அரியலூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 334 மனுக்கள் வரப்பெற்றன

அரியலூர், நவ. 11: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தலைமையில் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 334 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் மூலம்...

பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத்தேர்வுக்கு பயிற்சி

By Suresh
11 Nov 2025

பெரம்பலூர், நவ.11: பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளன என கலெக்டர் மிருணாளினி தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு...

பெரியம்மா பாளையத்தில் டிரான்ஸ்பார்மர் பாகங்கள் திருட்டால் வேளாண் பயிர்கள் பாதிப்பு

By Suresh
11 Nov 2025

பெரம்பலூர், நவ.11: பெரியம்மா பாளையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் பாகங்கள் திருடுபோய்விட்டதால், மின்விநியோம் இல்லாமல் வேளாண்பயிர்கள் காய்ந்து வருவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று காலை, பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டக் கலெக்டர்...

பெரம்பலூரில் பாஜ மகளிரணி ஆர்ப்பாட்டம்

By Ranjith
06 Nov 2025

பெரம்பலூர்,நவ.7: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜ மாவட்ட மகளிரணி தலைவர் விஜயா தலைமை வகித்தார். மாவட்ட பொதுசெயலாளர்கள் வரதராஜ், உமாஹைமாவதி, மாவட்ட துணைத் தலைவர் தேவேந்திரபாலாஜி, மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜக மாவட்ட தலைவர் முத்தமிழ்செல்வன், மாவட்ட போராட்டக் குழு தலைவர் வேலுசாமி உட்பட பலர் பேசினர்....

பெரம்பலூரில் 72வது கூட்டுறவு வாரவிழா குழு கூட்டம்

By Ranjith
06 Nov 2025

பெரம்பலூர், நவ.7: பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் 5.11.2025 அன்று 72வது அனைத்து இந்திய கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர், வாரவிழா குழுத்தலைவர் க.பாண்டியன் தலைமையில் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 14.11.2025 முதல் 20.11.2025 வரை கூட்டுறவு வாரவிழா கொண்டாடுவதை முன்னிட்டு கூட்டுறவு சங்கங்களில் கொடியேற்றுதல், மரக்கன்று நடுதல், ரத்ததான முகாம்,...

பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் அலுவலர் நியமனம்

By Ranjith
06 Nov 2025

பெரம்பலூர்,நவ.7: பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலராக கண்ணன் நியமனம். தமிழக அளவில் நேற்று முன் தினம் மாலை தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் முருகானந்தம் பிறப்பித்த உத்தரவில், மாநில அளவில் மாவட்டவருவாய் அலுவலர்கள் நிலையிலான 26பேர்களுக்கு பணிமாறுதல் உத்தரவுக்கான ஆணையினை பிறப்பித்து இருந்தார். இதன்படி பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலராக கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணி...

விக்கிரமங்கலத்தில் மது பாட்டில்கள் விற்றவர் கைது

By Ranjith
05 Nov 2025

தா.பழூர் நவ. 6: முத்துவாஞ்சேரி பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி விற்றரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான காவல்துறையினர் முத்துவாஞ்சேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் அரசு அனுமதி இன்றி பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்...

வேப்பூரில் சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வு ஆலோசனை கூட்டம்

By Ranjith
05 Nov 2025

குன்னம், நவ. 6: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் வேப்பூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வு பற்றிய ஆலோசனை கூட்டம் வேப்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வேப்பூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகு நீலமேகம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன்...

சிறுவாச்சூர் கிராமத்தில் குட்கா விற்றவர் கைது: 106 கிலோ குட்கா பறிமுதல்

By Ranjith
05 Nov 2025

பெரம்பலூர்,நவ.6: சிறுவாச்சூர் கிராமத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட 106 கிலோ குட்காபொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று (5ஆம்தேதி) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள...

லப்பைகுடிகாடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்

By Ranjith
05 Nov 2025

குன்னம், நவ. 5: மங்களமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் என உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்தார். மங்களமேடு துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி, சின்னாறு, எறையூர், வாலிகண்டபுரம், மேட்டுபாளையம், க.புதூர், அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர்,...