ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது குறித்து தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
கம்பம், ஆக 1: கம்பம் நகராட்சி கூட்டரங்கில் தமிழக மற்றும் கேரள சிவில் சப்ளை அதிகாரிகள் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு போலீசார் இடையே கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேனி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் லதா, உத்தமபாளையம் வட்ட வழங்கல் அதிகாரி வினோதினி மற்றும்...
மூணாறு எஸ்டேட் பகுதியில் புலி தாக்கியதில் பசு படுகாயம்
மூணாறு, ஆக. 1: மூணாறில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலும் தமிழர்கள் ஆவர். தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் இவர்களுக்கு சொற்ப வருமானமே கிடைப்பதால் தங்களுடைய இதர செலவிற்காக கறவை பசுக்களை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் சமீப காலங்களாக எஸ்டேட் பகுதிகளில் புலியின் தாக்குதலில்...
கூடலூர் பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை
கூடலூர், ஆக. 1: கூடலூர் நகராட்சி பகுதிகளில் தெரு நாய்களால் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்டிபிஐ கட்சி கூடலூர் நகர் சார்பாக நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில்பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும், வயதான முதியவர்களும், அதிகாலை, இரவு வேலைக்குச் சென்று திரும்புவோரும் தெரு நாய்களால் மிகவும் அச்சமடைந்துள்ளனர். அவ்வப்போது குழந்தைகள்...
மயிலாடும்பாறை அருகே மூலவைகையில் தடுப்பு சுவர் கட்ட கோரிக்கை
வருசநாடு, ஜூலை 31: மயிலாடும்பாறை ஊராட்சியில் இந்திராநகர் குடியிருப்பு பகுதியில் மூல வைகை ஆறு செல்கிறது. இந்த மூல வைகை ஆற்றில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள தடுப்பு சுவர்கள் இடிந்து பலத்த சேதமடைந்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் சேதமடையும் அபாயம் உள்ளது. இதனால் இப்பகுதியில் புதிய...
கம்பத்தில் நண்பர்களுக்குள் மோதல்: 3 பேர் மீது வழக்கு
கம்பம் ஜூலை 31: கம்பம் சர்ச் தெருவை சேர்ந்தவர்கள் குணா(34), மார்க்ராஜா (34). தாத்தப்பன்குளத்தைச் சேர்ந்தவர் முகமது பாசில்(34). பெயிண்டிங் வேலை செய்து வரும் இவர்கள் 3 பேரும் நண்பர்கள். இவர்கள் சில நாட்களுக்கு முன்பு கம்பம் புதிய பஸ் நிலையம் அருகே பேசிகொண்டிருக்கும் போது குணாவிற்கும் மார்க்ராஜாவிற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் குணாவிற்கு...
டூவீலர் திருடிய 2 சிறுவர்கள் கைது
போடி, ஜூலை 31: போடி அருகே ரெங்கநாதபுரம் காந்தி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார் (31). இவர் ராணி மங்கம்மாள் சாலையில் டூவீலர் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது டூவீலரையும், அதே பகுதியைச் சேர்ந்த யோகேஷ் என்பவரின் டூவீலரையும் ஒர்க் ஷாப்பில் நிறுத்திவிட்டு இரவு...
கூடலூரில் கஞ்சா பறிமுதல்: பெண் கைது
கூடலூர், ஜூலை 30: கூடலூரில் விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ஒரு பெண்ணை கைது செய்தனர். மேலும், ஒருவரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம், கூடலூர் வடக்கு காவல்நிலைய சப்இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையிலான போலீசார் நகர் 3வது வார்டில் உள்ள பேச்சியம்மன் கோவில் தெருவில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியைச்...
பெண் மீது தாக்குதல் போலீசார் வழக்கு
தேவதானப்பட்டி, ஜூலை 30: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி ஜி.எச்.ரோட்டைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(30). இவரது மனைவி பாண்டியம்மாள்(24). இந்நிலையில் சம்பவத்தன்று, வீட்டில் இருந்த பாண்டியம்மாளை, முன்விரோதம் காரணமாக பகவதி நகரைச் சேர்ந்த முத்தையா என்பவரது மகன்கள் ஹரீஸ், சரவணன், ஆனந்த் மற்றும் சிலர், தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர், பெரியகுளம்...
சுருளி அருவி சாலையில் உள்ள குடிநீர் தொட்டி சுற்றுச்சுவர் சேதம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கூடலூர், ஜூலை 30: தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கருநாக்கமுத்தன்பட்டி அருகே, சுருளி அருவி சாலையில் அமைந்துள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடிநீர் தொட்டியை சுற்றி பாதுகாப்பு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த...