முதுகுளத்தூர் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1,200 கோடியில் திட்டப் பணிகள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பெருமிதம்
ராமநாதபுரம், ஆக.9: முதுகுளத்தூர் தொகுதியில் மட்டும் ரூ.1,200 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகள் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தொகுதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வனம் மற்றும் கதர் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை வகித்தார். இதில்...
கமுதியில் தடகள போட்டி
கமுதி, ஆக.8: கமுதியில் குறு வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகளை ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நடத்தி வருகிறது. இந்த போட்டிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமையேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார். போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆரோக்கியராஜ் தொடங்கி வைத்தார். 14, 17, 19 வயது பிரிவுகளில் மாணவர்களுக்கான...
கடற்கரையில் பூங்கா அமைக்க கோரிக்கை
தொண்டி, ஆக.8: தொண்டி கடற்கரை பகுதி மாவட்டத்தில் நீளமான கடற்கரையை கொண்டதாகும். வரலாற்று சிறப்புமிக்க இவ்வூருக்கு தினமும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் கடற்கரை பகுதியில் எவ்வித வசதியும் இல்லாததால் முகம் சுழித்து செல்கின்றனர். மேலும் உள்ளூர் பொதுமக்களும் மாலை நேரங்களில் பொழுது போக்கிற்கு செல்கின்றனர். அமர்வதற்கு இருக்கை கூட கிடையாது. பொதுமக்களின் நலன்...
அம்மன் கோயில் விழாவில் பொங்கல் வைத்து வழிபாடு
ராமநாதபுரம், ஆக.8: ராமநாதபுரம் அருகே வழுதூர், வாலாந்தரவை, ஏந்தல், பட்டணம்காத்தான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊர்களில் உள்ள அம்மன்கோயில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி திருவிழா நடந்தது. ராமநாதபுரம் அருகே வழுதூர் மாரியம்மன் கோயில் மற்றும் பட்டிணம்காத்தான் கருமாரியம்மன் கோயில் முளைக்கொட்டு திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி காப்புக் கட்டுதல், முத்து பரப்புதலுடன் துவங்கியது. நாள்...
தொண்டியில் ஆடித் திருவிழா
தொண்டி, ஆக.7: தொண்டி தெற்கு தோப்பு மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா கடந்த 5ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் பால்குடம், வேல் காவடி உட்பட பல்வேறு காவடி எடுத்தனர். நேற்று மாலை 500க்கும் மேற்பட்ட பெண்கள் கோயில் இருந்து முளைப்பாரி எடுத்து கிழக்கு கடற்கரை சாலை, பாவோடி மைதானம் வழியாக ஊர்வலமாக...
பரமக்குடி அருகே நடமாடும் மண் பரிசோதனை முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
பரமக்குடி,ஆக.7: பரமக்குடி சுற்றியுள்ள கிராமங்களில், அதிகமான விவசாய நிலங்களில் சாகுபடி நடைபெற்று வருகிறது. மண் பரிசோதனை செய்யாமல் விவசாயிகள் விவசாய சாகுபடியில் ஈடுபடுவதால், விவசாயத்தில் அதிகமான இழப்புகளை சந்தித்து வருகின்றனர். ஆகையால் பரமக்குடியில் உள்ள மண் பரிசோதனை நிலையத்தில் தங்களின் விளைநிலங்களில் உள்ள மண் எடுத்து அதை பரிசோதனை செய்து அதற்கு ஏற்றார் போல விவசாய...
போலி வாகன புகை பரிசோதனை சான்றிதழ் ராமநாதபுரம் எஸ்பி.யிடம் புகார்
ராமநாதபுரம், ஆக.7: வாகன புகை பரிசோதனை மைய உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், பொதுச்செயலாளர் ராஜசேகரன் தலைமையில் எஸ்.பி சந்தீஷிடம் மனு அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பது, சாயல்குடியில் சின்ன, சின்ன கடைகளில் போலியான கணினி மென்பொருள் மூலம் வாகனங்களை பரிசோதனை செய்யாமல் புகைப்படம் மட்டும் எடுத்து வைத்துக் கொள்கின்றனர்.பின்னர், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள...
குவாரி விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு
சிவகங்கை, ஆக.5: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். இதில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு...
அம்மன் கோயில் திருவிழா தீச்சட்டி எடுத்து வந்த பக்தர்கள்
பரமக்குடி,ஆக.5: ஆடி மாதா திருவிழாவையொட்டி மேலப்பெருங்கரை சதுரங்க நாயகி அம்மன் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சதுரங்க நாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சதுரங்க நாயகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும் அபிஷேகங்களும், ஆராதனைகளும்...