சாலையில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

  தேனி, ஜூலை 19: தேனி நகரின் முக்கிய சாலைகளாக தேனி நகர் கம்பம் சாலை, மதுரை சாலை, பெரியகுளம் சாலைகள் உள்ளன. இச்சாலைகளில் அதிகாலை தொடங்கி இரவு வரை எப்போதும் போக்குவரத்து வாகனங்கள் அதிகப்படியாக சென்று வருவதால் பெரும் போக்குவரத்து மிகுந்த சாலைகளாக உள்ளன. இந்நிலையில், தேனி நகர் பெரியகுளம் சாலையில், அல்லிநகரம் தொடங்கி...

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதில் சிரமம்

By Ranjith
17 Jul 2025

ஆண்டிபட்டி, ஜூலை 18: ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில் ஆண்டிபட்டி தாலுகா பகுதியில் ஆண்டிபட்டி ஒன்றியம், கடமலை-மயிலை...

கலெக்டர் அலுவலகம் முன் டிட்டோ ஜாக் அமைப்பினர் மறியல் போராட்டம்

By Ranjith
17 Jul 2025

தேனி, ஜூலை 18: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக டிட்டோஜாக் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தொடர் மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராம்குமார் தலைமை வகித்தார்....

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மூணாறில் படகு சவாரி நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

By Ranjith
17 Jul 2025

  மூணாறு, ஜூலை 18: மழை எச்சரிக்கையை தொடர்ந்து முணாறு பகுதி அணைக்கட்டுகளில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சற்று முன்னதாக தொடங்கியது. கடந்த 2 வாரமாக மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று...

தடை செய்யப்பட்ட மாத்திரை விற்ற இருவர் மீது வழக்கு

By Ranjith
16 Jul 2025

  கூடலூர், ஜூலை 17: லோயர்கேம்ப் பேருந்து நிலையம் அருகே ஒருவர் நின்று கொண்டிருந்தார். சந்தேகத்தின்பேரில், குமுளி எஸ்ஐ மாயாண்டி அவரை சோதனை செய்ததில், மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் பொதுமக்களுக்கு விற்க தடை செய்யப்பட்ட 30 மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து மாத்திரைகளை கைப்பற்றிய போலீசார் விசாரித்ததில், அவர் லோயர் கேம்ப் கடைவீதி தெருவை சேர்ந்த...

கூடலூர் நகர்மன்ற கூட்டம்

By Ranjith
16 Jul 2025

  கூடலூர், ஜூலை 17: கூடலூர் நகராட்சி நகர்மன்ற கூட்டம் தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில, ஒப்பந்த காலம் நீட்டிப்பு குறித்தும்,லோயர் கேம்ப் நீரேற்று நிலையத்தில் இருக்கும் மின் மோட்டார்களை இயக்குவதற்கும், குளோரின் அளவினை கண்காணிக்கும் பணிகளை மேற்கொள்ள செலவினம், நகராட்சியில்...

ராணுவ வீரருக்கு கத்திக்குத்து

By Ranjith
16 Jul 2025

  போடி, ஜூலை 17: போடி அருகே உள்ள சுந்தரராஜபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் அருண் (41). இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுவர். தற்போது சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார். இவர் போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் உள்ள ஒரு மதுபாருக்கு சென்றார். அங்கு ஏற்கனவே சுந்தரராஜபுரம் மதுரை வீரன் தெருவை சேர்ந்த மாணிக்கம், இவரது...

ஓடையில் விழுந்து முதியவர் சாவு

By Ranjith
15 Jul 2025

  மூணாறு, ஜூலை 16: மூணாறு அருகே நெடுங்கண்டம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (54). இவர் அடிமாலி நகருக்கு அருகே உள்ள அப்சராகுன்று பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.இவர் அப்பகுதியில் மேஸ்திரி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் அங்குள்ள ஓடையில் ஆணின் சடலம் கிடைப்பதாக அப்பகுதி...

பலாப்பழம் பறித்தபோது மின்சாரம் தாக்கி பெண் பலி

By Ranjith
15 Jul 2025

மூணாறு, ஜூலை 16: மூணாறு அருகே, பலாப்பழம் பறித்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கேரளா மாநிலம், மூணாறு அருகே உள்ள பள்ளிவாசல் ஊராட்சி கல்லார் பகுதியைச் சேர்ந்தவர் சன்னி. இவரது மனைவி பிந்து (48). இவர், வீடு அருகே உள்ள தோட்டத்தில் பலாப்பழம் பறிக்க சென்றார். அங்கு மரத்தில் இருந்த பலாப்பழத்தை, தான் கொண்டு...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

By Arun Kumar
14 Jul 2025

  ஆண்டிபட்டி, ஜூலை 15: ஆண்டிபட்டி பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆண்டிபட்டி-தெப்பம்பட்டி சாலைப்பிரிவில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி தேனி மாவட்ட துணைச் செயலாளர்...