அயினாபுரம் கிராமத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலருக்கு பாராட்டு

பாடாலூர், நவ.22: குன்னம் சட்டமன்ற தொகுதி, அயினாபுரம் வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணியில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள், பணியாளர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். பெரம்பலூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 2 லட்சத்து 36 ஆயிரம் படிவங்கள் திரும்ப பெறப்பட்டு செயலியில் பதிவேற்றம்...

எம்ஆர்பி தேர்வாணையத்தால் பணியமர்த்தப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

By Ranjith
20 Nov 2025

பெரம்பலூர்,நவ.21: பெரம்பலூரில் எம்ஆர்பி தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டதமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக நேற்று 20ம் தேதி வியாழக்கிழமை மாலை கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உச்ச நீதிமன்ற...

ஆட்டோ ஓட்டுனர்கள் கைதை கண்டித்து பெரம்பலூரில் சிஐடியு தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

By Ranjith
20 Nov 2025

பெரம்பலூர்,நவ.21: பெரம்பலூரில் சிஐடியுஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் புது பஸ்டாண்டு வளாகத்தில் நேற்று (20ம் தேதி) வியாழக்கிழமை மாலை பெரம்பலூர் மாவட்ட சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு ஆட்டோ தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் போராட்டம் நடத்திய திருவாரூர் மாவட்ட சிஐடியு தலைவர்...

வருகிற 24ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

By Ranjith
20 Nov 2025

பெரம்பலூர்,நவ.21: பெரம்பலூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வருகிற 24ம் தேதி நடைபெற உள்ளது- மாவட்ட கலெக்டர் மிருணாளினி தகவல். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக, நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்,...

பாடாலூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

By Ranjith
18 Nov 2025

பாடாலூர், நவ.19: பாடாலூர் அருகே துக்க வீட்டிற்கு பந்தல் அமைக்கச் சென்றவர் மின்சாரம் தாக்கி இறந்தார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் மகேஷ்குமார் (50). இவர், பந்தல், மற்றும் ஒலி ஒளி அமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், அதே பகுதியில் பொம்மாயி என்பவர் துக்க நிகழ்ச்சிக்கு பந்தல்...

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் சர்வேயர்கள் வேலைநிறுத்த போராட்டம்

By Ranjith
18 Nov 2025

பெரம்பலூர், நவ.19: களப் பணியாளர்களின் பணிச்சுமையை போக்கிட வலியுறுத்தி நேற்று முதல் சர்வேயர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தினர் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நகராட்சிகளுக்கு நகர சார் ஆய்வாளர் பணியிடங்களை வழங்க வேண்டும். களப் பணியாளர்களின் பணிச் சுமையை போக்கிட பணிகளை முறைப்படுத்திட வேண்டும், தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை...

பெரம்பலூர் காந்தி சிலை அருகே கடை வைக்க அனுமதி கேட்டு சிஐடியு ஆர்ப்பாட்டம்

By Ranjith
18 Nov 2025

பெரம்பலூர்,நவ.19:பெரம்பலூர் நகராட்சி, பழைய பஸ்டாண்டு காந்தி சிலை அருகே, பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட பகுதியில், சாலையோரக் கடைகள் வைத்துநடத்த அனுமதி கேட்டு சிஐடியு தொழிற்சங்கத்தினர் மற்றும் விற்பனை குழு உறுப்பினர்கள், பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினியை நேரில் சந்தித்து...

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் சோமவார சிறப்பு வழிபாடு

By Neethimaan
17 Nov 2025

  ஜெயங்கொண்டம், நவ.18: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் முதல் சோமவாரம், பிரதோஷத்தையொட்டி நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதில், விசேஷமாக கோவில் வளாகத்தில் பக்தர்கள் குழுவினர் சார்பில் சிறுதானியங்களை கொண்டு சிவலிங்க வடிவத்தில் அமைத்து விளக்கேற்றி...

பெரம்பலூரில் சபரிமலை செல்ல ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கம்: அதிகாலை முதலே சரண கோஷத்துடன் வழிபாடு

By Neethimaan
17 Nov 2025

  பெரம்பலூர், நவ.18: கார்த்திகை முதல் தேதியை முன்னிட்டு சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் நேற்று பெண்கள், சிறுவர் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் மாலை அணிந்து மண்டல விரதத்தைத் தொடங்கினர். கேரளமாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்கான நடை நேற்று முதல் திறக்கப்பட்டது. இதையடுத்து, சபரிமலை சென்றுள்ள பக்தர்கள் பதினெட்டாம் படியேறி ஐயப்ப தரிசனத்தை...

சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

By Neethimaan
17 Nov 2025

    ஜெயங்கொண்டம், நவ.18: சம்பா நெல்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான தேதியை வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வேளாண் துறை சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: நடப்பாண்டு சம்பா நெல் பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 15ம் தேதி கடைசி என ஏற்கனவே...