பெட்டிக்கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

போடி, நவ.28: போடியைச் சேர்ந்தவர் மனோகரன் (66). இவர் அண்ணா நகர் மேற்கு தெருவில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று முன் தினம் காலை கடையை திறப்பதற்காக சென்றார். அப்போது ஷட்டரில் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாவில் இருந்த பணம் ரூ.3,500 மற்றும்...

மூணாறில் தொடரும் புலியின் தாக்குதல்

By MuthuKumar
26 Nov 2025

மூணாறு, நவ.27: கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள வாகுவாரை எஸ்டேட் நாவல் டிவிஷனை சேர்ந்த கூலி தொழிலாளியான முத்துப்பாண்டி என்பவரின் கறவை பசு, நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை. இதனையடுத்து இரவு முழுவதும் பசு மாட்டை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலையில் வேலைக்கு சென்ற தொழிலாளிகள், இறைச்சல்பாறை...

சின்னமனூர் அருகே ஆக்கிரமிப்பு செடி, கொடிகள் அகற்றம்

By MuthuKumar
26 Nov 2025

சின்னமனூர், நவ.27: சின்னமனூர் அருகே சீலையம்பட்டி பிரிவில் இருந்து வேப்பம்பட்டி, அழகாபுரி வழியாக தேனிக்கும், வருசநாடு கண்டமனூர் பிரிவுக்கும் மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன. இதில் சீலையம்பட்டி பிரிவில் துவங்கி சமத்துவபுரம், வேப்பம் பட்டி, காமாட்சிபுரம், அழகாபுரி பிரிவு வரை இரு புறங்களிலும் சாலையை மறைக்கும் வகையில் செடி, கொடிகள் வளர்ந்தும், முட்புதர்களாகவும் காட்சியளித்தது. இந்த சாலையில்...

தேனி மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு முகாம்களில் 19,950 பேர் விண்ணப்பம்

By MuthuKumar
26 Nov 2025

தேனி, நவ.27: தேனி மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமில் 17 ஆயிரத்து 950 பேர் விண்ணப்பங்களை அளித்துள்ளனர். இணையம் வழியாக 8 ஆயிரத்து 788 படிவங்கள் பெறப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்கள் மற்றும் இணைய வழி என சேர்ந்து 26 ஆயிரத்து 738 படிவங்கள் பெறப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், 2025ம்...

மானாவாரியில் எள் பயிரிட்டு அதிக விளைச்சல் பெறலாம் வேளாண் அதிகாரிகள் ஆலோசனை

By MuthuKumar
25 Nov 2025

சின்னமனூர், நவ.26: மானாவாரியில் எள் பயிரிட்டு அதிக விளைச்சல் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். அவர்கள் தெரிவித்துள்ளதாவது: வறட்சியை தாங்கி வளரக்கூடிய குறுகியகால மானாவாரி பயிராக எள் விளங்குகிறது. எள் சாகுபடியில் சில நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் மகசூலை அதிகரிக்க முடியும். குறுகியகால ரகங்களான டிஎம்.வி.3,4,5,6, டி.எம்.வி.(எஸ்.வி.) 7,வி.ஆர்.ஐ. (எஸ்வி.) 1,...

சாலை விபத்தில் பைனான்ஸ் நிறுவன ஊழியர் படுகாயம்

By MuthuKumar
25 Nov 2025

சின்னமனூர், நவ.26: தேனி அல்லிநகரம் அம்பேத்கர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்தோஷம்(26). தேனியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை காமராஜ் பாண்டியன் உத்தமபாளையம் அருகில் உள்ள ராயப்பன்பட்டி மின் வாரியத்தில் பணி புரிந்து வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக சந்தோஷம் புல்லட்டில் சென்றார். மீண்டும் மாலை 6.30 மணி அளவில்...

அக்காள் கணவரை கொன்றவருக்கு ஆயுள்

By MuthuKumar
25 Nov 2025

தேனி, நவ.26: பெரியகுளம் அருகே அக்காள் கணவனை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபால்(48). இவரது மனைவி தங்கமலை(43). தேனி அருகே சங்ககோணாம்பட்டியில் தங்கமலைக்கு சொந்தமான வீட்டுமனை இடம் அருகே, தங்கமலையின் சகோதரர் ஜெயராம்(45) குடியிருந்து வந்தார். தங்கமலைக்கு சொந்தமான இடத்தை ஜெயராம் வாங்க நினைத்திருந்தார்....

கார்த்திகை சோமவார வழிபாடு

By Neethimaan
24 Nov 2025

தேவதானப்பட்டி, நவ.25: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி முனையடுவநாயனார் கோவிலில் நேற்று கார்த்திகை திங்கள்கிழமையை முன்னிட்டு கார்த்திகை சோமவார வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாரநந்தி, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் விநாயகர், முருகன், அதிகாரநந்தி, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, முனையடுவநாயனார், நடராஜர், சிவகாமிஅம்மாள், மாணிக்கவாசகர், சண்டிகேஸ்வரர், நால்வர், தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை உள்ளிட்ட பரிவாரமூர்த்திகளுக்கு...

கார் மோதி கண்டக்டர் பரிதாப சாவு

By Neethimaan
24 Nov 2025

சின்னமனூர், நவ.25: சின்னமனூர் அருகே குச்சனூர் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(48). இவர் கம்பம் அரசு போக்குவரத்து கழக டிப்போவில் கண்டக்டராக பணி செய்து வந்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் பணியை முடித்துக் கொண்டு ஊருக்கு போவதற்காக சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை பெட்ரோல் பல்க் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது...

பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்கள் மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: முதல் பரிசு ரூ.10 லட்சம்

By Neethimaan
24 Nov 2025

தேனி, நவ. 25: தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாகப் சுற்றுச் சுழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் தடையை அமல்படுத்துவதற்கும், வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும்...