செங்குன்றம்-சோத்துப்பாக்கம் இடையே இருளில் மூழ்கும் மாநில நெடுஞ்சாலை: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி

புழல், அக்.28:செங்குன்றம்-சோத்துப்பாக்கம் சாலை பாலவாயல் சந்திப்பு முதல் கும்மனூர் வரை உள்ள மாநில நெடுஞ்சாலையில் தெரு விளக்குகள் இல்லாததால் இருளில் முழுகி உள்ளது. இதனால், சோத்துப்பாக்கம் சாலையில் செல்லும் பொதுமக்கள் பெண்கள் இரவு நேரங்களில் சிரமப்பட்டு வருகின்றனர். செங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளான தீர்த்த கரைம்பட்டு, பாலவாயல், விவேக் அக்பர், அவென்யூ குமரன் நகர், ஸ்டார்...

தொடர் மழையின் காரணமாக மீண்டும் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 7000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

By Karthik Yash
27 Oct 2025

திருவள்ளூர், அக்.28: திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக மீண்டும் பூண்டி நீர்த்தகத்திலிருந்து 7000 கன அடியாக உயர்த்தி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் பருவ மழை தொடங்கி தொடர்ந்து கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக நீர் இருப்பு உயர்ந்து...

நீர்வரத்து குறைந்ததால் புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு நிறுத்தம்

By Karthik Yash
27 Oct 2025

புழல், அக்.28: புழல் ஏரியில் நீர்வரத்து குறைந்ததால், உபரிநீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியில் இருந்து கடந்த 15ம்தேதி முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இவ்வாறு, பெய்து வரும் மழையின்...

திருவாலங்காடு அருகே பாகசாலை, குப்பம் கண்டிகையில் 2 தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின: போக்குவரத்து துண்டிப்பால் 10 கிராம மக்கள் அவதி

By Karthik Yash
25 Oct 2025

திருத்தணி, அக்.26: திருவாலங்காடு அருகே, கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாகசாலை, குப்பம் கண்டிகை ஆகிய பகுதிகளில் 2 தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால் திருவள்ளூர், பேரம்பாக்கம் பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்...

4ம் நாள் கந்த சஷ்டி விழா முருகப்பெருமானுக்கு திருவாபரண அலங்காரம்

By Karthik Yash
25 Oct 2025

திருத்தணி, அக்.26: 4ம் நாள் கந்த சஷ்டி விழா முருகப்பெருமான் திருவாபரண அலங்காரத் தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த புதன்கிழமை சண்முகருக்கு லட்சார்ச்சனையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 7 நாட்கள் நடைபெறும் கந்த சஷ்டி விழாவையொட்டி மூலவருக்கு தினமும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவின் 4ம்...

திருவள்ளூர் அருகே அறுவடை நெல் மழையில் நனைந்து முளைத்தது

By Karthik Yash
25 Oct 2025

திருவள்ளூர், அக்.26: திருவள்ளூர் அருகே புன்னப்பாக்கம் கிராமத்தில் அறுவடை செய்த நெல் மழையில் நனைந்து முளைத்து சேதமானதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருவள்ளூர் அடுத்து புன்னப்பாக்கம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில், சிறு, குறு விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர், விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விவசாயிகள், கடந்த 40 நாட்களுக்கு முன்பு அறுவடை செய்த...

பள்ளிப்பட்டு பகுதியில் 15 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது 2 கிராமங்களை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம்: வீடு இடிந்து விழுந்து மூதாட்டி காயம், பொதுமக்கள் பாதிப்பு

By Karthik Yash
24 Oct 2025

பள்ளிப்பட்டு, அக்.25: பள்ளிப்பட்டு பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் விடிய விடிய 15 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது. இதனால், அங்குள்ள 2 கிராமங்களில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், வீட்டு உபயோக பொருட்கள் நாசமடைந்தது. திருத்தணி, பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக...

மாவட்ட நிர்வாகம் சார்பில் கன மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது: திருவேற்காட்டில் ஆய்வுக்குப்பின் கலெக்டர் பிரதாப் பேட்டி

By Karthik Yash
24 Oct 2025

பூந்தமல்லி, அக்.25: நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட வேலப்பன்சாவடி நூம்பல் பிரதானச் சாலையில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், நீர்வள ஆதாரத்துறை சார்பில் வேலப்பன்சாவடி உயர்மட்ட பாலம் அருகில், மாதிராவேடு தரைப்பாலம் அருகில், காடுவெட்டி உயர்மட்ட மேம்பாலம் அருகில் ஆகிய பகுதிகளில் கூவம் நீர் வழி...

மீஞ்சூர் ஒன்றியத்தில் பன்றிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்

By Karthik Yash
24 Oct 2025

பொன்னேரி, அக்.25: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் 55 ஊராட்சிகள் உள்ளன. தற்போது, வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் மழையால், இந்த ஊராட்சிகளில் உள்ள குளங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, காலரா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மீஞ்சூர் ஒன்றியத்துக்குட்பட்ட வல்லூர்,...

எல்லாபுரம், பூண்டி ஒன்றியங்களில் 1,500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

By Karthik Yash
23 Oct 2025

ஊத்துக்கோட்டை, அக்.24: ஊத்துக்கோட்டை அருகே கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் 1,500க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால், விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். மேலும், விவசாய நிலங்களுக்கு நேரில் சென்று பாதிப்பை கணக்கீடு செய்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள்...