கந்தர்வகோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு உலக மண் தின விழிப்புணர்வு
கந்தர்வகோட்டை,டிச.6: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக மண் தினம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலக மண் வள தின விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் விஜயலெட்சுமி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பேசிய தலைமை...
புதுக்கோட்டையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஸ்டார், குடில்கள் விற்பனை தொடங்கியது
புதுக்கோட்டை,டிச.6: புதுக்கோட்டையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஸ்டார் விற்பனை, குடில்கள் விற்பனை தொடங்கியுள்ளது. உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்ற மிக முக்கியமான, முதன்மையான திருவிழா கிறிஸ்மஸ் பண்டிகையாகும். இயேசு கிறிஸ்து உலகில் அவதரித்தத் திருநாளைக் கொண்டாடும் இந்தப் பண்டிகையை முன்னிட்டு, வருகிற 25ம் தேதி கிறிஸ்தவர்கள் கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் அடையாளமாக, கோயிலில் கிறிஸ்மஸ்...
பட்டமரத்தான் கோயில் சிறப்பு வழிபாடு
பொன்னமராவதி,டிச.6: பட்டமரத்தான் கோயில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்று வருவது வழக்கம் அதன் படி நேற்று வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பல்வேறு அபிசேக ஆராதனை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதன் பின்னர் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல பொன்னமராவதி சிவன் கோயில், நகர சிவன் கோயில், பாலமுருகன் கோயில், அழகப்பெருமாள்...
பொன்னமராவதி அருகே ஏம்பல்பட்டி சாலையை சீரமைக்க கோரிக்கை
பொன்னமராவதி,டிச.5: பொன்னமராவதி அருகே ஏம்பல்பட்டி சாலையில் ஏற்பட்டுள்ள குண்டும் குழிகளை சீர் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஆலவயல்-புலவர்ணாகுடி சாலையில் இருந்து ஏம்பல்பட்டி தார் சாலை செல்கின்றது. இந்த சாலையில் பல இடங்களில் தார் பெயர்ந்து பெரும் குழிகளாக கிடக்கின்றது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும்...
கந்தர்வகோட்டை அருகில் கடன் தொல்லையால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை
கந்தர்வகோட்டை, டிச.5: கந்தர்வகோட்டை அருகில் கடன் தொல்லையால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள மங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ஆனந்த பிரகாஷ் (46), இவர் கந்தர்வகோட்டை கடைவீதியில் வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்திற்கு தேவையான விற்பனை பொருட்களை வாங்குவதற்காகவும், தனது...
2025 பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை, டிச.5: புதுக்கோடை மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அருணா அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்முயற்சியுடன் பங்கேற்று சிறந்த பங்களிப்பைச் செய்யும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ரூ.ஒரு கோடி செலவில் “பசுமை சாம்பியன் விருது” வழங்கப்படும் என்ற அறிவிப்பை மாவட்ட கலெக்டர்...
கிருஷ்ணாஜிபட்டினம் பொதுமயான கரைக்குச் செல்ல பாலம் அமைக்க கோரி தமிழர் தேசம் கட்சி ஆர்ப்பாட்டம்
அறந்தாங்கி, டிச. 3: மணமேல்குடி அருகே கிருஷ்ணாஜிபட்டினத்தில் பொதுமயான கரைக்குச் செல்ல பாலம் அமைக்க கோரி தமிழர் தேசம் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணாஜிபட்டினம் ஊராட்சியில் உள்ள அண்ணாநகர், 118 சுப்பிரமணியபுரம், கோவில்வயல் ஆகிய பகுதிகளில் உள்ளவர்களுக்கு பொதுமயானம் உள்ளது. இந்த மயானத்திற்கு செல்ல வேண்டும் என்றால்...
கறம்பக்குடி ஐயப்பன் கோயிலில் 26ம் ஆண்டு குத்துவிளக்கு பூஜை
கறம்பக்குடி, டிச. 3: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கேரளமாநிலம் சபரிமலை ஐயப்பன்கோயிலுக்கு கேரளா மட்டுமல்லாது தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட நாடு முழுவதுமுள்ள கோடிக் கணக்கான மக்கள் கார்த்திகை மாதம் முதல் தை மாதம் வரை மாலை அணிந்து,...
புதுக்கோட்டை சிபிஎம் மாவட்டக்குழு சார்பில் அரசியல் விளக்க கருத்தரங்கம்
புதுக்கோட்டை, டிச.3: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் அரசியல் விளக்கக் கருத்தரங்கம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. ‘நவபாசிசம் ஒழியட்டும். நம் தேசம் சிவக்கட்டும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். கருத்தரங்கில், கலந்து கொண்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் .பேபி, மாநில...