தேவகோட்டை அருகே புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

தேவகோட்டை, நவ.6: தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் மினிட்டாங்குடி பஞ்சாயத்தைச் சேர்ந்தது கிழவனி கிராமம். இங்கு 40 குடும்பங்கள் வசிக்கின்றனர். கிழவனியில் இருந்து திருவேகம்பத்தூர் மற்றும் ஆனந்தூர் பகுதிகளுக்கு செல்லும் முக்கியமான தார்r;சாலையாகும். கிழவனியில் இருந்து பள்ளி கல்லூரிகளுக்கும், மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு தேவகோட்டைக்கு கிராமமக்கள் வரவேண்டும். இதற்கான தார்r;சாலை போடப்பட்டு 13வருடங்கள்...

கிராம உதவியாளரை தாக்கியவர் கைது

By Karthik Yash
05 Nov 2025

சிவகங்கை, நவ.6: சிவகங்கை அருகே கிராம உதவியாளரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை அருகே காடனேரி குரூப் விஏஓவாக பிரியதர்ஷினி, இதே குரூப்பில் கிராம உதவியாளராக கவிதா பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இருவரும் காடனேரி கிராமத்தில் பாதை ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக டேனியல்ராஜ் என்பவருக்கு நோட்டீஸ் வழங்க சென்றனர். இவரது வீட்டின்...

தொண்டி பகுதிக்கு புதிய டிரான்ஸ்பார்மர்

By Karthik Yash
25 Oct 2025

தொண்டி, அக்.26: தொண்டி மற்றும் எம்.ஆர்.பட்டினம் பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மரை எம்எல்ஏ துவக்கி வைத்தார். தொண்டி தர்ஹா தெரு, எம்.ஆர்.பட்டினம் பகுதியில் குறைந்தழுத்த மின் வினியோகம் இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நேற்று திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருமாணிக்கம் புதிய டிரான்ஸ்பார்மர்களை துவக்கி வைத்தார். இதையடுத்து பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றனர். அங்கு கழிப்பறை...

பரமக்குடி நகராட்சி சார்பில் வார்டு அளவிலான சிறப்பு கூட்டங்கள்

By Karthik Yash
25 Oct 2025

பரமக்குடி, அக்.26: பரமக்குடி நகராட்சி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை சேவைகளை மேம்படுத்திட, அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் தலைமையில் வசிக்கும் பொதுமக்கள் குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையில் வார்டு அளவிலான சிறப்புக் கூட்டங்கள் வரும் 27ம் தேதி முதல் நடைபெறுகிறது. ஆகையால், பொதுமக்கள் தங்கள் வார்டு பகுதியில் உள்ள...

டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

By Karthik Yash
25 Oct 2025

ராமநாதபுரம், அக்.26: தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு அக் 28,29, 30 ஆகிய நாட்கள் விடுமுறை அளித்து கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது, கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழா, 63ம் ஆண்டு குருபூஜை...

விதை நேர்த்தி செய்து பயன்பெறலாம் விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தல்

By Suresh
25 Oct 2025

சிவகங்கை, அக்.25: விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது: பயிர்களை, விதை மூலம் பரவக்கூடிய பூஞ்சான நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு விதையுடன் பூஞ்சான மருந்து கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதை மூலம் பரவும் இலைப்புள்ளி, இலைக்கருகல், இலை உறை அழுகல் மற்றும் குலை...

ஆர்.எஸ் மங்கலம் சுற்றுவட்டாரத்தில் விவசாய பணிகள் தீவிரம்

By Suresh
25 Oct 2025

ஆர்.எஸ்.மங்கலம். அக்.25: ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டார பகுதியில் களைக் கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் ஆனந்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வயல்களில் நெற்பயிர்களுடன், முளைத்து வரும் களைகளால் சாகுபடி பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் வயல்களில் உள்ள களைகளை கட்டுப்படுத்தும் விதமாக ஆர்.எஸ்.மங்கல சுற்று...

நவ.4, 5ல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

By Suresh
25 Oct 2025

சிவகங்கை, அக்.25: மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் நடைறெ உள்ளன.இது குறித்து கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி...

அம்பேத்கர் விருது பெற விண்ணப்பம்

By Karthik Yash
16 Oct 2025

சிவகங்கை, அக். 17: டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 2025-2026ம் நிதியாண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் மற்றும் பட்டியல் இனமக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்யும் ஆதிதிராவிடர் இனத்தைச்சார்ந்த தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோர்க்கு வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க...

தீபாவளி பண்டிகை பாதுகாப்பு விழிப்புணர்வு

By Karthik Yash
16 Oct 2025

திருப்புத்தூர், அக். 17: திருப்புத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளி மாணவர்களுக்கான தீபாவளி பண்டிகை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.திருப்புத்தூர் தீயணைப்புத்துறையும், ஆறுமுகநகர் அரிமா சங்கமும் இணைந்து நடத்திய இப்பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாரதிதாசன் தலைமை வகித்தார். அரிமா சங்கத் தலைவர் பிளாசா ராஜேஸ்வரி சேகர் முன்னிலை வகித்தார். தீயணைப்பு...