வீரபாண்டியில் சாலை மேம்பாட்டு பணிகளை ஆய்வு

தேனி, ஜூலை 28: தேனி அருகே வீரபாண்டியில் ரூ.32 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வரும் சாலை மேம்பாட்டு பணிகளை மாநில நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார். தேனி அருகே வீரபாண்டியில் இருந்து சீப்பாலக்கோட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலை அகலப்படுத்துதல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் ரூ.32 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நடந்து...

இரவு நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டுகோள்

By MuthuKumar
27 Jul 2025

தேவாரம், ஜூலை 28: கோம்பை பகுதிகளில் கோம்பை, மேலசிந்தலை சேரி, பல்லவராயன்பட்டி பண்ணைப்புரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதிகள் இருந்தும் இரவு 10 மணிக்கு மேல், அரசு பஸ்களோ, தனியார் பஸ் சேவைகளோ இல்லை. அரசு பஸ்கள் காலையில் இருந்து, இரவு வரை உத்தமபாளையம், போடி, கம்பம், என...

சின்னமனூர் அருகே தண்ணீர் தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வருமா?

By Suresh
25 Jul 2025

சின்னமனூர், ஜூலை 26: சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பேரூராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்கு பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் அனைத்துப் பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் குச்சனூர் ராஜபாளையம் பகுதி மெயின் ரோட்டில் ஆழ்குழாய் மோட்டார் இணைக்கப்பட்டு தண்ணீர்...

முன்விரோதத்தில் கல்லூரி மாணவர் மீது தாக்குதல்

By Suresh
25 Jul 2025

போடி, ஜூலை 26: போடி குலாளர்பாளையம் கரட்டுப்பட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(45). இவரது மகன் அபினேஷ்(18). இவர் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், தெருவில் நடந்து சென்ற அபினேஷை, அஜித்குமார் தனது நண்பருடன் சேர்ந்து வழிமறித்து...

சுருளி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு

By Ranjith
24 Jul 2025

  கம்பம், ஜூலை 25: சுருளி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தேனி மாவட்டம், கம்பம் அருகே பிரசித்தி பெற்ற சுருளி அருவி உள்ளது. இந்த அருவி புண்ணிய தீர்த்தமாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஆடி அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய திரளான மக்கள் குவிந்தனர். கடந்த 5 நாட்களாக சுருளி அருவியில் நீர்வரத்து அதிகமாக...

வகுப்பறைக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

By Ranjith
24 Jul 2025

தேவதானப்பட்டி, ஜூலை 25: சில்வார்பட்டி ஊராட்சிமன்றம் அருகே செயல்பட்டு வருகிறது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது வகுப்பறையில் 5அடி நீளமுள்ள நல்லபாம்பு மாணவர்களை பார்த்ததும் சீரி சத்தமிட்டது. இதை பார்த்த...

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெரியாறு அணை நீர்வரத்து கிடுகிடு

By Ranjith
24 Jul 2025

கூடலூர், ஜூலை 25: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை காரணமாக, பெரியாறு அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கில் இருபோக நெல்சாகுபடி நடக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று முன் தினம் அணையின் நீர்வரத்து 2131 கனஅடியாக இருந்தது. நேற்று...

சின்னமனூர் அருகே வாழைத்தார் திருட்டு 2 பேர் சிக்கினர்

By Ranjith
23 Jul 2025

சின்னமனூர், ஜூலை 24: தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே சீப்பாலக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில், சில மர்ம நபர்கள் வாழைத்தார்களை பறித்து சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அந்தத் தோட்டத்தின் உரிமையாளர் அங்கு இல்லாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இதைப் பார்த்து சத்தம் போட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மர்ம நபர்கள் வாகனத்தில் தப்பிக்க முயன்றனர்....

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் உள்ளிருப்பு போராட்டம்

By Ranjith
23 Jul 2025

தேனி, ஜூலை 24: தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு, நில தகராறில் தடுப்புச் சுவர்கள் மற்றும் புதிய கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டது. இது குறித்து இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் தேனி போலீசார் இரு தரப்பு மீதும்...

நீர்வரத்து சீரானதால் 4 நாட்களுக்கு பிறகு மேகமலை அருவியில் குளிக்க அனுமதி

By Ranjith
23 Jul 2025

வருசநாடு, ஜூலை 24: வருசநாடு அருகே, மேகமலை அருவியில் நீர்வரத்து சீரானதால் 4 நாட்களுக்கு பிறகு, குளிக்க நேற்று அனுமதி அளிக்கப்பட்டது. வருசநாடு அருகே, கோம்பைத்தொழு கிராமத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மேகமலை அருவி உள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளான இரவங்கலாறு, உடங்கல் ஆறு உள்ளிட்ட மேகமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்ததால்...