மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள் வரும் 25ம்தேதிக்குள் இந்திய குடிமை பணி போட்டி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் பிரதாப் தகவல்
திருவள்ளூர், நவ.19: திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமைப் பணிகளில் சேர்வதற்கான போட்டி தேர்வு பயிற்சிக்கு வரும் 25ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ‘மீனவர் நலத்துறை மற்றும் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து 2025-26ம்...
மழை பொழிவு குறைந்துள்ளதால் புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு 1,000 கன அடியாக குறைப்பு
புழல், நவ.19: மழை பொழிவு குறைந்ததால் புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்டு வந்த உபரிநீர் 1,500 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2,713 மில்லியன் கன அடி...
ஆர்.கே.பேட்டை ஒன்றியம் பாலாபுரம் ஊராட்சிக்கு நீர் மேலாண்மை சான்றிதழ்: ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர், கலெக்டரிடம் வழங்கினார்
திருவள்ளூர், நவ.19: புதுதில்லியில் ஒன்றிய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற 6வது தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழாவில், நீர் மேலாண்மையில் சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்ட ஆர்.கே.பேட்டை ஒன்றியம் பாலாபுரம் ஊராட்சிக்கான சான்றிதழை, ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், மாவட்ட கலெக்டர் பிரதாப்பிடம் வழங்கினார். புதுதில்லி விக்யான் பவனில் ஒன்றிய அரசின் ஜல்சக்தி...
பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் 2000 கன அடியாக குறைப்பு
திருவள்ளூர்.நவ.18: வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்தேக்கங்களும் வேகமாக நிரம்பியது. அதன்படி நேற்று இரவு 8 மணி நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் 35 அடி...
ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது
போரூர், நவ.18: சென்னை தரமணி 200 அடி சாலையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தரமணி நடைமேம்பாலத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 4 வாலிபர்களை பிடித்து, அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 20 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், தரமணியை...
சோழவரம் ஏரி உபரிநீர் திறப்பால் 50 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின: விவசாயிகள் வேதனை
புழல், நவ.18: சோழவரம் ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு செல்லும் உபரிநீர் கால்வாய் முறையாக தூர் வாராததால் 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் பங்கு வகித்து வரும் 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 624 மில்லியன் கன அடி...
பழவேற்காட்டில் சந்தனக்குட திருவிழா
பொன்னேரி, நவ.15:பொன்னேரி அடுத்த, பழவேற்காடு கரையார்தெருவில் அமைந்துள்ள ஹஜ்ரத் செய்யதீனாஷேக் அப்துல் சுபூர் மவுலானா காதிரி பக்தாதி மற்றும் ஹஜ்ரத் செய்யதீனா உஸ்தாத் ஷாஹுல் ஹமீது ரிபாய் காதிரி தர்காவில் சந்தன குடம் உருஸ் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், பழவேற்காடு சுற்றுவட்டார பகுதி மட்டுமல்லாமல் ஆந்திரா, சென்னை, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்த...
திருத்தணியில் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருத்தணி, நவ.15: திருத்தணியில் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், மறைந்த ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று குழுந்தைகள் தினத்தையொட்டி, திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் உள்ள நேருவின் முழு உருவ சிலைக்கு நகராட்சி சார்பில் மலர் மாலை...
மேப்பூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்
திருவள்ளூர், நவ.15: பூந்தமல்லி ஒன்றியம், மேப்பூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமில் வட்டாட்சியர் உதயம், தனி வட்டாட்சியர் காந்திமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ் பாபு, அமிழ்தமன்னன், வருவாய் ஆய்வாளர் கல்பனா, கிராம நிர்வாக அலுவலர் அருள்செல்வி ஆகியோர், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். அப்போது, பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக மொத்தம் 409...