கல்லை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சர்வதேச இயற்கை பேரிடர் தினம்

குன்னம்,அக்.17: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கல்லை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஜே.ஆர்.சி சார்பில் சர்வதேச இயற்கை பேரிடர் குறைப்பு தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர்(பொ)சி. மருதமுத்து அனைவரையும் வரவேற்று பேசினார். ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் ஜே.ஆர்.சி கவுன்சிலர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவில் வேப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையை சார்ந்த பால்துரை...

மாணவர்கள் பிறந்த நாளில் மரக்கன்று நட்டு வளர்க்க வேண்டும்

By Ranjith
16 Oct 2025

ஜெயங்கொண்டம் அக்.17: மாணவிகள் ஒவ்வொருவரும் தன் பிறந்த நாளில் ஒரு மரக்கன்று நட்டு வளர்க்க வேண்டும் உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்தல். உடையார் பாளையம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் தமிழ்நாடு கால நிலை மாற்ற இயக்கத்தின் பசுமைப்பள்ளி திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் விழிப்பணர்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் முல்லைக்கொடி...

அனுக்கூர் பெரிய ஏரியில் பனை விதை நடும் விழா

By Ranjith
16 Oct 2025

பெரம்பலூர்,அக்.17: அனுக்கூர் பெரிய ஏரியில், பெரம்பலூர் வனக் கோட்டம் சார்பாக மாபெரும் பனை விதை நடும் விழா நடை பெற்றது. மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் பங்கேற்பு. தமிழ்நாடு முழுவதும் 6கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி திட்டத்தித்தின் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அனுக்கூர் கிராமத்திலுள்ள பெரிய ஏரியில், பெரம்பலூர்...

பெண்களை தாக்கிய விவசாயி கைது

By Francis
13 Oct 2025

  தா.பழூர், அக்.14: அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நாகமங்கலம் கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன்(38). இவரது ஆடுகள், அருகேயுள்ள செட்டித்திருக்கோணம் புதுத் தெருவை சேர்ந்தவர் அழகுதுரை(33 ) என்பவரது வயலில் மேய்ந்ததுள்ளது. இதுதொடர்பாக, இரு குடும்பத்திற்கு இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சௌந்தர்ராஜனின் வீட்டிற்கு அழகுதுரை சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த சௌந்தர்ராஜனின்...

தனியார் டயர் தொழிற்சாலை மீது நடவடிக்கை சிஐடியு மனு

By Francis
13 Oct 2025

  பெரம்பலூர், அக்.14: பெரம்பலூர் மாவட்டக் கலெக்டரிடம் சிஐடியு சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இதில், சிஐடியு சார்பில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் அருகே தனியார் டயர் தொழிற்சாலையில் நடைபெறும் சட்டவிரோத உற்பத்திக்கு எதிராக...

மக்கள் குறைதீர்நாள் கூட்டம்

By Francis
13 Oct 2025

  அரியலூர், அக். 14: அரியலூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 310 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை,...

வயலப்பாடியில் விசிக சார்பில் மாணவர்களுக்கு நோட்டு, பேனா வழங்கல்

By Ranjith
12 Oct 2025

குன்னம், அக். 13: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வயலப்பாடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு பேனா வழங்கப்பட்டன. வயலப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா ஆகியவற்றை வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் ஆகியோர் வழங்கினார்கள்.நிகழ்ச்சியில், பழனி முத்து, தங்கராசு, முருகேசன்,...

தேனூர், கீழப்பெரம்பலூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

By Ranjith
12 Oct 2025

குன்னம், அக். 13: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட, தேனூர், கீழப்பெரம்பலூர் துணைமின் நிலையங்களில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்திரப் பராமரி ப்பு பணிகள் காரணமாக தேனூர், கீழப்பெரம்பலூர் துணைமின்நிலையங்களுக்குட்பட்ட புதுவேட்டக்குடி, காடூர், நமங்குளம், கீழப்பெரம்பலூர், கோவில்பாளையம், தேனூர், துங்கபுரம், குழுமூர், வயலப்பாடி, வயலூர், காரைப்பாடி, என்.குடிக்காடு, பழமலைநாதபுரம், கருப்பட்டான்குறிச்சி, வீரமநல்லூர், வேள்விமங்கலம், வெள்ளூர்,...

பெரம்பலூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

By Ranjith
12 Oct 2025

பெரம்பலூர், அக்.13: பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (14ம்தேதி) செவ்வாய்க் கிழமை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.இதுகுறித்து, மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர்களின் குறைகளைத் தீர்க்கும் பொருட்டு, குறைதீர் நாள் கூட்டம் பெரம்பலூர் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (14ம்தேதி) காலை 11...

பெரம்பலூரில் கூட்டுறவுப்பணிக்கு எழுத்துத்தேர்வு 465 பேர் ஏழுதினர்

By Karthik Yash
11 Oct 2025

பெரம்பலூர், அக். 12: பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு பணிக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவன உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் மண்டலத்தில் கூட்டுறவு சங்காங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 39 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத்தேர்விற்கு 551 பேர்...