மாவட்ட காவல்துறை சார்பில் பள்ளி, வங்கிகளில் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு
ஜெயங்கொண்டம், நவ.27: மாவட்ட காவல்துறை சார்பில் பள்ளி, வங்கிகளில் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாமில் மாணவர், பொதுமக்கள் பங்கேற்றனர்.அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, நேற்று ஆர்.எஸ்.மாத்தூர் ஸ்டேட் பேங்க், அசவீரன்குடிக்காடு கிராமம், இடையக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே, இணைய வழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு...
ஊரக வேலை வாய்ப்பு மையத்தில் பெண்களுக்கான ஆரி எம்பிராய்டரி இலவச பயிற்சி: தொழில் தொடங்க கடன் வழங்கல்
பெரம்பலூர், நவ.27: ஊரக வேலை வாய்ப்பு மையத்தில் பெண்களுக்கான ஆரி எம்பிராய்டரி இலவச பயிற்சி தொழில் தொடங்க வங்கிக் கடன் அளிக்கப்படுவதாக மைய இயக்குனர் அறிவித்துள்ளார். ஐஓபி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் முருகையன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :பெரம்பலூர் நகரில், எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ்...
பெரம்பலூரில் வரும் 29ம் தேதி நடைபெறும் கலைப்போட்டிகளில் ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம்
பெரம்பலூர், நவ.26: பெரம்பலூர் மாவட்ட கலை பண்பாட்டுத் துறையால் வரும் 29ஆம் தேதி திருச்சிமண்டல கலை பண்பாட்டு மையம் மூலம் பெரம்பலூரில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறியதாவது: திருச்சிராப்பள்ளி மண்டல கலை பண்பாட்டு துறையின் சார்பாக, பெரம்பலூர் சவகர்...
எசனை கிராமத்தில் பொதுப்பாதை சேதமடைவதால் லாரி சிறைபிடிப்பு
பெரம்பலூர், நவ. 26: பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் பொதுப்பாதை சேதமடைந்து வருவதால் பொதுமக்கள் சிறைபிடித்த கிரஷர் லாரிகளை பேச்சு வார்த்தைக்குப் பிறகு விடுவித்தனர். பெரம்பலூர் அருகேயுள்ள எசனை கிராமத்தின் தெற்கேயும் கல் குவாரிகளும், கிரஷர்களும் இயங்கி வருகின்றன. இதனால், கருங்கல், ஜல்லி, சிப்ஸ் மற்றும் எம்சாண்டுகளை ஏற்றிக் கொண்டு தினமும் ஊருக்குள் சென்று வரும்...
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் புதிய உணர்வு-மாற்றத்திற்கான முன்முயற்சி 4.0 பேரணி
பெரம்பலூர், நவ. 26: பெரம்பலூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தையொட்டி \புதிய உணர்வு - மாற்றத்திற்கான முன்முயற்சி 4.0 என்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தில், \”புதிய உணர்வு...
அரியலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண வேண்டும்
அரியலூர், நவ.25: அரியலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு விரைந்து தீர்வுகாண வேண்டும் என்று எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறுபான்மையினர் சிறப்புக்குழு ஆய்வுக்கூட்டம் திருச்சி கிழக்கு எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தலைமையில், கலெக்டர் ரத்தினசாமி...
பெரம்பலூரில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி: கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்திய மாணவர்கள்
பெரம்பலூர், நவ.25: பெரம்பலூரில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக மாவட்ட அளவிலான தென்னிந்திய அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக, மாவட்ட அளவிலான தென்னிந்திய அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை) செல்வக்குமார், (தனியார் பள்ளிகள்) லதா, பெரம்பலூர் அரசு...
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்கள் 270 பேருக்கு விலையில்லா சைக்கிள்
பெரம்பலூர், நவ.25: பெரம்பலூர் மாவட்டத்தில் 46 பள்ளிகளைச் சேர்ந்த 4,530 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.18 கோடி மதிப்பிலான மிதிவண்டிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. பெரம்பலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் 2025-2026ஆம் ஆண்டிற்கான இலவச மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் 2025-2026 ஆம் நிதிஆண்டிற்கு அரசு மற்றும் அரசு...
சம்பா நெல் வயலில் உரம் தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்
தா.பழூர், நவ. 22: அரியலூர் மாவட்டம், தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளான காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, இடங்கண்ணி, ஸ்ரீபுரந்தான், முத்துவாஞ்சேரி, கோடாலி கருப்பூர், குறிச்சி, குடிகாடு, அடிக்காமலை, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டருக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். பொன்னாற்று பாசனம் மூலம் தண்ணீர் கிடைக்கப்பெற்ற நிலையில் விவசாயிகள் சம்பா...