இலுப்பூர் சுற்றுவட்டார பகுதியில் இன்று மின் நிறுத்தம்

இலுப்பூர்,நவ.11: இலுப்பூர் மற்றும் இலுப்பூர் அருகே உள்ள பாக்குடி துணை மின் மாதாந்திர பராமரிப்பு மேற்கொள்ள உள்ளதால் இத்துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் இன்று 11 தேதி மின் விநியோகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. இது...

சுவாமி நகர் பகுதியில் சாலை சீரமைக்க கோரிக்கை

By Suresh
11 Nov 2025

அறந்தாங்கி, நவ.11: அறந்தாங்கி சுவாமி நகர்பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி செய்து கொடுக்காததை கண்டித்து பொதுமக்கள் பிரச்சாரம் நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரெத்தினகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சுவாமி நகர் பகுதி சாலை கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்லவும் பொதுமக்கள் நடந்து செல்லவும் முடியா நிலேயில் உள்ளது. பல ஆண்டுகளாக சாலை வசதி...

விராலிமலை அருகே மயங்கி விழுந்து கூலி தொழிலாளி பலி

By Ranjith
06 Nov 2025

விராலிமலை, நவ.7: விராலிமலை அருகே மயங்கி விழுந்த கூலி தொழிலாளி பலியானார். விராலிமலையில் வீட்டில் மயங்கி விழுந்ததில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விராலிமலை கார்கில் நகரை சேர்ந்தவர் சின்னப்பன் மகன் ரமேஷ் (36) கூலி தொழிலாளியான இவர் கடந்த 4ம் தேதி நள்ளிரவு வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி...

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரயில் நிலையத்தில் தேங்கி நிற்கும் நெல் மூட்டைகள்

By Ranjith
06 Nov 2025

புதுக்கோட்டை, நவ.7: அரசு சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச்செல்ல லாரி இல்லாததால் தேங்கி நிற்கும் 2000 மெ.டன் நெல் மூட்டைகள் கூடுதல் வாகனம் இயக்க வலியுறுத்தியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டை ரயில்வே நிலையத்திற்கு 42 பெட்டிகளில் வந்த 2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை அரசு சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பும் பணி நடைபெற்று வரக்கூடிய நிலையில் நெல்...

காதார மையம் சார்பில் மழைக்கால மருத்துவ முகாம்

By Ranjith
06 Nov 2025

இலுப்பூர்,நவ.7: அன்னவாசல் பகுதியில் கடந்த வாரத்தில் அதிக மழை பெய்து வந்ததையடுத்து, பரம்பூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை சார்பில் குடிமியாண்மலை, உருவம்பட்டி, இச்சிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுவினர் பரம்பூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பேச்சியம்மாள் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிசிச்சை அளித்தனர். இதில் கலந்துகொண்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து...

பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா

By Ranjith
05 Nov 2025

பொன்னமராவதி, நவ.6: பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் வழிபாட்டில் கலந்து கொண்டனர். பொன்னமராவதி பகுதி சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா நடந்தது.  ஐப்பசி மாதப்பௌர்ணமியை முன்னிட்டு பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயில் முன்பு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதன்...

புதுகை, தஞ்சைக்கு சீருடை பணியாளர் தேர்வாளர்களுக்கு சிறப்பு பேருந்து இயக்க கோரிக்கை

By Ranjith
05 Nov 2025

கந்தர்வகோட்டை, நவ.6: கந்தர்வகோட்டையில் இருந்து புதுக்கோட்டைக்கு சீருடை பணியாளர் தேர்வாளர்களுக்கு சிறப்பு பேருந்து இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தை சார்ந்த மட்டாங்கால், சிவந்தான்பட்டி, வேம்பன்பட்டி, கல்லாக்கோட்டை, காட்டு நாவல்,துலுக்கன்பட்டி, சுந்தம்பட்டி, நெப்புகை, வேலாடிப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, மெய்குடிப்பட்டி, புதுநகர், கொத்தகம், வடுகப்பட்டி, கோமாபுரம் மற்றும் வளவம்பட்டி,ஆதனக்கோட்டை போன்ற கிராமபுரத்தில் உள்ள படிந்த...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 9000 ஹெக்டேர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி

By Ranjith
05 Nov 2025

புதுக்கோட்டை, நவ.6: புதுக்கோட்டை மாவட்டத்தில் 9000 ஹெக்டேர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி பணி மும்முரம் தரமான விதை விற்பனை செய்ய விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தல். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு ரபி பருவத்தில் சுமார் 9000 ஹெக்டேர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்ய விவசாயிகள், தற்போது பெய்துவரும் பருவமழையினை பயன்படுத்தி, நிலத்தினை தயார்படுத்தும் பணிகளில்...

கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் சாய்வு பாதை அமைக்க வேண்டும்

By Ranjith
05 Nov 2025

கந்தர்வகோட்டை , நவ. 5: கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் சாய்வு பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.வட்டாச்சியர் அலுவலகம் செல்ல பேருந்து வசதி இல்லாததால் பணம் செலவு செய்து கட்டண ஆட்டோகளில் பொதுமக்களும் பணியாளர்களும் செல்ல வேண்டிய சூழ்நிலையில்...

திமுக வாக்குச்சாவடி முகவர் ஆலோசனை கூட்டம்

By Ranjith
05 Nov 2025

பொன்னமராவதி, நவ. 5: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பொன்னமராவதி தெற்கு ஒன்றியச்செயலாளர் அடைக்கலமணி தலைமை வகித்து என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்பது குறித்தும் நேற்று முதல் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் வாக்காளர் சிறப்பு திட்ட முகாமில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆற்றவேண்டிய பணிகள்...