மீனவர் விழிப்புணர்வு கூட்டம்
தொண்டி, அக். 17: தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் மீன்வளத் துறையினர் சார்பாக அவசர கால பொறுப்பு சார்ந்த பயிற்சி மற்றும் முன்கள பணியாளர்கள் பயிற்சிக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மீன்வளத்துறை துணை இயக்குனர் கோபிநாத் தலைமை வகித்தார்.மீன்வள உதவி இயக்குனர் ராஜேந்திரன், மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாஹீர் முன்னிலை வகித்தனர். கடலில் ஆபத்தின்போது நடந்து கொள்ளும்...
பக்தர்கள் தவற விட்ட பணம் ஒப்படைப்பு
ராமேஸ்வரம்,அக்.14: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பக்தர் ஒருவர், கோயில் உள்ளே 22 தீர்த்தங்களில் நீராடும் போது தான் கொண்டு வந்த 20 ஆயிரம் பணத்தை தவற விட்டார். அங்கு பணியில் இருந்த அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் பக்தர் தவறவிட்ட...
விதைத்தது முளைக்குமா? மழையை எதிர்பார்த்து விவசாயிகள்
தொண்டி, அக்.14: தொண்டி, நம்புதாளை மற்றும் சுற்று வட்டார பகுதியில் நெல் விதைத்து விட்டு மழையை எதிர்பார்த்து விவசாயிகள் கவலையுடன் காத்திருக்கின்றனர். வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்கழஞ்சியமான திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட தொண்டி, நம்புதாளை, முகிழ்த்தகம், திருவெற்றியூர் உள்ளிட்ட பகுதியில் கடந்த 20 நாளுக்கு முன்பு நெல் விதைக்கப்பட்டது. தொடர்ந்து மழை...
கடலாடியில் நாளை மின்தடை
சாயல்குடி, அக்.14: கடலாடி, சாயல்குடி பகுதியில் நாளை மின் தடை என முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலாடி துணை மின்நிலைய மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால் நாளை சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜபுரம், மலட்டாறு, ஒப்பிலான், மாரியூர், எஸ்.தரைக்குடி, பெருநாழி, கடலாடி,...
புரட்டாசி பூக்குழி விழா
தொண்டி, அக்.13: தொண்டி அருகே உள்ள முகிழ்த்தகம் கிராமத்தில் பெருமாள் கோயிலில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கினர். முகிழ்த்தகம் கிராமத்தில் உள்ள நீலாவதி, பூ மாதேவி சமேத சொர்ணவர்ஷம் பெய்த பெருமாள் கோயிலில் 50ம் ஆண்டு புரட்டாசி திருவிழா நடைபெற்றது. விநாயகர் கோயிலிருந்து பால்காவடி, வேல் காவடி எடுத்த பக்தர்கள் கோயிலின் முன்பு...
தொல்லை கொடுத்த தெரு நாய்கள், பன்றிகள் அகற்றம்
மண்டபம், அக்.13: மண்டபம் பேரூராட்சியில் கால்நடைகளை கடித்தும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்த தெரு நாய்களையும், பன்றிகளையும் பிடிக்கும் பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. மண்டபம் பேரூராட்சி 18 வார்டுகளிலும் தெரு நாய்கள், பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆடு மற்றும் கோழிகளை கடித்து கொன்று விடுவதால் பொதுமக்கள் பெரும்...
மணல் திருட்டு வாகனங்கள் மீது வழக்கு
தொண்டி, அக்.13: தொண்டி பகுதியில் அதிகளவில் மணல் திருட்டு நடப்பதாக தொடர் புகாரின் அடிப்படையில் ரோந்து சென்ற போலீசார் 3 வாகனங்களின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொண்டி அருகே உள்ள விருசுழி ஆற்றில் இரவு நேரத்தில் அதிகளவில் மணல் திருட்டு நடைபெறுவதாக தொண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தொண்டி போலீசார்...
புதிய தொழிற்கூடங்கள் மூலம் 7,500 பேருக்கு வேலை வாய்ப்பு: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
ராமநாதபுரம், அக்.12: முதுகுளத்தூரில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு வனம் மற்றும் கதர் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை வகித்தார். பரமக்குடி ஆர்.டி.ஓ சரவணபெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன் வரவேற்றார். முகாமினை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்து பேசும்போது, ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான...
சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை கலெக்டர் உறுதி
மண்டபம்,அக்.12: மண்டபம் ஊராட்சி ஒன்றியம் சாத்தக்கோன்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரமுடையான் கிராமத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. எம்எல்ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஊராட்களின் உதவி இயக்குனர் பத்மநாபன் வரவேற்றார். ஊராட்சி செயலர் விஸ்வநாதன் கூட்டப்பொருள் வாசித்தார். தொடர்ந்து கூட்டத்தில்...