சாலையை சீரமைக்க கோரி தண்ணீரில் நீச்சலடித்து போராட்டம்
கமுதி, டிச.2: கமுதி அருகே டி.குமாரபுரத்தில் கரடு முரடான சாலையில் மழை தண்ணீர் தேங்கியதால், சாலையில் கிடக்கும் தண்ணீரில் நீச்சல் அடித்து போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். கமுதி தாலுகா பெருநாழி அருகே உள்ளது டி.குமாரபுரம் கிராமம். இந்த கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் அன்றாட தேவைக்கு...
பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் எஸ்.ஐ.ஆர். பணிகள் 85% நிறைவு
பரமக்குடி, டிச. 1: பரமக்குடி 209 (தனி) சட்டமன்ற தொகுதியில் சதவீத சராசரியாக 82 சதவீதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. பரமக்குடி நகராட்சியில் 72 சதவீதம் முடிந்த நிலையில் மீதமுள்ளவர்கள் விரைந்து வழங்க கேட்டுக் கொண்டுள்ளனர் என பரமக்குடி கோட்டாட்சியர் சரவண பெருமாள் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் இடம்...
மண்டபம் கடற்கரை பூங்காவில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
மண்டபம், டிச.1: மண்டபம் கடற்கரை பூங்காவில் 15 நாட்களுக்குப் பின்பு சுற்றுலா பயணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மூன்று பக்கமும் கடலால் சூழ்ந்த ஒரு பகுதியாகும். இதனால் நவம்பர் 15ம் தேதி முதல் வங்கக்கடலில் ஏற்பட்ட சுழற்சி காற்றானது மண்டபம் கடலோரப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த 15 நாட்களில் ஒரு...
மின்கம்பத்தை சரி செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
ராமேஸ்வரம், டிச. 1: டிட்வா புயலால் மின்கம்பம் சாய்ந்து விழுந்து மூன்று நாட்கள் ஆகியும் சரி செய்யததால் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருள் மூழ்கியதால் ஆத்திரம் நடந்த பொதுமக்கள் தனுஷ்கோடி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட ராஜகோபால் நகர், நேதாஜி, நேதாஜி நகர், பள்ளிவாசல் தெரு...
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை
ராமநாதபுரம்,நவ.28: ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இரண்டு நாட்களாக இடைவிடாமல் சிறு தூரல் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்கக் கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவெடுத்துள்ளது. அது தமிழ்நாட்டை நோக்கி நகர்வதால், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை...
பகுதிநேர ரேஷன் கடை திறக்க வலியுறுத்தல்
திருவாடானை, நவ.28: திருவாடானை அருகே கூகுடி பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடை மூலம் கூகுடி, அறிவித்தி, அந்திவயல், அறநூற்றிவயல் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 450க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களது நுகர்பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் அறிவித்தி, அந்திவயல் மற்றும்...
மரைக்காயர்பட்டிணம் ஊராட்சியை மண்டபம் பேரூராட்சியுடன் இணைக்க மக்கள் எதிர்ப்பு
மண்டபம்,நவ.28: மண்டபம் ஒன்றியம் மரைக்காயர் பட்டிணம் ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பைரோஸ் ஆசியம்மாள் தலைமை வகித்தார். இதை தொடர்ந்து ஊராட்சியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் நடைபெற்று முடிந்த திட்டப்பணிகள் குறித்து விவாதம் செய்யப்பட்டு திட்ட அறிக்கைகளை ஊராட்சி செயலர் நாகேந்திரன் பொதுமக்கள்...
மாவட்டம் முழுவதும் பனிபொழிவுடன் சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ராமநாதபுரம்/ மண்டபம், நவ.27: ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று பகல் முழுதும் இடைவிடாமல் சிறு தூரல் மழை பெய்தது. பனிபொழிவும் இருந்ததால் குளிரால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்டோபர் மாதக் கடைசி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வந்தது. கடந்த 20...
மழையால் பாதிப்பு; பயிர்களுக்கு நிவாரணம் வழங்க மனு
திருவாடானை,நவ.27: திருவாடானை தாலுகாவில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது. திருவாடானை பகுதிகளில் மழையால் நீரில் மூழ்கி அழிந்து போன நெல் விவசாயத்திற்கு நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் முத்துராமன் தலைமையில், திருவாடானை தாசில்தார் அமர்நாத்திடம்...