எரிபொருள் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

பூந்தமல்லி, ஜூலை 6: எண்ணூரில் இருந்து 12 ஆயிரம் லிட்டர் எரிபொருளுடன் டேங்கர் லாரி ஒன்று நேற்று குன்றத்தூர் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று கொண்டிருந்தது. லாரியை சென்னையை சேர்ந்த ஓட்டுநர் சூர்யா (30) என்பவர் ஓட்டி வந்தார். குன்றத்தூர் - பெரும்புதூர் பிரதான சாலை சிறுகளத்தூர் அருகே சென்றபோது, டேங்கர்...

திருவள்ளூர் அடுத்த வேடங்கிநல்லூரில் ரூ.33 கோடியில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தீவிரம்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

By Karthik Yash
04 Jul 2025

திருவள்ளூர், ஜூலை 5: திருவள்ளூர் அடுத்த வேடங்கிநல்லூரில் ரூ.33 கோடியில் புதிய பேருந்து நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் திருப்பதி, அரக்கோணம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஊத்துக்கோட்டை, திருத்தணி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு நாள் தோறும் 80 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல்...

ரயில் மோதி தொழிலாளி பலி

By Karthik Yash
04 Jul 2025

திருவள்ளூர், ஜூலை 5: திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம் கடந்த தொழிலாளி ரயில் மோதி பரிதாபமாக பலியானார். திருவள்ளூர் ஆசூரி தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ், அங்குள்ள இனிப்பகத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நாகராஜ் தனது மனைவி சுப்ரஜா, மகன் மோகன் ஆகியோருடன் சென்னைக்கு செல்ல திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்தார். சென்னை செல்லும் மின்சார...

திருவள்ளூர் மாவட்டத்தில் `ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினர் சேர்க்கும் பணி தீவிரம்

By Karthik Yash
04 Jul 2025

திருவள்ளூர், ஜூலை 5: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க `ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற தலைப்பில் வீடு, வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கும் முன்னெடுப்பை தொடங்கி வைத்தார். அதன்படி கடம்பத்தூர் ஒன்றியம், கொப்பூர் கிராமத்தில் `ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற தலைப்பில் வீடு, வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி...

ரூ.2.32 கோடி மோசடியில் இருவர் சிறையிலடைப்பு

By Neethimaan
04 Jul 2025

ஆவடி:சென்னை சாலிகிராமம் எம்ஜிஆர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல்(39). மணலி சாத்தாங்காட்டில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வடிவேல் ஆவடி காவல் ஆணையரகத்தில் கடந்த ஆண்டு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: நான் வேலை செய்யும் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரியும் சென்னை கீழ்க்கட்டளை பகுதியைச் சேர்ந்த...

பொன்னேரி அரசு மருத்துவமனையில் 100வது ரத்த வங்கி: கலெக்டர் எம்எல்ஏ திறந்து வைத்தனர்

By Neethimaan
04 Jul 2025

பொன்னேரி: பொன்னேரி அரசு மருத்துவமனையில் தமிழகத்தின் 100வது ரத்த வங்கியைமாவட்ட கலெக்டர் பிரதாப் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் ஆகியோர் திறந்து வைத்தனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய ரத்தம் தேவைப்படுவோர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய...

கும்மிடிப்பூண்டியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் துவக்க விழா: எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்பு

By Neethimaan
04 Jul 2025

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் நடந்த ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் துவக்க விழாவில் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்றார். கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயில் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை இணைந்து ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் துவக்க விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.வேளாண் உதவி இயக்குநர்...

கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் முறைகேடு விவகாரம் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் உதவி இயக்குநர் ஆய்வு

By Neethimaan
04 Jul 2025

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் எழுந்த முறைகேடு புகார் எதிரொலியாக உதவி இயக்குநர்(தணிக்கை) வீடு வீடாக சென்று ஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 540 வீடுகள் கட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டு தளம்...

மண்டபத்தில் தவறவிட்ட 25 சவரன் ஒப்படைத்த பணிப்பெண்: 4 கிராம் மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது

By Neethimaan
04 Jul 2025

ஆவடி: சென்னை தாம்பரம் மடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன்-மீனாட்சி தம்பதியினர் கடந்த மாதம் 27ம் தேதி ஐயபாக்கத்தில் நடந்த உறவினர் திருமணத்தில் கலந்துகொண்டனர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது பையில் இருந்த நகை பெட்டி மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்....

திருத்தணியில் ஊட்டச்சத்து வேளாண்மை தொடக்க விழா விவசாயிகளுக்கு விதை தொகுப்புகள் மரக்கன்றுகள்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்

By Neethimaan
04 Jul 2025

திருத்தணி: திருத்தணி அருகே நடந்த ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்க விழாவில் விவசாயிகளுக்கு காய்கறி விதை தொகுப்புகள் மற்றும் பரம் மரக்கன்றுகளை எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்.ஊட்டச்சத்து நிறைந்த விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்து ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் ஊட்டச்சத்து வேளாண்மை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொளியில் தொடங்கி வைத்தார். இதையடுத்து தோட்டக்கலைத்...