கழிப்பறை கட்டுவதை நிறுத்தக் கோரி வழக்கு: வட்டாட்சியர் ஆய்வு செய்ய உத்தரவு
மதுரை, ஜூலை 29: பள்ளி சமையல் கூடம் அருகே கழிப்பறை கட்டுவதாக தொடரப்பட்ட வழக்கில் வட்டாட்சியர் ஆய்வு செய்து அறிக்கையளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தொண்டியைச் சேர்ந்த சுலைமான், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தொண்டி பேரூராட்சி அலுவலகம் கடற்கரை சாலையில் உள்ளது. பேரூராட்சிக்கு செல்லக்கூடிய பொதுப் பாதை ஏற்கனவே பலரால்...
போக்குவரத்துக்கு இடையூறான சாலையோர ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் வலியுறுத்தல்
திருவாடானை, ஜூலை 29: திருவாடானை வடக்குத்தெரு வழியாக தொண்டி- மதுரை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளதால், வாகன ஓட்டிகள் தங்களது டூவீலர்கள் மற்றும் கார்களை போக்குவரத்து விதியை மீறி சாலையின் அருகிலேயே நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்வதால் போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியில் செயல்படும் தேசிய வங்கிக்கு...
ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய மாநாடு
திருப்புவனம், ஜூலை 29: திருப்புவனம் அருகே புதூரில் ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய மாநாடு ஒன்றிய தலைவர் முத்துராஜா தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் சுரேஷ் மாநாட்டை துவக்கி வைத்தார். மாநாட்டில் அய்யம்பாண்டி, ஈஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர். மாநில குழு உறுப்பினர் அருணன் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ஒன்றிய தலைவராக நிருபன்பாசு, ஒன்றிய செயலாளராக முத்துராஜா,...
மழை காலம் துவங்கும் முன்பு புதிய சாலை அமைக்க வேண்டும்: கிராமமக்கள் கோரிக்கை
சாயல்குடி, ஜூலை 28: கடலாடி அருகே மேலச்சிறுபோது கிராமத்தில் சாலை சேதமடைந்து கிடப்பதால், புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி ஊராட்சி ஒன்றியம், மேலச்சிறுபோது மற்றும் எஸ்.குளம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, கீழச்சிறுபோது, கோகொண்டான், சடையனோரி, பனையடினேந்தல், பி.கீரந்தை, பன்னந்தை,...
வேலைவாய்ப்பு முகாமில் 412 பேருக்கு பணி ஆணை வழங்கல்
சிவகங்கை, ஜூலை 28: சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பணி...
காசநோய் உள்ளவர்கள் பரிசோதனை செய்வது அவசியம்
சிவகங்கை, ஜூலை 28: சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. காசநோய்த் தொற்று உள்ளவர்கள் வெளியில் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் இருக்கக்கூடாது. தற்போதுள்ள நவீன காலக்கட்டத்தில் அனைத்து விதமான நோய்களுக்கும் தரமான சிகிச்சை அளிக்க போதிய மருத்துவ...
முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக எண்ணற்ற திட்டத்தை செயல்படுத்துகிறார்: மேயர் முத்துத்துரை பேச்சு
காரைக்குடி, ஜூலை 25: காரைக்குடியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளிடம் கோரிக்கை மனு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தாசில்தார் ராஜா தலைமை வகித்தார். முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மாநகராட்சி மேயர் எஸ்.முத்துத்துரை பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய, நடுத்தர, சாதாரண மக்களின் வாழ்க்கை...
மானாமதுரை கோயிலில் ஆடித்தபசு திருவிழா துவக்கம்
மானாமதுரை, ஜூலை 25: மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு விழா வரும் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் திருவிழா வரும் 28ம் தேதி காலை 9.35 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சித்திரை திருவிழாவை போல ஆடித்திருவிழாவும் பத்து நாட்கள் நடைபெறும். விழா நாட்களின் போது சுவாமி பல்வேறு வாகனங்களில்...
காரைக்குடி மாநகராட்சி பகுதியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
சிவகங்கை, ஜூலை 25: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நடைபெற உள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் வரை ஒவ்வொரு வாரமும், நான்கு நாட்களில் நாள் ஒன்றுக்கு...