பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்கள் 270 பேருக்கு விலையில்லா சைக்கிள்
பெரம்பலூர், நவ.25: பெரம்பலூர் மாவட்டத்தில் 46 பள்ளிகளைச் சேர்ந்த 4,530 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.18 கோடி மதிப்பிலான மிதிவண்டிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. பெரம்பலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் 2025-2026ஆம் ஆண்டிற்கான இலவச மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் 2025-2026 ஆம் நிதிஆண்டிற்கு அரசு மற்றும் அரசு...
சம்பா நெல் வயலில் உரம் தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்
தா.பழூர், நவ. 22: அரியலூர் மாவட்டம், தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளான காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, இடங்கண்ணி, ஸ்ரீபுரந்தான், முத்துவாஞ்சேரி, கோடாலி கருப்பூர், குறிச்சி, குடிகாடு, அடிக்காமலை, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டருக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். பொன்னாற்று பாசனம் மூலம் தண்ணீர் கிடைக்கப்பெற்ற நிலையில் விவசாயிகள் சம்பா...
பெரம்பலூர் காந்தி சிலை பகுதியில் வியாபாரம் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்
பெரம்பலூர், நவ.22: பெரம்பலூரில் வியாபாரம் செய்த பகுதியை எந்தவித நியாயமான காரணங்களும் இல்லாமல் தடை செய்யப்பட்ட பகுதி என்று வரையறுத்ததை திரும்பப்பெற வலியுறுத்தி, சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர் சங்கம் சிஐடியு சார்பாக மனு கொடுக்கப்பட்டது. பெரம்பலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை அருகில் சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்து...
அயினாபுரம் கிராமத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலருக்கு பாராட்டு
பாடாலூர், நவ.22: குன்னம் சட்டமன்ற தொகுதி, அயினாபுரம் வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணியில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள், பணியாளர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். பெரம்பலூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 2 லட்சத்து 36 ஆயிரம் படிவங்கள் திரும்ப பெறப்பட்டு செயலியில் பதிவேற்றம்...
எம்ஆர்பி தேர்வாணையத்தால் பணியமர்த்தப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்,நவ.21: பெரம்பலூரில் எம்ஆர்பி தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டதமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக நேற்று 20ம் தேதி வியாழக்கிழமை மாலை கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உச்ச நீதிமன்ற...
ஆட்டோ ஓட்டுனர்கள் கைதை கண்டித்து பெரம்பலூரில் சிஐடியு தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்,நவ.21: பெரம்பலூரில் சிஐடியுஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் புது பஸ்டாண்டு வளாகத்தில் நேற்று (20ம் தேதி) வியாழக்கிழமை மாலை பெரம்பலூர் மாவட்ட சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு ஆட்டோ தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் போராட்டம் நடத்திய திருவாரூர் மாவட்ட சிஐடியு தலைவர்...
வருகிற 24ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
பெரம்பலூர்,நவ.21: பெரம்பலூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வருகிற 24ம் தேதி நடைபெற உள்ளது- மாவட்ட கலெக்டர் மிருணாளினி தகவல். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக, நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்,...
பாடாலூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
பாடாலூர், நவ.19: பாடாலூர் அருகே துக்க வீட்டிற்கு பந்தல் அமைக்கச் சென்றவர் மின்சாரம் தாக்கி இறந்தார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் மகேஷ்குமார் (50). இவர், பந்தல், மற்றும் ஒலி ஒளி அமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், அதே பகுதியில் பொம்மாயி என்பவர் துக்க நிகழ்ச்சிக்கு பந்தல்...
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் சர்வேயர்கள் வேலைநிறுத்த போராட்டம்
பெரம்பலூர், நவ.19: களப் பணியாளர்களின் பணிச்சுமையை போக்கிட வலியுறுத்தி நேற்று முதல் சர்வேயர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தினர் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நகராட்சிகளுக்கு நகர சார் ஆய்வாளர் பணியிடங்களை வழங்க வேண்டும். களப் பணியாளர்களின் பணிச் சுமையை போக்கிட பணிகளை முறைப்படுத்திட வேண்டும், தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை...