தாயை கொலை...