திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 1.71 கோடி வசூல்: 649 கிராம் தங்கம், 14,000 கிராம் வெள்ளி குவிந்தது

  திருத்தணி, ஜூலை 24: திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 23 நாட்களில் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கையாக ரூ.1.71 கோடி செலுத்தியுள்ளனர். திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி ஆடி மாதத்தில் முதல் கிருத்திகையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட...

கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை மீண்டும் உயர்வு

By Ranjith
23 Jul 2025

  மாதவரம், ஜூலை 24: ஆடி அமாவாசையை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை மீண்டும் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு, கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி...

திருத்தணி தொகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்: கலெக்டரிடம் எம்எல்ஏ மனு

By Ranjith
22 Jul 2025

திருவள்ளூர்: திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை நேற்று கலெக்டர் மு.பிரதாப்பிடம், திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் நேரில் வழங்கினார். அந்த மனுவில், அரசுப் பள்ளிகளை சீரமைக்க வேண்டும், இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும்...

குடிபோதையில் தகராறு தனியார் ஊழியர் அடித்துக் கொலை: 3 பேரை பிடித்து விசாரணை

By Ranjith
22 Jul 2025

  புழல்: செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை, காசி விஸ்வநாதன் தெருவில் உள்ள ஒரு காலி மனையில் சுமார் 27 வயதுள்ள வாலிபர் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கி கொலை செய்யப்பட்டு சடலமாக இருப்பதாக செங்குன்றம் போலீசாருக்கு நேற்று அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு...

திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

By Ranjith
22 Jul 2025

  ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பேரூர் செயலாளர் அபிராமி குமரவேல் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத் தலைவர் குமரவேல், பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், வெங்கடாசலதி, பேரூர் அவைத்தலைவர் வெங்கடேசன், துணை செயலாளர்கள் பார்த்திபன், திரிபுரசுந்தரி, பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்....

புழல் சிறையில் போதைப்பொருள் விழிப்புணர்வு சிறப்புத்திட்ட தொடக்க விழா

By Francis
21 Jul 2025

  திருவள்ளூர், ஜூலை 22: தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை மற்றும் பிஆர்ஐஎஸ்எம் அமைப்பின் சார்பில், போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் பற்றிய தொடர் விழிப்புணர்வு சிறப்புச்செயல் திட்ட தொடக்க விழா புழல், மத்திய சிறையில் நடைப்பெற்றது. தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். சென்னை...

மீஞ்சூர் நாலூர் ஊராட்சியில் புதிய சாலைக்கு பூமி பூஜை

By Francis
21 Jul 2025

  பொன்னேரி, ஜூலை 22: மீஞ்சூர் ஒன்றியம், நாலூர் ஊராட்சியில் கம்மவார்பாளையம் சாலை குண்டும் குழியுமாக இருந்தது. எனவே, இப்பகுதியில் புதிய சாலை போட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனை ஏற்று முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 93 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான...

காவலரை தாக்கிய 2 பேர் கைது

By Francis
21 Jul 2025

  புழல், ஜூலை 22: சோழவரம் குற்றப்பிரிவு காவலர்கள் பிரித்திவிராஜ் (35) மற்றும் சீனிவாசன் (30) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு செங்குன்றம் அடுத்த நாகாத்தம்மன் நகர் பகுதியில் ரோந்து சென்றபோது ஆட்டோவில் இருந்து இறங்கி வந்த 2 போதை ஆசாமிகளிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது இருவரும் சேர்ந்து பிரித்திவிராஜை சரமரியாக தாக்கியதில் அவர்...

ஊத்துக்கோட்டையில் புனித அடைக்கல மாதா ஆலயம் தேர் திருவிழா

By Ranjith
20 Jul 2025

  ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில், புனித அடைக்கல மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 36ம் ஆண்டு தேர்பவனி திருவிழா கடந்த 16ம் தேதி திருவள்ளூர் சாலையில் இருந்து திருக்கொடியை ஊர்வலமாக எடுத்து வந்து கொடியோற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவிற்கு அடைக்கல மாதா ஆலய பங்கு தந்தை அலெக்ஸ் சகாயராஜ் தலைமை தாங்கினார். பாதிரியார்கள் அந்தோணிசாமி, அலெக்ஸ்ராஜ், அலெக்ஸ்...

மாற்றுக்கட்சியினர் 100 பேர் திமுகவில் இணைந்தனர்

By Ranjith
20 Jul 2025

  பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த, வல்லூரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்எஸ்கே.ரமேஷ் ராஜ் தலைமையில், ஆரணி, கள்ளூர், பாலவாக்கம், போந்தவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிமுக, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ், தவெக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்....