கண்டியாநத்தம் கிராமத்தில் இயற்கை எரிவாயு பாதுகாப்பு, விழிப்புணர்வு முகாம்
பொன்னமராவதி, ஜூலை 6: பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் எரிவாயு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் இண்டேன் எரிவாயு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு முன்னாள் ஊராட்சித்தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். பொன்னமராவதி மலர் இண்டேன் கேஸ் நிர்வாகி சதாசிவம்...
திருமயம் குறுவட்ட கோகோ போட்டியில் வார்பட்டு அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்
பொன்னமராவதி, ஜூலை 6: பொன்னமராவதி அடுத்த வார்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் திருமயம் குறுவட்ட அளவிலான கோகோ போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் மொகைதீன் அப்துல் காதர் அரசு மேல்நிலைப்பள்ளியில் திருமயம் குருவட்ட அளவிலான கோ-கோ போட்டி நடைபெற்றது. 14 வயதிற்கு உட்பட்ட மாணவிகள்...
கறம்பக்குடி பகுதியில் அக்னி ஆற்றில் மணல் திருடிய 9 மாட்டு வண்டிகள் பறிமுதல்
கறம்பக்குடி, ஜூலை 5: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அடுத்த திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் அனுமதி இன்றி மணல் அள்ளப்படுவதாக கறம்பக்குடி காவல்துறைக்கு அப்பகுதியினர் தகவல்அளித்தனர்.தகவல் அறந்து வந்த எஸ்ஐ விக்னேஷ் தலைமையில் காவல்துறையினர், அனுமதி இன்றி திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்த போது காவல்துறையினர் 9 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். ...
ஆலங்குடி அரசு கல்லூரியில் மனித உரிமை, கேலிவதை, போக்சோ விழிப்புணர்வு
புதுக்கோட்டை, ஜூலை 5: ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான ஆறு நாட்கள் புத்தொளிப் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பயிற்சியில், ஐந்தாம் நாளில் மாணவ மாணவிகளுக்கு போக்சோ, மனித உரிமை மற்றும் கேலிவதை போன்ற சட்ட விழிப்புணர்வு வழங்கப்பட்டது. தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி மாணாக்கர்களுக்கான புத்தொளிப்பயிற்சி கடந்த ஐந்து நாட்களாக...
அதிமுக ஒன்றிய செயலாளர் உட்பட 9 பேர் மீது வழக்கு
புதுக்கோட்டை, ஜூலை 5: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே திமுக நிர்வாகி மகனைத் தாக்கியதாக அதிமுக ஒன்றிய செயலாளர் உட்பட 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அடுத்த கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் வளர்மதி, திமுக வழக்கறிஞர் அணி தெற்கு மாவட்ட செயலாளர். இவரது மகன் வெங்கட் திருமாறன்...
பொன்னமராவதி சௌடாம்பிகை அம்மன் கோயிலில் மண்டல பூஜை
பொன்னமராவதி, ஜூலை 4: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் கடந்த 12ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து மறுநாள் முதல் தினசரி சுவாமி சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது. நேற்று 22வது நாளாக இந்த பூஜை நடைபெற்றது. இந்த பூஜைகள் 48ம்...
ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் வீடு, வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை இயக்கம் துவக்கம்
பொன்னமராவதி, ஜூலை 4: பொன்னமராவதியில் ஓரணியில் தமிழ்நாடு வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்திரவின்படி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர், தமிழக இயற்கைவளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை இயக்கம் வீடு வீடாக சென்று மாவட்டம் முழுவதும்...
விராலிமலை மத்திய ஒன்றிய திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை
விராலிமலை, ஜூலை 4: விராலிமலை மத்திய ஒன்றிய திமுக சார்பில் விராலிமலை ரத்னா கார்டன் குடியிருப்பு பகுதிகளுக்கு நேற்று வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர்களை மத்திய ஒன்றிய செயலாளர் அய்யப்பன் தலைமையில் புதிய உறுப்பினர்களை இணைத்தனர் திராவிட முன்னேற்றக் கழக அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் எடுத்துரைத்து 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை...
கோட்டைப்பட்டினத்தில் மீன் பிடித்த வாலிபர் கடலில் விழுந்து பலி
அறந்தாங்கி, ஜுலை. 2: கோட்டைப்பட்டினத்தில் கடலில் விசைபடகில் மீன் வலை இழுக்கும் போது கயிறு அறுந்து கடலில் தவறிவிழுந்து மீனவர் இறந்தார். புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிம் ராம் நகரை சேர்ந்தவர் பாண்டி மகன் மந்திரமூர்த்தி(29). இவர், நேற்று முன்தினம் 14 நாட்டிக்கல் மைல் தொலைவில் சக மீனவர்களுடன் விசைப் படகில் மீன் பிடித்துள்ளனர். அப்போது,...