அடிப்படை வசதி செய்ய கோரிக்கை

  வருசநாடு, நவ.18: வருசநாடு அருகே தங்கம்மாள்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்துக்காடு கிராமம் உள்ளது. இங்கு சுடுகாட்டிற்கு அடிப்படை வசதி வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக ஆத்துக்காடு கிராமத்திற்கு என்று எரியூட்டும் கொட்டகை, சுற்றுச்சுவர், ஈமகிரி செய்ய தண்ணீர் வசதி, சாலை வசதி,...

கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது

By Neethimaan
17 Nov 2025

  ஆண்டிபட்டி, நவ.18:ஆண்டிபட்டி அருகே கொண்டம்மநாயக்கன்பட்டி செக்போஸ்ட் அருகே ஆண்டிபட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஐந்து நபர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்களிடம் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர்கள் சொக்கலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த மனோகரன் முத்துமணி(27), மணியக்காரன்பட்டி பகுதியை சேர்ந்த வீரமணி(21), தேனி, பொம்மனம்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் மகன்...

பயிர்களின் சீரான வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துக்கள் அவசியம்

By Ranjith
14 Nov 2025

தேனி, நவ. 15: பயிர்களின் சீரான வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துக்கள் அவசியமென தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் காய்கறிகள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் அதிகளவு பயிரிடப்படுகின்றன. பயிர்கள் ஆரோக்கியமாக வளரவும், அதிக மகசூலை பெறவும் விவசாயிகள் உரங்களை பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு வகை பயிருக்கும் ஒரு வகை சத்து அதிகளவு தேவைப்படுவதால் உரம் பயன்பாடு விவசாயிகளுக்கு...

2ம் போக நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் பாவும் பணி தீவிரம்

By Ranjith
14 Nov 2025

சின்னமனூர், நவ. 15: சின்னமனூர் பகுதியில் இரண்டாம் போகம் குறுவை பருவத்திற்கான நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் பாவும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கில் சுமார் 15,000 ஏக்கர் வயல்வெளி பரப்புகளில் வருடம் இரு போகம் நெல் சாகுபடி விவசாயம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தை அடுத்து இரண்டாம் நெற்களஞ்சியத்திற்கு பெரியாற்றில் வழக்கம்...

நாளை ஐடிஐ தொழில்நுட்ப தேர்வை 440 பேர் எழுதுகின்றனர்

By Ranjith
14 Nov 2025

தேனி, நவ. 15: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நாளை நடைபெற உள்ள ஐடிஐ தொழில்நுட்ப தேர்வினை தேனியில் 440 பேர் எழுத உள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில் நுட்பத் தேர்வான ஐடிஐ தொழிற்பயிற்சி இரண்டாம் நிலை தேர்வுகள் நாளை (நவ.16ம் தேதி) காலை மற்றும் மதியம் நடைபெற உள்ளது.இரண்டாம் நிலை...

சென்டர் மீடியனில் வேன் மோதி டிரைவர் பலி

By Ranjith
12 Nov 2025

நத்தம், நவ.13: திண்டுக்கல் அருகே தோட்டனூத்து பாத்திமா நகரை சேர்ந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டோ (42). திண்டுக்கல்லில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று அதிகாலை மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள சேக்கிபட்டிக்கு பாலை விற்பனைக்கு எடுத்து சென்றார். அங்கு பாலை இறக்கிய பின் மீண்டும் திண்டுக்கல்லுக்கு வந்து...

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

By Ranjith
12 Nov 2025

கூடலூர், நவ.13: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெரியாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகின்றன. மொத்தம் 152 அடி உயரமுள்ள இந்த அணையில் கடந்த நவ.1ம் தேதி நீர்வரத்து 1515.27 கனஅடியாகவும், அணை நீர்மட்டம்...

உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு கூடுதல் தலைமை பொறுப்பு ஒதுக்கீடு

By Ranjith
12 Nov 2025

மூணாறு, நவ.13: கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு கூடுதல் தலைமை பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ளாட்சி தேர்தல், டிச.9 மற்றும் டிச.11ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால், அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் உள்ளாட்சி...

ஓய்வூதியர்கள் சங்க ஆர்ப்பாட்டம்

By Ranjith
11 Nov 2025

தேனி, நவ. 12: தேனியில் நகராட்சி அலுவலகம் முன்பாக நேற்று தமிழ்நாடு அனைத்து துறை அரசு ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் ராமமூர்த்தி மற்றும் கந்தசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய...

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

By Ranjith
11 Nov 2025

தேனி, நவ. 12: தேனியில் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. தேனியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர்...