மானாமதுரையில் ரயிலில் கடத்திய குட்கா பறிமுதல்

  மானாமதுரை, அக். 29: பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ராமேஸ்வரம் வாராந்திர ரயிலில் கடத்தி வரப்பட்ட 14 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை மானாமதுரை ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். பஞ்சாப் மாநிலம், பெரோஸ்பூர் ரயில்நிலையத்தில் இருந்து கடந்த 25ம் தேதி மாலை 5.55 மணிக்கு ராமேஸ்வரத்திற்கு (வண்டி எண்-20498) வாராந்திர ரயில் புறப்பட்டு...

ராமநாதபுரம் மாவட்டத்தில் முருகன் கோயில்களில் திருக்கல்யாணம்

By Arun Kumar
28 Oct 2025

  ராமநாதபுரம், அக்.29: ராமநாதபுரம் அருகே பெருவயல் ரெணபலி முருகன், குண்டுகரை முருகன் கோயில்களில் சஷ்டி விழாவை முன்னிட்டு அரோகர கோஷத்துடன் சூரசம்ஹாரமும், நேற்று திருக்கல்யாணம் நடந்தது. கந்தசஷ்டி விழா கடந்த அக்.22ம் தேதி துவங்கியது, 27ம் தேதி சூரசம்ஹாரம், நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இதற்காக மாவட்டத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற முருகன் கோயில்களில் அக்.22ம் தேதி...

முதுகுளத்தூரில் தேவர் குருபூஜை விழா 2008 பால்குடம் ஊர்வலம்

By Arun Kumar
28 Oct 2025

  சாயல்குடி, அக்.29: முதுகுளத்தூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு நேற்று இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாகச் சென்று தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர். கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் அக்.28ம் தேதி ஆன்மீக விழாவும் , 29ம் தேதி அரசியல்...

தொண்டி பேரூராட்சியில் வார்டு சிறப்பு கூட்டம்

By Arun Kumar
27 Oct 2025

  தொண்டி,அக்.28: தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்று முதல் 5 வார்டுகளுக்கான சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வார்டு வாரியாக சிறப்பு கூட்டம் நடத்தி பொதுமக்களின் குறைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது.இதையடுத்து நேற்று தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்று முதல் ஐந்து வார்டுகளுக்கு பிவிபட்டினம் சமுதாய...

கந்தசஷ்டியை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் சூரசம்ஹாரம்

By Arun Kumar
27 Oct 2025

  ராமேஸ்வரம், அக்.28: கந்தசஷ்டியை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் நேற்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நேற்று கந்தசஷ்டியை முன்னிட்டு முருகன் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை முருகன், வள்ளி தெய்வானையுடன் சர்வ அலங்காரத்தில் கோயில் மேற்குரத வீதியில் எழுந்தருளிய பக்தர்களுக்கு அருள்...

தொண்டி பகுதியில் இன்று மின்தடை

By Arun Kumar
27 Oct 2025

தொண்டி, அக்.28: தொண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டிய காரணத்தினால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதியில் மின்சாரம் இருக்காது. மின்தடை பகுதி:தொண்டி நகர் பகுதிகள், நம்புதாளை, சோழியக்குடி, புதுப்பட்டினம், வட்டாணம், மணக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, தீர்த்தாண்டதானம், அரும்பூர், ஆதியூர், தளிர்...

ராமநாதபுரம் நகராட்சியில் அக்.27ல் சிறப்பு கூட்டம்

By Karthik Yash
25 Oct 2025

ராமநாதபுரம், அக்.26: ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ராமநாதபுரம் நகராட்சி சார்பில் நகர்புற உள்ளாட்சி பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை சேவைகளை மேம்படுத்திட அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடக்கிறது. நகராட்சி அலுவலர் ஒருவரை கூட்டுநராக கொண்டு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையிலான சிறப்புக்...

விவேகானந்தா கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

By Karthik Yash
25 Oct 2025

காரைக்குடி, அக்.26: காரைக்குடி அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் நிகில் பவுண்டேசன் சார்பில் வாழ்க்கை திறன் பயிற்சி முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் சசிகுமார் வரவேற்றார். கல்விகுழும தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்து பேசுகையில், விவேகானந்தா கல்வி குழுமத்தின் சார்பில் மாணவர்களின் திறன்களை வளர்க்கவும், அவர்கள் படித்து முடித்து நேர்காணலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு...

காளையார்கோவிலில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை

By Karthik Yash
25 Oct 2025

காளையார்கோவில், அக்.26: காளையார்கோவிலில் சுதந்திரப் போராட்ட தியாகி மருது பாண்டியர்கள் குருபூஜை நாளை நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், சிவகங்கை மாவட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் சமாதியை சுற்றிலும் சோதனைகள் செய்யப்பட்டது. ...

அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஒரு வருட தொழிற்பயிற்சி விண்ணப்பிக்க நாளை கடைசி

By Karthik Yash
16 Oct 2025

சிவகங்கை, அக். 17: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நடத்தப்படும் ஒரு வருட தொழிற்பயிற்சி பெற நாளைக்குள்(அக்.18) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்ப) லிட், கும்பகோணம் மற்றும் தொழில் பழகுனர் பயிற்சி வாரியம்(தென் மண்டலம்) இணைந்து நடத்தவுள்ள ஒரு வருட தொழிற் பயிற்சி பெற...