சேமிப்பு கிடங்கு அமைக்க கட்டிட பணிகள் துவக்கம்

பரமக்குடி,செப்.15:பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கமுதக்குடியில் உள்ள தமிழ்நாடு உணவு பொருள் வாணிப கழகத்தில், கூடுதல் சேமிப்பு கிடங்கு, சாலை மற்றும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணிகளை காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். பரமக்குடி சட்டமன்ற தொகுதி கமுதக்குடி ஊராட்சியில் தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிபக் கழகத்தின் கூடுதல் கிடங்கு வளாகத்தில், 750 மெட்ரிக் டன்...

மண்டபம் பகுதியில் அரசு பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை

By Ranjith
14 Sep 2025

மண்டபம்,செப்.15: மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் பகுதியில் இயங்கி வரும் அரசு தொடக்கப் பள்ளியில், வகுப்பறை கான்கிரீட் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து வருவதை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான காந்தி நகர் பகுதியில் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்....

திருவாடானையில் நாளை மின் நிறுத்தம்

By Ranjith
14 Sep 2025

திருவாடானை, செப்.15: திருவாடானை மற்றும் நகரிகாத்தான் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிக்கு மின்சாரம் இருக்காது. மின்தடை பகுதிகள்: திருவாடானை, சி.கே.மங்கலம், பாண்டுகுடி, நகரிகாத்தான், வெள்ளையபுரம், மங்கலக்குடி, அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனூர்,...

30 அரசு பள்ளிகளில் டிஜிட்டல் திட்டம்: கலெக்டர் துவக்கி வைத்தார்

By MuthuKumar
13 Sep 2025

ராமநாதபுரம், செப்.14: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கல்வி 40 டிஜிட்டல் திட்டம் துவக்க விழாவிற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தார். உதவித் திட்ட அலுவலர் கணேச பாண்டியன் வரவேற்றார். நிகழ்ச்சியில் திட்டத்தை தொடங்கி வைத்த கலெக்டர், பள்ளிகளுக்கு ஸ்மார்ட் டிவிகளை...

பீடி இலை, இஞ்சி பறிமுதல்

By MuthuKumar
13 Sep 2025

ராமேஸ்வரம், செப்.14: இலங்கைக்கு கடத்துவதற்காக தனுஷ்கோடி அருகே மணல் தீடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பீடி இலைகள், இஞ்சிகளை இந்திய கடலோரக் காவல்படையினர் பறிமுதல் செய்தனர். தனுஷ்கோடி அருகே மணல் தீடை பகுதிகளிலில் இலங்கைக்கு கடத்துவதற்காக பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலோரக் காவல்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனுஷ்கோடி மற்றும் மணல் தீடை பகுதிகளில் கடலோர காவல்படையினர்...

மக்கள் நீதிமன்றத்தில் 706 வழக்குகளுக்கு தீர்வு

By MuthuKumar
13 Sep 2025

ராமநாதபுரம், செப்.14: ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மெஹ்பூப் அலிகான் தலைமை வகித்தார். வழக்கில் தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு உத்தரவுகளை வழங்கினார். ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக மாவட்ட நீதிமன்ற வளாகம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, திருவாடானை, ராமேஸ்வரம் ஆகிய...

தொண்டி செக்போஸ்ட் பகுதியில் பேனர் வைக்க தடை

By Karthik Yash
12 Sep 2025

தொண்டி, செப்.13: கிழக்கு கடற்கரை சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் மும்முனை சந்திப்பாக தொண்டி செக்போஸ்ட் பகுதி உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி அதிக அளவில் பேனர் வைக்கப்பட்டு வந்தது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதநிலை ஏற்பட்டது. இதனால் ராமேஸ்வரத்திலிருந்து செல்லும் வாகனங்கள், மதுரையிருந்து வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கின. இதனால் இப்பகுதியில்...

பரமக்குடியில் குளத்தில் மூழ்கி விவசாயி பலி

By Karthik Yash
12 Sep 2025

பரமக்குடி, செப்.13: பரமக்குடி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன் (42). விவசாயி. நேற்று மதியம் எமனேஸ்வரம் அருகே உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் குளிக்க சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குளத்திற்கு சென்று பார்த்தனர். அவருடைய உடைகள் கரையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் குளத்திற்குள்...

கோயிலில் பஞ்சமி பூஜை

By Karthik Yash
12 Sep 2025

ராமநாதபுரம், செப்.13: பஞ்சமியை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை சுயம்பு மகா வராஹி அம்மன் கோயிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆவணி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கையில் உள்ள சுயம்பு மஹா வராஹி அம்மனுக்கு மஞ்சள், பால், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல வகை அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு மஞ்சள், கிழங்குகள்,...

பரமக்குடி சிறப்பு முகாமில் மனுக்களை பெற்ற எம்எல்ஏ

By MuthuKumar
02 Sep 2025

பரமக்குடி, செப்.3: தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்கள் பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மகளிர் உரிமைத் தொகை திட்டம், மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய, ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்ய போன்ற பல கோரிக்கைகளுக்கு அலுவலர்கள் நேரடியாக இருப்பிடங்களுக்கு அருகிலேயே வந்து செய்து முடிக்கின்றனர். இத்திட்டத்தின் கீழ்...