முன்னாள் படைவீரர்களுக்கு திறன் பயிற்சி

சிவகங்கை, நவ. 15: மறுவேலைவாய்ப்பு பெறாமல் உள்ள 50 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் திறன் பயிற்சிகள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டைச் சார்ந்த மறுவேலைவாய்ப்பு பெறாத 10,000 முன்னாள் படைவீரர்களுக்கு அவர்களது வாழ்வாராதத்தினை ஊக்குவித்திடும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு விதமான பயிற்சிகள் வழங்கப்படும்...

அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா

By Ranjith
14 Nov 2025

சிவகங்கை, நவ. 15: சிவகங்கை மாவட்டத்தில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருக்கோஷ்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கூட்டுறவு கொடியை ஏற்றி வைத்து, கூட்டுறவு கீதம் இசைக்கப்பட்டு உறுதிமொழி வாசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் பொற்கொடி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திர...

குழந்தைகள் தின விழா

By Ranjith
14 Nov 2025

சிவகங்கை, நவ. 15: சிவகங்கை நகராட்சி நடுநிலைப் பள்ளியில், குழந்தைகள் தின விழா கொண்டாடினர்.தலைமை ஆசிரியை மரிய செல்வி வரவேற்புரையாற்றினார். நகராட்சி தலைவர் துரை ஆனந்த் தலைமை வகித்து தங்கள் வீடுகளில் மரக்கன்றுகள் வளர்த்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினர். பின்னர் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், வீரதீர செயல்கள் புரிந்தவர்களை பற்றிய, கவிதை...

கடலாடியில் நாளை மின்நிறுத்தம்

By Karthik Yash
10 Nov 2025

சாயல்குடி,நவ.11: கடலாடி, சாயல்குடி பகுதியில் நாளை மின்தடை என முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘கடலாடி துணை மின்நிலைய மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால் நாளை சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜபுரம், மலட்டாறு, ஒப்பிலான், மாரியூர், எஸ்.தரைக்குடி, பெருநாழி, கடலாடி, மேலச்சிறுபோது, மீனங்குடி,...

திருவாடானை அருகே நிழற்குடை கட்ட பூமிபூஜை

By Karthik Yash
10 Nov 2025

திருவாடானை, நவ.11: திருவாடானை அருகே பாரதிநகர் பகுதியில் 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாரதிநகர் பேருந்து நிறுத்தத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. இந்த நிழற்குடை சேதமடைந்து இருந்ததால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதனை இடித்து அகற்றி அப்புறப்படுத்தி விட்டனர். பொதுமக்களின் நீண்ட...

தேய்பிறை பஞ்சமி வராஹி அம்மன் கோயிலில் சிறப்பு வேள்வி

By Karthik Yash
10 Nov 2025

திருவாடானை,நவ.11: திருவாடானை அருகேயுள்ள விஸ்வநாதனேந்தல் கிராமத்தில் உள்ள சக்தி வராஹி அம்மன் திருக்கோயிலில், தேய்பிறை பஞ்சமி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இந்த வழிபாடுகளின் ஒரு பகுதியாக, வேத பாராயணங்கள் முழங்க, தெய்வீகமான வேள்வி பூஜைகள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டன. மேலும், அம்மனுக்குப் பல்வேறு வகையான புனிதப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இந்த...

மானாமதுரை அருகே ரயிலில் அடிபட்டு 5 ஆடுகள் பலி

By Karthik Yash
06 Nov 2025

மானாமதுரை, நவ.8: மானாமதுரை அருகே திருச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு ஐந்து ஆடுகள் பலியாகின. இதுபற்றி ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மானாமதுரை பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே வளர்ந்துள்ள புற்களை ஆடு,மாடு என கால்நடைகள் மேய்வது வழக்கம். சில நேரங்களில் ரயில் மோதி கால்நடைகள் உயிரிழந்தும் உள்ளது. இந்நிலையில் நேற்று ராமேஸ்வரத்தில்...

சிவகங்கை சிஇஓ பொறுப்பேற்பு

By Karthik Yash
06 Nov 2025

சிவகங்கை, நவ.7: சிவகங்கை மாவட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(சிஇஓ) நேற்று பொறுப்பேற்று கொண்டார். சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய பாலுமுத்து, கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர்(டிஇஓ) மாரிமுத்து கூடுதல் பொறுப்பாக முதன்மை கல்வி அலுவலர் பணியையும் கவனித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில...

திருப்புவனத்தில் நாய் கடித்து 3 பேர் காயம்

By Karthik Yash
06 Nov 2025

திருப்புவனம்,நவ.7: திருப்புவனம் நெல்முடி கரையில் நேற்று ஒரே நாளில் 3 பேரை நாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் நெல்முடி கரையை சேர்ந்த சுந்தராம்பாள்(82) வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நாய் மூதாட்டியை தலையில் கடித்து குதறியதில் பலத்த காயம் அடைந்தார். திருப்புவனம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மதுரை...

மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

By Karthik Yash
05 Nov 2025

சிவகங்கை,நவ.6: புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படவுள்ளது. அதில், புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டம் பொதுப்பிரிவின் கீழ் 1எக்டேருக்கு 40சதவீத மானியத்தில், ஒரு அலகிற்கான...